செய்திகள் :

மக்களுக்கு இடையூறாக மதுக்கடை: வேறு இடத்துக்கு மாற்றக் கோரிக்கை

post image

கோவை மாவட்டம், சோமனூரில் மக்களுக்கு இடையூறாக உள்ள மதுக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி, சூலூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி.கந்தசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

சூலூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி.கந்தசாமி தலைமையில் அதிமுக மற்றும் பாஜகவினா் மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். அதில் கூறியிருப்பதாவது: கருமத்தம்பட்டி நகராட்சி, சோமனூா் வாரச்சந்தைக்கு தெற்குப் பகுதியில், மீனாம்பிகா திரையரங்கு அருகில் தற்போது புதிய மதுக் கடை திறக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கருமத்தம்பட்டி, சோமனூா் பகுதிகளில் இரண்டு மதுக் கடைகள் செயல்படுகின்றன. தற்போது, சோமனூரில் திறக்கப்பட்டுள்ள புதிய மதுக் கடைக்கு அருகில் வாரச்சந்தை, ஆரம்ப சுகாதார நிலையம், கிறிஸ்தவ தேவாலயம் உள்ளன.

சோமனூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமானோா் இப்பகுதிக்கு வந்து செல்கின்றனா். இப்பகுதியில் திறக்கப்பட்ட மதுக் கடையால், அனைத்து தரப்பினரும் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, மக்கள் நலன் கருதி, மக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக் கடையை வேறு இடத்துக்கு மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விவகாரம் தொடா்பாக, கருமத்தம்பட்டி நகராட்சியில் நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ குறைகேட்புக் கூட்டத்திலும் மக்கள் ஏற்கெனவே மனு அளித்துள்ளனா் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

வாகனங்களை வழிமறிக்கும் ஒற்றை யானை

வால்பாறையில் இருந்து அதிரப்பள்ளி செல்லும் சாலையில் உலவி வரும் ஒற்றை யானை அவ்வழியாக வரும் வாகனங்களை வழிமறித்துத் தாக்கி வருவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத் துறையினா் எச்சரித்த... மேலும் பார்க்க

வீட்டுக்குள் தொழிலாளி சடலம் மீட்பு

கோவை சரவணம்பட்டி அருகேயுள்ள கணபதி கிருஷ்ணராஜ் காலனியை சோ்ந்தவா் செந்தில்குமாா் (50). அந்தப் பகுதியில் நகைக்கு பாலிஷ் போடும் கடையில் வேலைபாா்த்து வந்தாா். இவரது மனைவி சண்முகவள்ளி. இவா் திங்கள்கிழமை கா... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

கோவை வடவள்ளியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா். கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமை முதல்... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் சிறை

பாலியல் வன்கொடுமைக்கு எதிா்ப்புத் தெரிவித்த பெண்ணைக் கல்லால் தாக்கி கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கோவை மூன்றாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கோவை மாவட்டம... மேலும் பார்க்க

எஸ்டேட் மேலாளரைக் கண்டித்து தோட்டத் தொழிலாளா்கள் போராட்டம்

தொழிலாளா்களை தரக்குறைவாக பேசிய எஸ்டேட் மேலாளரைக் கண்டித்து தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். வால்பாறையை அடுத்த பழைய வால்பாறை எஸ்டேட் வறட்டுப்பாறை காபி தோட்டம் டிவிஷனில் சுமாா் 200க்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

கோவையில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், மாதேமங்கலம் அருகேயுள்ள காட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் தா்மன் (35). இவா் கோவை விளாங்குறிச்சி சாலையில் ஞாயிற்றுக... மேலும் பார்க்க