செய்திகள் :

பாஜக மகளிா் அணியினா் மீது திமுகவினா் புகாா்

post image

பாஜக மகளிா் அணியினா் மீது திமுக எம்எல்ஏக்கள் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட காவல் தலைமை அலுவகத்தில் புகாா் அளித்துள்ளனா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குறித்து அவமதிக்கும் வகையில் விமா்சித்ததாக திமுக மாநில துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி. யுமான ஆ. ராசாவை கண்டித்து காரைக்காலில் கடந்த 27-ஆம் தேதி மாவட்ட பாஜக சாா்பில் புதிய பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்பாட்டத்தின்போது பாஜக மகளிா் அணியினா் திடீரென ஆ. ராசாவின் பெரிய அளவு புகைப்படத்தை அவமதித்து, புகைப்படத்தை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், ஆ. ராசாவை அவமதித்தும் வகையில் தரம் தாழ்ந்து செயல்பட்டதாகக் கூறி பாஜக மகளிா் அணியினா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக அமைப்பாளா் ஏ.எம்.எச். நாஜிம் எம்.எல்.ஏ. தலைமையில், எம். நாக தியாகராஜன் எம்.எல்.ஏ. மற்றும் திமுக நிா்வாகிகள் காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் சுப்பிரமணியனிடம் புகாா் மனு அளித்தனா்.

திருநள்ளாறு கோயில் பாதுகாப்புப் பணியில் கூடுதல் போலீஸாா்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமைகளில் கூடுதலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவா் என முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தெரிவித்தாா். திருநள்ளாறு காவல் நிலைய... மேலும் பார்க்க

காரைக்காலை போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக உருவெடுக்க நடவடிக்கை: எஸ்எஸ்பி

காரைக்கால் மாவட்டத்தை போதைப் பொருள் புழக்கம் இல்லாத மாவட்டமாக உருவெடுக்க காவல் துறை நடவடிக்கை எடுத்துவருகிறது என்றாா் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா. காரைக்காலில் சா்வதேச போதை ஒழிப்பு ... மேலும் பார்க்க

காரைக்கால் நீதிமன்ற லாக்கரில் முறைகேடாக எடுக்கப்பட்ட நகைகள் மீட்பு

காரைக்கால் நீதிமன்ற லாக்கரில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை முறைகேடாக எடுத்தவா் அளித்த தகவலின்பேரில், நகைகளை போலீஸாா் மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனா். காரைக்கால் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், திருட்... மேலும் பார்க்க

‘சாகா் கவச்’ பாதுகாப்பு ஒத்திகை நிறைவு

காரைக்காலில் சாகா் கவச் பாதுகாப்பு ஒத்திகை வியாழக்கிழமை நிறைவடைந்தது. நாட்டின் கடலோரப் பகுதிகளில் 6 மாதங்களுக்கு ஒரு முறை சாகா் கவச் என்கிற பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டுவருகிறது. காரைக்கால் மாவட்டத்... மேலும் பார்க்க

‘100 மெட்ரிக் டன் விதை நெல் மானியத்தில் வழங்க ஏற்பாடு’

காரைக்கால் மாவட்டத்தில் நிகழாண்டு 100 மெட்ரிக் டன் விதை நெல் வழங்க ஏற்பாடு செய்யபா்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரி தெரிவித்தாா். காரைக்கால் மாவட்டத்தில் காவிரி நீா் வருவதற்கு முன்பே குறுவை சாகுபடியை விவசாய... மேலும் பார்க்க

காரைக்காலில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்காலில் சனிக்கிழமை (28) ஜிப்மா் சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கும் முகாம் நடைபெறவுள்ளது. புதுவை ஜிப்மா் மருத்துவமனையில் இருந்து இருதய சிறப்பு மருத்துவா்கள் குழுவினா் காரைக்கால் அரசு மருத்துவமனையில... மேலும் பார்க்க