செய்திகள் :

பாதுகாப்புத் துறைக்கு ரூ.50,000 கோடி கூடுதல் ஒதுக்கீடு: மத்திய அரசு திட்டம்

post image

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்புத் துறைக்கு ரூ.50,000 கோடி கூடுதலாக ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பஹல்காம் தாக்குதலுக்கு பழிதீா்க்க, இந்திய ராணுவம் கடந்த மே 7-ஆம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை மேற்கொண்டு, பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைத் தாக்கி அழித்தது. இதைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ மோதல் ஏற்பட்டது. எல்லை நெடுகிலும் அத்துமீறலில் ஈடுபட்ட பாகிஸ்தான், இந்திய ராணுவ நிலைகளைக் குறிவைத்து ஏவுகணைகள்-ட்ரோன்களை செலுத்தியது.

பாகிஸ்தானின் ஏவுகணைகள், ட்ரோன்களை நடுவானிலேயே இடைமறித்து இந்தியா அழித்தது. அத்துடன், பாகிஸ்தானின் விமானப் படை தளங்கள் மீது கடும் தாக்குதலை நடத்தியது.

4 நாள்கள் போா்ப் பதற்றம் நீடித்த நிலையில், பாகிஸ்தானின் கோரிக்கையின்பேரில் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்புத் துறைக்கு கூடுதலாக ரூ.50,000 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான ஒப்புதல் வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பெறப்படும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பெட்டி..

2014-15 - ரூ.2.29 லட்சம் கோடி

2024-25 - ரூ.6.22 லட்சம் கோடி

2025-26 - ரூ.6.81 லட்சம் கோடி (9.2% அதிகரிப்பு)

ஆபரேஷன் சிந்தூர் குழு: காங்கிரஸ் பட்டியலில் சசி தரூர் பெயர் இல்லை! ஆனால்...!

ஆபரேஷன் சிந்தூர் குழு தொடர்பான காங்கிரஸ் கட்சியின் பரிந்துரை பட்டியலில் சசி தரூர் பெயர் இல்லாத நிலையில் மத்திய அரசு அவரை குழுவின் வழிகாட்டியாகத் தேர்வு செய்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கட... மேலும் பார்க்க

புணேவில் அதிரடி.. ஆற்றங்கரையோர ஆக்ரமிப்பு பங்களாக்கள் இடிப்பு!

புணே மாவட்டத்தின் பிம்ப்ரி சின்ச்வாடு புறநகர்ப் பகுதியில் உள்ள இந்திரயானி ஆற்றங்கரையோரம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட 36 பங்களாக்களை நகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை இடிக்கத் தொடங்கியுள்ளதாக அதிகாரி ஒருவர்... மேலும் பார்க்க

ஆப்கனுக்காக அட்டாரி - வாகா எல்லை திறப்பு!

ஆப்கானிஸ்தான் லாரிகளுக்காக அட்டாரி - வாகா எல்லை திறக்கப்பட்டது.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள், ஏப்ரல் 22 ஆம் தேதியில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அட்டாரி... மேலும் பார்க்க

ஒடிசாவில் மின்னல் பாய்ந்து ஒரே நாளில் 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலி!

ஒடிசாவின் பல்வேறு மாவட்டங்களில் மின்னல் பாய்ந்து 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலியாகியுள்ளனர். ஒடிசாவின் வடமேற்கு மாவட்டங்களில் நார்வெஸ்டர் என்றழைக்கப்படும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கோட... மேலும் பார்க்க

நிதி ஆயோக் கூட்டத்தில் மமதா பங்கேற்பாரா?

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மே 24ஆம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி கலந்துகொள்வாரா இல்லையா என்பது குறித்து சலசலப்பு ஏற்பட்டுள்ள... மேலும் பார்க்க

ம.பி. நீதிமன்ற உத்தரவால் நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் மின் தடை ஏற்பட்டதாகக் கூறி மாணவி ஒருவர் தொடர்ந்த வழக்கில், இளநிலை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பார்க்க