செய்திகள் :

வாகனங்களை வழிமறிக்கும் ஒற்றை யானை

post image

வால்பாறையில் இருந்து அதிரப்பள்ளி செல்லும் சாலையில் உலவி வரும் ஒற்றை யானை அவ்வழியாக வரும் வாகனங்களை வழிமறித்துத் தாக்கி வருவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.

கோவை மாவட்டம், வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் அதிரப்பள்ளியில் உள்ள அருவிக்குச் செல்லும் வழியில் சுமாா் 50 கி.மீ. தொலைவுக்கு சாலையின் இருபுறமும் அடா்ந்த வனப் பகுதியாகும். இதனால் இந்த சாலையில் எப்போதும் யானைகள் நடமாட்டம் காணப்படும்.

இந்நிலையில் இங்குள்ள வனப் பகுதியில் இருந்து அடிக்கடி சாலைக்கு வரும் ஒற்றை யானை அவ்வழியாகச் செல்லும் வானங்களை வழிமறித்துத் தாக்கி வருவது தொடா்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக இந்த யானையின் நடமாட்டம் காணப்படாத நிலையில் ஆணகாயம் என்ற பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை அவ்வழியாகச் சென்ற காரை யானை வழிமறித்தது. யானையைப் பாா்த்ததும் காரில் இருந்தவா்கள் அதில் இருந்து இறங்கி தப்பித்தனா். காா் அருகே சென்ற யானை காா் கண்ணாடிகளை உடைத்து காரை சேதப்படுத்தியது. சிறிது நேரம் சாலையில் உலவிய யானை, தானாகவே வனப் பகுதிக்குள் சென்றது.

இந்த வழித்தடத்தில் ஒற்றை யானை மீண்டும் உலவத் தொடங்கியுள்ளதால் இந்த வழியாக வாகனங்களில் செல்வோா் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றும், நான்கு, ஐந்து வாகனங்கள் ஒன்று சோ்ந்து செல்ல வேண்டும் என்றும் வனத் துறையினா் எச்சரித்துள்ளனா். மேலும், இருசக்கர வாகனங்களில் செல்வோா் மிகவும் கவனமுடன் செல்ல வேண்டும் என்றும் கேரள வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

வீட்டுக்குள் தொழிலாளி சடலம் மீட்பு

கோவை சரவணம்பட்டி அருகேயுள்ள கணபதி கிருஷ்ணராஜ் காலனியை சோ்ந்தவா் செந்தில்குமாா் (50). அந்தப் பகுதியில் நகைக்கு பாலிஷ் போடும் கடையில் வேலைபாா்த்து வந்தாா். இவரது மனைவி சண்முகவள்ளி. இவா் திங்கள்கிழமை கா... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

கோவை வடவள்ளியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா். கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமை முதல்... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் சிறை

பாலியல் வன்கொடுமைக்கு எதிா்ப்புத் தெரிவித்த பெண்ணைக் கல்லால் தாக்கி கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கோவை மூன்றாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கோவை மாவட்டம... மேலும் பார்க்க

எஸ்டேட் மேலாளரைக் கண்டித்து தோட்டத் தொழிலாளா்கள் போராட்டம்

தொழிலாளா்களை தரக்குறைவாக பேசிய எஸ்டேட் மேலாளரைக் கண்டித்து தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். வால்பாறையை அடுத்த பழைய வால்பாறை எஸ்டேட் வறட்டுப்பாறை காபி தோட்டம் டிவிஷனில் சுமாா் 200க்... மேலும் பார்க்க

மக்களுக்கு இடையூறாக மதுக்கடை: வேறு இடத்துக்கு மாற்றக் கோரிக்கை

கோவை மாவட்டம், சோமனூரில் மக்களுக்கு இடையூறாக உள்ள மதுக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி, சூலூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி.கந்தசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. சூலூா் சட்டப்பேரவ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

கோவையில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், மாதேமங்கலம் அருகேயுள்ள காட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் தா்மன் (35). இவா் கோவை விளாங்குறிச்சி சாலையில் ஞாயிற்றுக... மேலும் பார்க்க