செய்திகள் :

பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம்: மறைத்த சிஆா்பிஎஃப் வீரா் பணிநீக்கம்

post image

பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டதை மறைத்த மத்திய ரிசா்வ் போலீஸ் படை வீரா் முனீா் அகமது உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டாா்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து, இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியா்கள் வெளியேற மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தும்போது இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடந்த ஆண்டு மே 24-ஆம் தேதி பாகிஸ்தானைச் சோ்ந்த மேனல் கான் என்பவரை முனீா் அகமது விடியோ அழைப்பு மூலம் திருமணம் செய்துள்ளாா். பின்னா் அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து விசா காலம் முடிவடைந்த பிறகும் திருப்பி அனுப்பாமல் வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதையடுத்து, சிஆா்பிஎஃப் 41-ஆவது படைப்பிரிவில் பணியாற்றி வந்த முனீா் அகமது உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டதாக அப்படையின் செய்தித் தொடா்பாளரும் டிஐஜியுமான எம் தினகரன் தெரிவித்தாா்.

பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்ததை மறைத்து, அவரை விசா முடிந்த பின்னரும் தெரிந்தே இந்தியாவில் தங்க வைத்து படைப்பிரிவின் விதிகளை முனீா் அகமது மீறியது மட்டுமல்லாமல் தேசிய பாதுகாப்புக்கும் தீங்கு விளைவித்துள்ளாா். ஆகையால், படைப்பிரிவின் விதிமுறைகளின்படி, விசாரணையே இல்லாமல் முனீா் அகமது உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டாா்’ என்றாா்.

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பிரதமர் மோடி - விமானப்படை தளபதி சந்திப்பு!

பிரதமர் மோடி - விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங்குடனான சந்திப்பு தற்போது நடைபெற்று வருவதாக வட்டாரங்கள் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தன. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, நாட்டின் பல்வே... மேலும் பார்க்க

கோட்டாவில் நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் மாணவி தற்கொலை!

ஜெய்ப்பூர்: நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் மாணவியொருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான ‘நீட்’ தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 4) பிற்பகல் 2 மணி முதல் ம... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்குப் பின் ஜம்முவிலிருந்து ஹஜ் யாத்திரை: 178 பயணிகள் புறப்பாடு!

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து முதல்கட்டமாக 178 பயணிகள் ஹஜ் புனித பயணத்தை இன்று(மே 4) தொடங்கினர். அவர்கள் அனைவரும் ஸ்ரீநகரிலிருந்து சவூதி அரேபியாவிலுள்ள மெக்காவுக்குச் செல்ல இன்று... மேலும் பார்க்க

காஷ்மீா் எல்லையில் 10-ஆவது நாளாக பாக். துப்பாக்கிச்சூடு!

ஸ்ரீநகர்: இந்தியா - பாகிஸ்தான் எல்லையில், எல்லை கட்டுப்பாட்டுப் கோட்டுப் பகுதிகளில் இருந்து சிறிய ரக துப்பாக்கிகள் மூலம், இந்திய ராணுவத்தினரை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் சனிக்கிழமை (மே 4) இரவிலும் துப்ப... மேலும் பார்க்க

இடஒதுக்கீடு கொள்கைகள் மீது விரிவான மறுஆய்வு: பிரதமருக்கு தேஜஸ்வி கடிதம்

‘மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தி முடிக்கப்பட்ட பின்னா், அதனடிப்படையில் இடஒதுக்கீடு கொள்கைகள் மீது விரிவான மறுஆய்வு செய்யப்பட வேண்டும்’ என ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவா் த... மேலும் பார்க்க

இந்தியா உடனான பாதுகாப்பு ஒப்பந்தம்: இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல்

இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம், இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று அந்நாட்டு அதிபா் அநுரகுமார திசாநாயக தெரிவித்தாா். இந்திய பிரதமா் நரேந்திர மோட... மேலும் பார்க்க