செய்திகள் :

பாஜக கொள்கை எதிரி, திமுக அரசியல் எதிரி: கொள்கை, அரசியல் வித்தியாசம் என்ன? -தவெகவுக்கு சீமான் கேள்வி

post image

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது வாக்குப் பதிவு நேர்மையாக தான் நடந்தது என்பதை எங்கு வந்து சத்தியம் செய்வார்கள். மின்னணு வாக்கு இயந்திரத்தில் பிரச்சினைகள் இருப்பது எல்லாருக்கும் தெரியும்

சீமான்

மின்னணு வாக்கு இயந்திரம்

மின்னணு வாக்கு இயந்திரத்தை எத்தனை நாடுகள் பயன்படுத்துகின்றன? அந்த இயந்திரத்தை தயாரித்து வழங்கும் ஜப்பான் இதை பயன்படுத்துகிறதா?

உலகில் மூன்று நாடுகள் மட்டுமே இதை பயன்படுத்துகின்றன: வங்கதேசம், நைஜீரியா மற்றும் இந்தியா. இந்த மூன்றுமே ஊழல் அதிகம் உள்ள நாடுகள்.

ஈரோடு கிழக்கு தேர்தல்

ஈரோடு கிழக்கு தேர்தலில் கூடுதலாக 500 ஓட்டுகள் கிடைத்தால் நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறுவோம். ஆனால், டெபாசிட் மீட்கக்கூடாது என்கிற காரணத்தால் ஈரோடு மாவட்ட ஆட்சியர் வாக்கெண்ணிக்கையை நிறுத்தி வைத்துள்ளார். அந்த இயந்திரத்தில் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பது அனைவருக்கும் தெரியும்.

தெரு நாய்கள்
தெரு நாய்கள்

நாய்கள் பிரச்னை

கழுதை, சிட்டுக் குருவி, வண்ணத்துப் பூச்சிகள் போன்றவை அழிவின் விளிம்புக்கு சென்று விட்டன. ஆனால், நாம் எந்த அழிவிற்கும் கவலைப்படவில்லை.

நாய்களை முற்றிலுமாக ஒழிப்பதால், எலிகள் பெருகி, பிளேக் நோய் பரவுவதற்கான ஆபத்து உள்ளது. அனைத்து உயிர்களையும் சமநிலையில் வைத்திருக்க வேண்டும். நாய்களை பராமரித்து, தடுப்பூசி செலுத்த வேண்டும்.

கொள்கைக்கும் அரசியலுக்கும் என்ன வித்தியாசம்?

தவெகவைப் பொறுத்தவரை, பாஜக அவர்களுக்கு கொள்கை எதிரியும், திமுக அரசியல் எதிரியும் என்றால், கொள்கைக்கும் அரசியலுக்கும் என்ன வித்தியாசம்?

அப்படியென்றால், காங்கிரசையும், அதிமுகவையும் தவெக புனிதப்படுத்துகிறதா? ஏன் காங்கிரசைப் பற்றி எதுவும் சொல்லவில்லை? அது குற்றமற்ற கட்சியா? மன்னர் ஆட்சியின் தொடக்கமே காங்கிரஸ் தான்.

தவெக தலைவர் விஜய்
தவெக

கவுன்சிலர் பேச்சு

திண்டிவனத்தில் கவுன்சிலர் பட்டியலின் மக்களை தரக்குறைவாக பேசியதை நாட்டின் மிகப்பெரிய அவமானமாக நினைக்கிறேன்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இதுபோன்று செய்பவர்களுக்கு கல்வி சான்றிதழ் செல்லாது, கடவு சீட்டு இல்லை, குடும்ப அட்டை இல்லை, வாக்குரிமை இல்லை என அனைத்தையும் நீக்கி விடுவோம்,” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

"செங்கோட்டையன் பக்கம் அதிமுக-வினர் கூடுவார்கள்; பழனிசாமி ஓரம்கட்டப்படுவார்" - புகழேந்தி காட்டம்!

செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்து, "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட... மேலும் பார்க்க

`அண்ணாமலை இருந்தவரை எல்லாம் சரியாக இருந்தது..!' - டிடிவி தினகரன்

செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்து, "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட... மேலும் பார்க்க

TVK : 'விஜய்யின் சுற்றுப்பயணத்தை காவல்துறை தடுக்க நினைக்கிறது!' - ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு

தவெக தலைவர் விஜய் வருகின்ற செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்யும் முடிவில் இருக்கிறார். திருச்சியில் இருந்து பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டு காவல்துறைய... மேலும் பார்க்க

"யானை, டிராகன் உடன் கரடியை விட புலி பொருத்தமாக இருக்கும்" - விலங்கு சின்னத்தில் அரசியல் பேசிய புதின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கிழக்கு பொருளாதார மாநாட்டில் பேசுகையில், முதல்முறையாக இந்தியா மற்றும் சீனாவின் உறவு வலுபெறுவதை 'யானை மற்றும் டிராகனின் நடனம்' என அழைத்தது ஜி ஜின்பிங் எனக் கூறியுள்ளார்.பி... மேலும் பார்க்க

ADMK: ``இது சர்வாதிகாரத்தின் உச்சம்'' - செங்கோட்டையன் பதவி நீக்கம் குறித்து ஓபிஎஸ் காட்டம்

செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்து, "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட... மேலும் பார்க்க

`திமுக ஆட்சியில் அதிகப்படியான வரி விதிக்கப்பட்டுள்ளது..!' - திண்டுக்கல்லில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

திண்டுக்கல்லில் வர்த்தகர் சங்கம் உட்பட 17 சங்கங்கள் மற்றும் அமைப்புகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.இந்த கலந்த... மேலும் பார்க்க