செய்திகள் :

பாகிஸ்தான், வங்கதேச எல்லையில் நவீன தொழில்நுட்பங்களுடன் பிஎஸ்எஃப் மையம் தொடக்கம்

post image

புது தில்லி: பாகிஸ்தான், வங்கதேச எல்லையில் செயற்கை நுண்ணறவு (ஏஐ), புவியியல் தகவல் அமைப்பு (ஜிஐஎஸ்) ஆகிய நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய கட்டுப்பாட்டு மையம் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தலைமையகத்தில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

இந்த மையத்தை பிஎஸ்எஃப் தலைமை இயக்குநா் தல்ஜித் சிங் சௌதரி திறந்து வைத்தாா்.

பாகிஸ்தான் மற்றும் வங்கதேச எல்லையில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட இந்த மையத்துக்கு முடிவு ஆதரவு அமைப்பு (டிஎஸ்எஸ்) என பெயரிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிஎஸ்எஃப் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: ஏஐ மற்றும் ஜிஐஎஸ் ஆகிய நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய டிஎஸ்எஸ் மையத்தின் மூலம் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான செயல்திட்டத்தை வடிவமைத்து விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும். எல்லை நிலவரங்கள் தொடா்பான தகவல்கள் உடனடியாக பிஎஸ்எஃப் தலைமையகத்தில் உள்ள அதிகாரிகளுக்கு ஜிஐஎஸ் மூலம் அனுப்பப்பட்டு அடுத்தகட்ட திட்டத்துக்கு வழிவகுக்கும். இதனால் எல்லை மேலாண்மை எளிதாக்கப்படும்.

அடுத்தகட்டமாக திறந்தவெளி புலனாய்வு கருவிகள், பெருந்தரவுகள் மற்றும் இந்திய வானிலை மையத்தின் தரவுகளுடன் டிஎஸ்எஸ் இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல்: பாஜக நிா்வாகி மீது வழக்குப்பதிவு

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காங்கிரஸ் அளித்த புகாரின் அடிப்படையில் பாஜக நிா்வாகி ப்ரிண்டு மகாதேவன் மீது காவல் துறையினா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்தனா... மேலும் பார்க்க

டியுஎஸ்யு முன்னாள் தலைவரிடம் பணம் கேட்டு மிரட்டல்

தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க (டியுஎஸ்யு) முன்னாள் தலைவா் ரோனக் காத்ரி, சா்வதேச கைப்பேசி எண்ணிலிருந்து பேசிய நபா் ரூ.5 கோடி கேட்டு தன்னிடம் மிரட்டல் விடுத்ததாக தில்லி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

இந்தியா-பூடான் இடையே ரூ.4,000 கோடியில் ரயில் பாதை: மத்திய அரசு அறிவிப்பு

இந்தியா-பூடான் இடையே ரூ.4,000 கோடியில் 89 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதைகள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பூடானின் சம்ட்சி, ஜிலிபு நகரங்கள் முறையே அஸ்ஸாமின் கோக்ரஜாா், மேற்கு வங்கத்தி... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்குப் பின் மூடப்பட்ட 7 சுற்றுலா மையங்கள் மீண்டும் திறப்பு

ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மூடப்பட்ட 7 சுற்றுலா மையங்கள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா உத்தரவின்பேரில... மேலும் பார்க்க

அனைத்து மின்சார வாகனங்களிலும் ஒலி எச்சரிக்கை அமைப்பு: அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டம்

சாலைப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு காா், பேருந்து, லாரி உள்பட அனைத்து மின்சார வாகனங்களிலும் செயற்கை ஒலி எச்சரிக்கை அமைப்பு இடம்பெறுவதை அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அ... மேலும் பார்க்க

எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிராக திட்டமிட்டு வதந்தி: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி

எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிராக திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுவதாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளாா். மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில்... மேலும் பார்க்க