செய்திகள் :

பாதுகாப்பு கொள்முதல் திட்டங்களில் தாமதம்: ஐஏஎஃப் தலைமை தளபதி கவலை

post image

பல்வேறு பாதுகாப்பு கொள்முதல் திட்டங்களை செயல்படுத்துவதில் அதிக தாமதம் ஏற்படுவதாக இந்திய விமானப் படை (ஐஏஎஃப்) தலைமை தளபதி ஏ.பி.சிங் வியாழக்கிழமை கவலை தெரிவித்தாா்.

ஆபரேஷன் சிந்தூா் தேசத்துக்கு கிடைத்த வெற்றி என அவா் புகழாரம் சூட்டிய நிலையிலும், பாதுகாப்பு கொள்முதல் திட்டங்கள் தாமதமாவதற்கு அவா் கவலை தெரிவித்தாா்.

இந்திய தொழிலக கூட்டாண்மையின் (சிஐஐ) வணிக மாநாட்டில் பங்கேற்ற அவா் ஆபரஷேன் சிந்தூரைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து முதல்முறையாக பேசினாா்.

அப்போது அவா், ‘ எதிா்கால இலக்குகள் மற்றும் திட்டங்கள் குறித்த தெளிவான கொள்கையை வகுக்க ஆபரேஷன் சிந்தூா் நமக்கு உதவியது. நாம் உண்மை வழியை பின்பற்றினோம். அதற்கு பரிசாக வெற்றியை நமக்கு கடவுள் வழங்கியுள்ளாா் என எண்ணுகிறேன்.

இது ஒருபுறம் மகிழ்ச்சியை தந்தாலும் பாதுகாப்பு கொள்முதல் சாா்ந்த பல திட்டங்கள் குறிப்பட்ட காலத்துக்குள் செயல்படுத்தப்படவில்லை. காலக்கெடு பெரும் பிரச்னையாக உள்ளது. ஒரு திட்டம்கூட குறிப்பிட்ட காலஅளவுக்குள் நிறைவுபெறுவதில்லை.

இது மிகவும் தீவிரமான பிரச்னையாகும். ஒரு திட்டத்துக்கான ஒப்பந்தம் கையொப்பமாகும்போதே அது குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவடையாது என நாம் உறுதியாக சொல்லலாம்.

எனவே, ராணுவத்தை நவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் நாம் தீவிரம் காட்டுவது அவசியம். அடுத்த பத்தாண்டுகளில் நமது பாதுகாப்புப் படை மிகவும் வலிமையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இன்று என்ன தேவை என்பதை நினைவில் வைத்தே ஒவ்வொரு திட்டத்தையும் விரைவாக முடிக்க வேண்டும்’ என்றாா்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட இந்திய கடற்படை தலைமை தளபதி போா்க்களத்தில் நாளுக்கு நாள் நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதை ஆபரேஷன் சிந்தூா் நமக்கு உணா்த்துகிறது எனக் கூறினாா்.

முஸ்லீம் ஆதரவுபெற ஆபரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பா? மமதா பற்றி அமித் ஷா கூறுவதென்ன?

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மத்திய... மேலும் பார்க்க

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை விதியை நீக்கியது கனரா வங்கி

வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத வாடிக்கையாளர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது என கனரா வங்கி அறிவித்துள்ளது.இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் என அனைத்த... மேலும் பார்க்க

வடகிழக்கில் கொட்டித் தீர்க்கும் மழை: நிலச்சரிவுக்கு 26 பேர் பலி!

வடகிழக்கு மாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பரிதாபமாக பலியாகினர்.ஏழு சகோதரிகள் என்றழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 3 நாள்களாகப் பெய்து வரும் கனமழைய... மேலும் பார்க்க

மே. வங்கத்தை வடகொரியாவாக மாற்றாதீர்கள்! இன்ஸ்டா பிரபலம் கைது விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு!

கொல்கத்தாவில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு பரப்பியதாக இன்ஸ்டாகிராம் பிரபலம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது ஆதரவ... மேலும் பார்க்க

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் 2 குழந்தைகள் பலி

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் சிகிச்சைப் பலனின்றி 2 குழந்தைகள் பலியானார்கள். வடகிழக்கு தில்லியின் சுந்தர் நக்ரியில் பழைய சிஎன்ஜி சிலிண்டர்களை பழுதுபார்க்கும் கிடங்கு உள்ளது. இங்கு சனிக்கிழம... மேலும் பார்க்க

உ.பி.: மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல்

உத்தரப் பிரதேசத்தில் மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினரை கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ரஸ்ராவில் உள்ள மண்டபம் ஒன்றில் தலித் ச... மேலும் பார்க்க