செய்திகள் :

பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களுக்கு பாதுகாப்பில்லை! -மம்தா பானர்ஜி

post image

கொல்கத்தா: பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களுக்கு பாதுகாப்பில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களை பாஜக குறிவைத்து நடவடிக்கை எடுப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் புதன்கிழமை(ஜூலை 16) பேரணி நடத்தியுள்ளது.

அதில் பங்கேற்ற மம்தா பானர்ஜி, பாஜகவால் வாக்காளர் பட்டியலில் குளறுபடி ஏற்படுவதாகவும் பாஜக மீது கடுமையான விமர்சனங்களை சுமத்தியுள்ளார்.

கொல்கத்தாவில் புதன்கிழமை(ஜூலை 16) பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா, “வங்காள மக்கள் மீது மத்திய அரசும் பாஜகவும் வைத்திருக்கும் மனப்பான்மை வெட்கக்கேடானது. மன வருத்தத்தை தருகிறது.

மேற்கு வங்கத்திலிருந்து 22 லட்சம் பேர் இடம்பெயர்ந்து நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பணியாற்றுகிறார்கள். அவர்களிடம் உரிய சான்று, ஆவணங்கள் இருக்கின்றன. வங்காளம் பேசும் மக்கள், இடம்பெயர்ந்தவர்கள், ‘ரோஹிங்கியா முஸ்லிம்களா?’ இதனை உங்களால் நிரூபிக்க முடியுமா?அப்படியிருக்கும்போது அந்த மக்களை வங்கதேசத்துக்கு நாடு கடத்தும் உரிமை பாஜகவுக்கு எங்கிருந்து வருகிறது? மேற்கு வங்கம் இந்தியாவின் ஓர் அங்கமா? இல்லையா?

இதனையடுத்து, இன்றிலிருந்து, இனிமேல் வங்காள மொழியில் அதிகமாக பேச நினைக்கிறேன்.

பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள வங்காளம் பேசும் மக்கள் மீது சிறிய சந்தேகம் ஏற்பட்டாலும் அவர்களைச் சிறைப்பிடிக்க அறிவுறுத்தியிருப்பதாக எனக்கு தெரிய வந்துள்ளது. இதனைக் குறிப்பிட்டு அந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனை எதிர்த்து மேல் முறையீடு செய்வேன். வெறுப்புணர்வால் இந்த நடவடிக்கை பாஜகவால் எடுக்கப்படுகிறது.

பாஜக இது போன்ற கொள்கைகளை உடனடியாக நிறுத்தாவிட்டால், அதற்கு எப்படி முடிவு கட்ட வேண்டுமென்பது திரிணமூல் காங்கிரஸுக்கு தெரியும்.

வங்காளம் பேசும் மக்களை பாஜக சிறைப்பிடித்து முகாம்களுக்கு அனுப்பினால், தேர்தலில் மேற்கு வங்கம் அரசியல் ரீதியாக பாஜகவை சிறைப்பிடிக்கும்” என்றார்.

Mamata accuses BJP of targeting Bengalis across India

ஆடி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாதப் பூஜைக்காக இன்று (வியாழக்கிழமை) முதல் ஜூலை 21 வரை 5 நாள்கள் கோயிலின் நடை திறந்திருக்கும். கேரளத்தில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயில் ஒவ்வொரு தமிழ் மாதமும் 5 நாள்கள் கோ... மேலும் பார்க்க

அன்று நீட் தோல்வி.. இன்று ரோல்ஸ் ராய்ஸியில் ரூ.72 லட்சத்தில் வேலை! 20 வயதில் சாதித்த பெண்

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதே ஆன ரிதுபர்னா என்ற பொறியியல் மாணவி, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.72 லட்சத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.எந்தத் தோல்வியும் முடிவல்ல, வாய்ப்புகள் கொட்டிக்கிட... மேலும் பார்க்க

ம.பி.யில் வீட்டின் சுவர் இடிந்ததில் குழந்தை பலி, தந்தை காயம்!

மத்தியப் பிரதேசத்தின் கனமழை காரணமாக கட்டுமானத்தில் உள்ள வீடு இடிந்து விழுந்ததில் 2 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தின் தார் மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை பெய... மேலும் பார்க்க

சேர்ந்து வாழச் சொல்வதா? 16 ஆண்டு கால விவாகரத்து வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு!

புது தில்லி: 16 ஆண்டு காலமாக நடந்து வரும் விவாகரத்து வழக்கில், மணமுறிவு கோரும் தம்பதியை சேர்ந்து வாழக் கட்டாயப்படுத்தினால் மனவேதனைதான் ஏற்படும் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது.கணவர... மேலும் பார்க்க

ரயில்களில் முன்பதிவில்லா பயணச்சீட்டு வழங்குவதில் கட்டுப்பாடு!

ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணம் செய்வதற்கான டிக்கெட் வழங்குவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.மற்ற போக்குவரத்தை காட்டிலும் ரயிலில் கட்டணக் குறைவு என்பதால், பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்... மேலும் பார்க்க

பிகாரில் ஆகஸ்ட் முதல் 125 யூனிட் மின்சாரம் இலவசம்! நிதிஷ் குமார் அறிவிப்பு!

பிகாரில் ஆகஸ்ட் மாதம் முதல் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.பிகாரில் அடுத்த சில மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெ... மேலும் பார்க்க