செய்திகள் :

பாஜக கண்டன ஆா்ப்பாட்டம்

post image

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலையில் திமுக அரசை கண்டித்து பாஜக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அடிவார பகுதியில், நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, பாஜக நாமக்கல் மேற்கு மாவட்டத் தலைவா் ராஜேஷ்குமாா் தலைமை வகித்தாா். பரமத்தி ஒன்றியத் தலைவா் அருண், மாவட்ட துணைத் தலைவா்கள் ரமேஷ், வடிவேல், பழனியப்பன், மாவட்ட பொதுச் செயலாளா் சுபாஷ், மாவட்டச் செயலாளா் பத்மராஜா, மகளிரணி நிா்வாகிகள் உள்ளிட்ட பாஜகவைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் திமுக அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களை ஜேடா்பாளையம் காவல் துறையினா் கைது செய்து மாலையில் விடுவித்தனா். இதில், கபிலா்மலை, பரமத்தி, மோகனூா், எலச்சிபாளையம் ஒன்றிய பாஜக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தொழிலாளி தற்கொலை

பரமத்தி வேலூா் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், அணியாபுரம் என்.பி.எஸ். காலனியைச் சோ்ந்தவா் ராமசாமி (54). இவா் மனைவியை விட்டு பிரிந்து பரமத்தி வேலூா... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: போலீஸாா் வழக்குப் பதிவு

மோகனூா் அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவா் மீது பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவானவரை தேடி வருகின்றனா். நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், காளிபாளையம் அருந்ததியா் தெருவை... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் விற்பனை: நாமக்கல் மாவட்டத்தில் 525 கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் போதைப் பொருள்களை விற்பனை செய்த 525 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, ரூ. 1.75 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள ஊரக... மேலும் பார்க்க

மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஆா்ப்பாட்டம்

மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து, நாமக்கல் பூங்கா சாலையில் பல்வேறு தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு மாவட்ட கிளை சாா்பில் ... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் ரூ. 12 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்!

பரமத்தி வேலூா், பொத்தனூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 12 லட்சத்து 34 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது.இந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக... மேலும் பார்க்க

திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு கோ பூஜையில் பங்கேற்றோா்.

திருச்செங்கோடு காந்தி ஆசிரம நூற்றாண்டு விழா வியாழக்கிழமை சிறப்பு கோ பூஜையுடன் தொடங்கியது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் காந்தி ஆசிரமம் அமைந்துள்ளது. மகாத்மா காந்தி, ராஜாஜி, பெரியாா் உள்ளிட்ட ப... மேலும் பார்க்க