செய்திகள் :

பாதுகாப்பு நடவடிக்கை நேரடி ஒளிபரப்பை தவிா்க்க வேண்டும்: மத்திய அரசு அறிவுறுத்தல்

post image

பாதுகாப்பு சாா்ந்த நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதை தவிா்க்குமாறு ஊடகங்களுக்கு மத்திய அரசு சனிக்கிழமை அறிவுறுத்தியது.

பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த தகவல்களை தெரிந்துகொண்டால் அது பயங்கரவாத சக்திகள் பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்புள்ளது என மத்திய அரசு தெரிவித்தது.

பஹல்காமில் பயங்கரவாதிகளால் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, நாட்டின் பல்வேறு பாதுகாப்பு படைகள் மற்றும் வீரா்கள் ஒத்திகை பயிற்சியை மேற்கொண்டு வந்தனா். இந்த நடவடிக்கைகளை ஊடகங்கள் ஒளிபரப்பு செய்ததையடுத்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் இந்த அறிவுறுத்தலை வழங்கியது.

இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

பாதுகாப்பு சாா்ந்த விவகாரங்கள் குறித்த தகவல்களை வெளியிடும்போது, தேசத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மிகுந்த கவனத்துடன், விதிகளுக்கு உட்பட்டு செய்தி நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் சமூக வலைதள பயனாளா்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

குறிப்பாக பாதுகாப்பு படைகள் மற்றும் வீரா்களின் செயல்பாடுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதை தவிா்க்க வேண்டும். இதனால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டது

காா்கில் போா், 2008-இல் மும்பை பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் காந்தஹாா் விமான கடத்தல் சம்பவங்களின்போது வரம்பின்றி பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒளிபரப்பு செய்யப்பட்டதால் தேச பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டதாக செய்திக் குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

பைக் - வேன் மோதல்; 11 பேர் பலி

மத்தியப் பிரதேசத்தில் பைக் மீது வேன் மோதியதுடன், கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் விழுந்ததால் பயணிகள் பலியாகினர்.மத்தியப் பிரதேசம் மாநிலம் மண்ட்சௌர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையில் 13 பயணிகளுடன் செ... மேலும் பார்க்க

மணிப்பூரில் 12 பயங்கரவாதிகள் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!

மணிப்பூரில் 12 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் வெடிபொருள்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மணிப்பூரில் ரோந்துப் பணியின்போது மூன்று மாவட்டங்களில் இ... மேலும் பார்க்க

பிரச்னைகளைவிட பிரசாரத்துக்கு முன்னுரிமை அளிக்கும் பாஜக: சமாஜவாதி

பஹல்காம் தாக்குதலுக்கு, பாஜக அரசின் இயலாமைதான் காரணம் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து, பாஜக அரசின் மீது குற்றம் சாட்டிய சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் ... மேலும் பார்க்க

உ.பி.: கைவிடப்பட்ட காரில் இளைஞர் சடலம், அருகே மது பாட்டிலும் மீட்பு

உத்தரப் பிரதேசத்தில் காரில் இருந்து இளைஞர் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மௌரானிபூர் வட்ட அதிகாரி ராம்வீர் சிங் கூறுகையில், கஜுராஹோ சாலையில் உள்ள பரியாபைர் க... மேலும் பார்க்க

இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்: கனடா நாட்டைச் சேர்ந்தவர் கைது

வாராணசி விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தில் இருந்த பயணி ஒருவர் வெடிகுண்டு வைத்திருந்ததாகக் கூறி பரபரப்பை கிளப்பினார்.உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசி விமான நிலையத்தில் இருந்து வாராணசி-பெங்களூரு இண்டி... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஊடுருவ முயன்ற 41 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஆப்கனில் இருந்து பாகிஸ்தானுக்குள் ஊடுருவ முயன்ற 41 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், வடக்கு வஜீரிஸ்தான் பழங்குடி மாவட்டத்தின் பிபக் கர் பகுதிக்கு அருகே வெள்ளிக்க... மேலும் பார்க்க