செய்திகள் :

பாதுகாப்புத் துறை அதிகாரி கொலை வழக்கு: 34 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளி கைது

post image

ஆவடியில் பாதுகாப்புத்துறை அதிகாரி கொலை வழக்கில், 34 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

ஆவடியில் உள்ள பாதுகாப்புத் துறை நிறுவனமான டேங்க் பேக்டரியில் அதிகாரியாக பணிபுரிந்தவர் ரஞ்சித் சிங் ராணா (52). இவர் ஆவடி டேங்க் பேக்டரி குடியிருப்பில் வசித்து வந்தார். இவரது 2-ஆவது மனைவி மதுமதி. ரஞ்சித் சிங் ராணா அடிக்கடி மது அருந்தி விட்டு, மதுமதியை கொடுமைப்படுத்தி வந்தாராம். இதையடுத்து, அவரை கொலை செய்ய மதுமதி, தனது சகோதரர் பாலாஜியுடன் திட்டம் தீட்டியுள்ளார். இதற்கிடையில் கடந்த 1991-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி மதுபோதையில் வீட்டுக்கு வந்த ரஞ்சித் சிங் ராணாவை மதுமதி, பாலாஜி (படம்) ஆகிய இருவரும் சேர்ந்து தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்தனர்.

இது குறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீஸார் கொலை வழக்கு பதிந்து மதிமதியை கைது செய்தனர். பாலாஜியை தேடி வந்தனர். ஆனால் அவர் மும்பைக்கு தப்பிச் சென்றுவிட்டார். வழக்கு தொடர்பாக பாலாஜியை பிடித்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் போலீஸார் அவரை மும்பைக்கு பலமுறை சென்று தேடியும் பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், பாலாஜி விருதுநகரில் குடும்பத்துடன் வசிப்பது அண்மையில் தெரியவந்தது.

இதையடுத்து, ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் உத்தரவின் பேரில், ஆவடி உதவி ஆணையர் கனகராஜ் தலைமையில் தனிப்படை போலீஸார் விருதுநகருக்குச் சென்று பாலாஜியை திங்கள்கிழமை பிடித்து ஆவடிக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து போலீஸார் அவரை கைது செய்து, அம்பத்தூர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

கொலை வழக்கில் 34 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்த உதவி ஆணையர் கனகராஜ் தலைமையிலான தனிப்படை போலீஸாரை ஆணையர் கி.சங்கர் பாராட்டினார்.

இதற்கிடையில் 1998-ஆம் ஆண்டு ரஞ்சித் சிங் ராணா கொலை வழக்கில் இருந்து மதுமதியை அம்பத்தூர் நீதிமன்றம் விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.

விடுதலையாகி ரீல்ஸ் விடியோ வெளியிட்ட நபர் மீண்டும் கைது!

மகாராஷ்டிரத்தில் சிறையிலிருந்து ஜாமினில் வெளியானவுடன் ரீல்ஸ் விடியோ வெளியிட்ட நபர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.நாக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமித் தாக்கூர் என்ற நபர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈ... மேலும் பார்க்க

ஆக்ஸ்போர்டு பல்கலையில் உரையாற்றும் முதல்வர் மமதா!

லண்டனிலுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மேற்கு வங்கத்தின் முதல்வர் மமதா பானர்ஜி உரையாற்றவுள்ளார்.பிரிட்டனின் வரலாற்று சிறப்புமிக்க கல்வி நிறுவனமான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மேற்கு வங்கத்தின் முத... மேலும் பார்க்க

இ-மெயில் மோசடி வழக்கில் நைஜீரியரை கைது செய்த சிபிஐ!

இ-மெயில் மோசடி வழக்கில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவரை மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.கடந்த 2011 ஆம் ஆண்டு ஒரு நபருக்கு இ-மெயில் மூலமாக வந்த செய்தியில் அவர் ஆர்தோடாக்ஸ் சர்ச்... மேலும் பார்க்க

மாணவர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ள பாட்னா பல்கலைக்கழகத்தில் குண்டுவெடிப்பு!

பிகார் மாநிலத்தின் பாட்னா பல்கலைக்கழக வளாகத்தினுள் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. பாட்னா பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தேர்தல் இன்னும் சில நாள்களில் அங்கு நடைபெறவுள்ள நிலையில் இன்று (மார்ச்.5... மேலும் பார்க்க

நவீன வெடிகுண்டு வெடிப்பில் 3 வீரர்கள் படுகாயம்!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பம் மாவட்டத்தில் நவீன வெடிகுண்டு வெடிப்பில் 3 பாதுகாப்புப் படை வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.பலிவா பகுதியில் மனோஹர்பூர் காவல் நிலையத்திற்கு உள்பட்ட சரந்தா வனப்பகுதியி... மேலும் பார்க்க

விரைவில் மாநிலத்தின் 9வது புலிகள் காப்பகம் திறக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு!

மத்தியப் பிரதேசத்தின் 9வது புலிகள் காப்பகம் விரைவில் திறக்கப்படவுள்ளதாக அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தின் சிவ்புரி மாவட்டத்தில் அம்மாநிலத்தின் 9வது புலிகள் காப்பகமா... மேலும் பார்க்க