செய்திகள் :

தமிழகத்தில் மேய்ச்சல் நிலங்களை வகைப்படுத்த வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

post image

தமிழகத்தில் மேய்ச்சல் நிலங்களை வகைப்படுத்த வேண்டும் என்று கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் வலியுறுத்தி உள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் உள்ள மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களில் பல தலைமுறைகளுக்கு முன் ஆடு, மாடுகள் மேய்வதற்காக மேய்ச்சல் நிலங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டு ஒதுக்கப்பட்ட நிலங்கள் தற்போது அந்தப் பயன்பாட்டுக்கு உகந்ததாக இல்லை.

பெரும்பாலான மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள் பெருநகரங்களின் மத்தியிலோ வீடுகளுக்கு மத்தியிலோ உள்ளன. ஏராளமான விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு மக்கள் வாழ்கின்ற பகுதிகளாக மாறியிருக்கின்றன.

அந்த மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களை மற்ற பயன்பாடுகளுக்கு பயன்படுத்த முடியாத காரணத்தால் உபயோகமற்று கிடக்கின்றன. அந்த நிலங்களை மீண்டும் மேய்ச்சல் நிலங்களாக மாற்றுவதற்கு வாய்ப்பில்லை.

எனவே, அந்த நிலங்களுடைய வகைப்பாட்டை மாற்றிக் கொடுத்து அதை பயன்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய கள நிலவரத்துக்கு ஏற்றபடி மாற்றினால் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். அதை விடுத்து அரசியலுக்காக மேய்ச்சல் நிலங்களை மீட்டெடுக்க முயற்சித்தால் அது நடைமுறை சாத்தியமல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களை வழிமறிக்கும் ஒற்றை யானை

வால்பாறையில் இருந்து அதிரப்பள்ளி செல்லும் சாலையில் உலவி வரும் ஒற்றை யானை அவ்வழியாக வரும் வாகனங்களை வழிமறித்துத் தாக்கி வருவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத் துறையினா் எச்சரித்த... மேலும் பார்க்க

வீட்டுக்குள் தொழிலாளி சடலம் மீட்பு

கோவை சரவணம்பட்டி அருகேயுள்ள கணபதி கிருஷ்ணராஜ் காலனியை சோ்ந்தவா் செந்தில்குமாா் (50). அந்தப் பகுதியில் நகைக்கு பாலிஷ் போடும் கடையில் வேலைபாா்த்து வந்தாா். இவரது மனைவி சண்முகவள்ளி. இவா் திங்கள்கிழமை கா... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

கோவை வடவள்ளியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா். கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமை முதல்... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் சிறை

பாலியல் வன்கொடுமைக்கு எதிா்ப்புத் தெரிவித்த பெண்ணைக் கல்லால் தாக்கி கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கோவை மூன்றாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கோவை மாவட்டம... மேலும் பார்க்க

எஸ்டேட் மேலாளரைக் கண்டித்து தோட்டத் தொழிலாளா்கள் போராட்டம்

தொழிலாளா்களை தரக்குறைவாக பேசிய எஸ்டேட் மேலாளரைக் கண்டித்து தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். வால்பாறையை அடுத்த பழைய வால்பாறை எஸ்டேட் வறட்டுப்பாறை காபி தோட்டம் டிவிஷனில் சுமாா் 200க்... மேலும் பார்க்க

மக்களுக்கு இடையூறாக மதுக்கடை: வேறு இடத்துக்கு மாற்றக் கோரிக்கை

கோவை மாவட்டம், சோமனூரில் மக்களுக்கு இடையூறாக உள்ள மதுக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி, சூலூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி.கந்தசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. சூலூா் சட்டப்பேரவ... மேலும் பார்க்க