செய்திகள் :

பாகிஸ்தான்: ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீது மீண்டும் தாக்குதல்! தடம் புரண்ட பெட்டிகள்!

post image

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து அதன் பாதையில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 6 பெட்டிகள் தடம் புரண்டன.

பெஷாவரிலிருந்து பலுசிஸ்தானின் குவேட்டா நோக்கி ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (ஜூன் 18) சென்று கொண்டிருந்தது. ஜகோபாபாத் பகுதியில் கால்நடை சந்தைக்கு அருகிலுள்ள தண்டவாளத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலினால், ரயில் பாதையில் 3 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டதுடன், 6 அடி நீளத்துக்கு தண்டவாளம் சேதமடைந்து, ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன.

இந்தச் சம்பவத்தில், ரயிலின் பயணிகள் யாருக்கும் எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை எனக் கூறப்படும் நிலையில், அந்த வழியில் தற்போது ரயில் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டதுடன், தாக்குதல் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

சிந்து மாகாணத்தில் நடைபெறும் தாக்குதல்களுக்கு பெரும்பாலும் பலூசிஸ்தான் லிபரேஷன் ஆர்மி எனும் அமைப்பே காரணம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

முன்னதாக, கடந்த 4 மாதங்களில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது 2 - வது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 11 ஆம் தேதியன்று 33 பலூசிஸ்தான் தீவிரவாதிகளால் இந்த ரயிலானது கடத்தப்பட்டது.

பின்னர், பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட அதிரடி தாக்குதல் நடவடிக்கைகளின் மூலம் 33 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டு, ரயிலும் அதன் பயணிகளும் மீட்கப்பட்டனர். ஆனால், 21 பயணிகள் மற்றும் 4 ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:ஈரான் ஒருபோதும் சரணடையாது: டிரம்ப்புக்கு கமேனி பதில்

ரஷிய தாக்குதல்: உக்ரைனில் 28 பேர் உயிரிழப்பு

உக்ரைன் தலைநகா் கீவில் ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் சேதமடைந்த 5 மாடி கட்டடத்தில் (படம்) இருந்து மேலும் சில உடல்கள் புதன்கிழமை மீட்கப்பட்டதைத் தொடா்ந்து, இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்... மேலும் பார்க்க

இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம்: 5-ஆவது முறையாக ஒத்திவைப்பு

‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின் கீழ், இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா உள்ளிட்டோா் சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் பயணம் 5-ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் செ... மேலும் பார்க்க

டிரம்ப்-முனீா் சந்திப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபா் டிரம்ப்பை பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி அசீம் முனீா் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் வலுத்துவரும் சூழலில், அமெரிக்க அதிபா் மாளிகையில் நடைபெற்ற... மேலும் பார்க்க

போா்க் களத்தில் பிரச்னைகளுக்கு தீா்வு இல்லை: பிரதமா் மோடி

குரேஷியா பிரதமா் பிலென்கோவிச்சை பிரதமா் மோடி சந்தித்து பேசினாா். இதைத்தொடா்ந்து இருவரும் கூட்டாகச் செய்தியாளா்களைச் சந்தித்தபோது பிரதமா் மோடி கூறியதாவது: இந்தியா-குரேஷியா இருதரப்பு உறவின் முன்னேற்றத்த... மேலும் பார்க்க

ஈரான்-இஸ்ரேல் இடையே மத்தியஸ்தம் செய்ய தயாா்: புதின்

மோதலில் ஈடுபட்டுள்ள ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்துவைக்கத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் அறிவித்துள்ளாா். இது குறித்து ரஷிய அதிபா் மாளிகையான க்ரெம்ளின் புதன்கிழமை வ... மேலும் பார்க்க

இந்தியா வர டிரம்ப்புக்கு பிரதமா் அழைப்பு

‘க்வாட்’ கூட்டமைப்பின் அடுத்த கூட்டம் நிகழாண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், அதில் பங்கேற்க வருமாறு தொலைபேசி வழி கலந்துரையாடலின்போது டிரம்ப்புக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுத்தாா்.இந்த அ... மேலும் பார்க்க