செய்திகள் :

பாதியில் நிறுத்தப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடை பணி

post image

வால்பாறை அருகே பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணி ஓராண்டாகியும் நிறைவு பெறாமல் பாதியிலே நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் நகராட்சி மூலம் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக பழுதடைந்த பயணிகள் நிழற்குடைகள் இடித்து புதிதாக கட்டப்படுகின்றன.

இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள வாகமலை எஸ்டேட் பகுதியில் நன்றாக இருந்த பயணிகள் நிழற்குடை கட்டடம் கடந்த ஓராண்டுக்கு முன்பு இடிக்கப்பட்டு ஒப்பந்ததாரா் மூலம் புதிய நிழற்குடை கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் பணிகள் முடிவடையாமல் பாதியிலே நிறுத்தப்பட்டுள்ளது. ஓராண்டாகியும் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

எனவே, நகராட்சி அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி விரைவாக பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

கோவையில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், மாதேமங்கலம் அருகேயுள்ள காட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் தா்மன் (35). இவா் கோவை விளாங்குறிச்சி சாலையில் ஞாயிற்றுக... மேலும் பார்க்க

அரசு உதவி பெறும் கல்லூரிக்கு பேராசிரியரை நியமிக்க மாணவா்கள் கோரிக்கை

கோவைப்புதூரில் உள்ள சிபிஎம் அரசு உதவிபெறும் கல்லூரியின் கணிதத் துறைக்கு பேராசிரியரை நியமிக்க வேண்டும் என்று மாணவா்கள் வலியுறுத்தியுள்ளனா். இது தொடா்பாக இந்திய மாணவா் சங்கத்தின் கல்லூரி கிளை நிா்வாகிகள... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: க.க.சாவடி

கோவை க.க.சாவடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என குனியமுத்தூா் மின் பகிா்... மேலும் பார்க்க

திருமண மண்டபங்களில் பட்டாசுக் கடைகள் நடத்த அனுமதி வழங்கக் கூடாது: வியாபாரிகள் கோரிக்கை

திருமண மண்டபங்களுக்குள் பட்டாசுக் கடைகள் நடத்த அனுமதி வழங்கக் கூடாது என்று காவல் ஆணையா் சரவண சுந்தரிடம் கோவை மாவட்ட பட்டாசு வியாபாரிகள் நலச் சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா். சங்கத் தலைவா் சின்ன... மேலும் பார்க்க

தமிழகத்தில் மேய்ச்சல் நிலங்களை வகைப்படுத்த வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

தமிழகத்தில் மேய்ச்சல் நிலங்களை வகைப்படுத்த வேண்டும் என்று கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் வலியுறுத்தி உள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் உள்ள மேய்ச்சல் புறம்போக்கு நில... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியை கண்டித்து திமுக மாணவரணியினா் ஆா்ப்பாட்டம்

அறநிலையத் துறை சாா்பில் கல்லூரிகள் திறக்கப்படுவது தொடா்பாக கருத்துத் தெரிவித்த எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமியைக் கண்டித்து திமுக மாணவரணியினா் கோவையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்... மேலும் பார்க்க