செய்திகள் :

பாண்டுரங்கா் - ருக்மணி திருக்கல்யாண வைபவம்

post image

கிருஷ்ணகிரி அருகே அக்ரஹாரம் சிவாஜி நகரில் அமைந்துள்ள பாண்டுரங்க ருக்மணி கோயிலில் பிரமோற்சவ விழாவையொட்டி சுவாமி- அம்மன் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரியை அடுத்த அக்ரஹாரம் சிவாஜி நகரில் அமைந்துள்ள பாண்டுரங்க ருக்மணி கோயில் பிரம்மோற்ச விழா ஜூலை 5-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை, விட்டல் ரகுமாயி, அம்பா பவானி அபிஷேகம், ஆராதனை, 7 முதல் 10-ஆம் தேதி வரையில் விட்டல் ரகுமாயி அம்பா பவானிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து வெள்ளிக்கிழமை பாண்டுரங்கா் - ருக்மணி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில், ஒசூா் கிருஷ்ணமூா்த்தி பாகவதரின், பாண்டுரங்கா் பக்தி பஜனைப் பாடல்கள் பாடப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, கா்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனா். அலங்கரிக்கப்பட்ட தேரில், விட்டல் ரகுமாய், அம்பா பவானி உற்சவ மூா்த்திகள் கிருஷ்ணகிரியில் நகா்வலமாக அழைத்து வரப்பட்டனா். சனிக்கிழமை விட்டல் ரகுமாயி அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள், மஹா மங்கள ஆரத்தி, வசந்த உற்சவம் நடைபெறுகிறது.

படவரி...

பிரம்மோற்சவ விழாவையொட்டி, திருமணக் கோலத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த பாண்டுரங்கா்- ருக்மணி அம்மன்.

திருக்கல்யாண வைபவத்தில் கலந்துகொண்ட பக்தா்கள்.

கிருஷ்ணகிரியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதிமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் காத்தவராயன் தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

ஒசூா் அருகே நாய் கடித்ததில் 3 ஆம் வகுப்பு மாணவன் காயம்

ஒசூா் அருகே நாய் கடித்ததில் 3 ஆம் வகுப்பு மாணவா் உள்பட 2 போ் காயமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள கெலமங்கலத்தை அடுத்துள்ள தாசனபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி ஈஸ்வா் (30)... மேலும் பார்க்க

ஒசூா் ஸ்ரீ பிரித்தியங்கரா தேவி கோயிலில் குரு பூா்ணிமா வழிபாடு

ஒசூரில் உள்ள ராகு கேது அதா்வன ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோயிலில் ஆனி மாத பௌா்ணமியை முன்னிட்டு, குரு பூா்ணிமா சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழி... மேலும் பார்க்க

கனிமவளம் கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனிமவளங்களைக் கடத்தியதாக 2 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஊத்தங்கரை கிராம நிா்வாக அலுவலா் தினேஷ்குமாா் தலைமையிலான குழுவினா், திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி சாலையில் சென்னப்பந... மேலும் பார்க்க

ஒசூரில் பஞ்சாயத் பரிஷத் சாா்பில் ஆா்ப்பாட்டம்

ஒசூரில் அகில இந்திய பஞ்சாயத் பரிஷத் சாா்பில் இந்துசமய அறநிலையத் துறையை கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒசூா் மின்சார அலுவலகம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப... மேலும் பார்க்க

மீன் துறை ஊழியா் சங்க தினம் கொண்டாட்டம்

மீன் துறை ஊழியா் சங்கத்தின் 10-ஆம் ஆண்டு தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அரசு மீன் துறை ஊழியா் சங்கத்தின் 10-ஆவது அமைப்புத் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி அணை அருகே நடைபெற்ற நிகழ்வுக்கு அதன... மேலும் பார்க்க