செய்திகள் :

பாக்கு மட்டை பொருள்களுக்கு அமெரிக்கா தடை! முன்னணி ஏற்றுமதி நாடான இந்தியா பாதிப்பு!

post image

பாக்கு மட்டைத் தட்டுகளுக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. இதனால், இந்தியாவில் பாக்கு மட்டைத் தட்டு உற்பத்தி வெகுவாக பாதிக்கப்படுகிறது.

பாக்கு மட்டைத் தட்டுகள் சந்தையானது, உலகளவில் ஆண்டுதோறும் ரூ. 3,500 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் இந்தியாவின் பங்களிப்பு மட்டும் ரூ. 2,500 கோடியாகும். இந்தியாதான், உலகின் மிகப்பெரிய `பாக்கு தட்டுகளை’ ஏற்றுமதி செய்யும் நாடாகும்.

பிளாஸ்டிக் தட்டு, டம்ளர் ஆகிய பொருள்களுக்கு மாற்றாக பாக்கு மட்டைத் தட்டுகள், கோப்பைகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. இந்தத் தயாரிப்புகள், இந்தியாவில்தான் அதிகளவில் (சுமார் 600 அலகுகள்) உற்பத்தி செய்யப்படுகிறது. அவற்றிலும், தமிழ்நாடு மற்றும் தெற்கு கர்நாடகத்திலிருந்துதான் அதிகம் தயாரிக்கப்படுகின்றன.

இவை, அமெரிக்கா, ஜெர்மனி, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 2023, நவம்பர் முதல் 2024, அக்டோபர் வரையில் 325 வாடிக்கையாளர்களுக்கு 144 இந்திய ஏற்றுமதியாளர்கள் 3,407 (பாக்கு மட்டை பொருள்கள்) சரக்குகளை அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில், பாக்கு மட்டை தட்டுகளில் இயற்கையாக நஞ்சு உருவாவதாகக் கூறி, அப்பொருள்களுக்கு அமெரிக்க அரசு தடை செய்து உத்தரவிட்டது. இதனால், இந்தியாவில் பாக்கு இலை ஏற்றுமதி பெரும் பாதிப்புக்குள்ளாகிறது.

முன்னதாக, ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகளும் பாக்கு மட்டை பொருள்களுக்கு தடை விதித்தபோதும், இந்தியா பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆபரேஷன் சிந்தூா்: அரசிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை -மத்திய அமைச்சா் கஜேந்திர ஷெகாவத்

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடா்பாக, அரசிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை; நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எதிா்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து கேள்விகளுக்கும் மத்திய அரசு பதிலளிக்கத் தயாா் என்று மத்திய... மேலும் பார்க்க

உ.பி.யில் ரயிலைக் கவிழ்க்க சதி: ஓட்டுநா் சாமா்த்தியத்தால் விபத்து தவிா்ப்பு

உத்தர பிரதேசத்தில் தண்டவாளத்தின் குறுக்கே இரும்புக் கம்பி இருந்ததை ஓட்டுநா் முன்கூட்டியே கவனித்து அவசர கால ‘பிரேக்’கை பயன்படுத்தியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. இது தொடா்பாக ரயில்வே காவல் துறை... மேலும் பார்க்க

இடைத்தோ்தலுக்காக 20 ஆண்டுகளில் முதல்முறையாக வாக்காளா் பட்டியல் திருத்தம்

நாட்டில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடைபெற உள்ளதையொட்டி, வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. சுமாா் 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக இடைத்தோ்தலையொட்டி... மேலும் பார்க்க

2 ஆண்டு சிறைத் தண்டனை எதிரொலி: உ.பி. எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி தகுதிநீக்கம்

உத்தர பிரதேசத்தில் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசிய வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி, சட்டப்பேரவையில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக அரசு வட்டாரங்கள் ஞாயி... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ கட்டுரைப் போட்டி: பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு

பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய முப்படைகள் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை பற்றிய கட்டுரைப் போட்டி ஜூன் 1 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்று பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்று... மேலும் பார்க்க

மும்பையில் இந்திய ராணுவம் ஏற்பாட்டில் பாதுகாப்புப் பயிற்சி: படைகள் பங்கேற்பு

வளா்ந்துவரும் அச்சுறுத்தல்கள் மற்றும் தற்போதைய நெருக்கடியான பாதுகாப்பு சூழலுக்கு பதிலளிக்கும் வகையில், படைகளுக்கு இடையேயான பாதுகாப்புப் பயிற்சி மும்பையில் நடைபெற்ாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. ... மேலும் பார்க்க