செய்திகள் :

பாதுகாப்பு மீறல்களில் ஏர் இந்தியா! விமானப் போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை!

post image

ஏர் இந்தியா விமானங்கள் பாதுகாப்பு மீறலில் ஈடுபட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில், 240-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், போயிங் ரக விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், ஏர் இந்தியா விமானங்கள் பாதுகாப்பு சோதனைகள் நிலுவையில் இருந்தபோதிலும்கூட, அந்த விமானங்கள் இயக்கப்பட்டதாகக் கூறி, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) எச்சரித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.

பாதுகாப்பு சோதனை மேற்கொள்ள வேண்டிய ஏர்பஸ் ஏ 320 ஜெட் விமானம், ஒரு மாதகாலம் ஆகியும் சோதனைக்கு உட்படுத்தப்படாமல், துபை, ரியாத், ஜெட்டா போன்ற சர்வதேச இடங்களுக்கு பயணித்தது தெரிய வந்தது.

மற்றொன்றாக, ஏர்பஸ் ஏ 319 விமானம், பாதுகாப்பு சோதனையில் 3 மாதங்களுக்கும் மேலாக உட்படுத்தப்படாமல், உள்நாட்டு வழித்தடங்களில் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. இவைதவிர, மற்றொரு விமானமும் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படாதது தெரிய வந்தது.

இந்த விமானங்களில் அவசரகாலத்தில் தப்பிப்பதற்கான அவசர உபரணங்களை ஆய்வு செய்ய வேண்டியிருந்தது.

இவ்வாறு, பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தாமல், விமானத்தை இயக்குவது என்பது நிலையான விமானத் தகுதி மற்றும் பாதுகாப்புத் தேவைகளை மீறுவதாகும்.

இதையும் படிக்க:லஞ்சம் அளிப்போருக்கு மட்டுமே வீடு! கர்நாடக எம்.எல்.ஏ.வின் தொலைபேசி உரையாடல் கசிவு!

கேரளத்தில் பெண் தற்கொலை: 3 பேர் கைது

வடக்கு கேரள மாவட்டத்தில் 40 வயதுடைய பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலம், பினராயி கிராமத்தில் ரசினா(40) ஜூன் 17 ஆம் தேதி தனது வீட்டில் இறந்து கிடந்தார். ச... மேலும் பார்க்க

அகமதாபாத் விபத்து: 223 பேரின் டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டது!

அகமதாபாத் விமான விபத்தில் பலியான 223 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் உறுதி செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை காலை 11:50 மணி நிலவரப்படி 204 உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று சிவில் மருத்துவமனை கண்க... மேலும் பார்க்க

நன்றி! ஆனால்... டிரம்ப்பின் வருகை அழைப்பை நிராகரித்தது பற்றி மோடி கூறியதென்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வருகை அழைப்பை நிராகரித்தது ஏன்? என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பங்கேற்றிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட... மேலும் பார்க்க

தில்லியில் முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை!

தில்லியில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகின்றது.... மேலும் பார்க்க

அசாம் காங்கிரஸுக்கு சாதகமாக இஸ்லாமிய நாடுகளின் சமூக வலைதள கணக்குகள்: முதல்வர் குற்றச்சாட்டு

அசாம் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக, பல்வேறு இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த 5,000-க்கும் அதிகமான சமூக வலைதள கணக்குகள் செயல்படுவதாக அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா குற்றம்சாட்டியுள்ளார். பத்த... மேலும் பார்க்க

மோகன்லாலின் ஊட்டி பங்களாவின் ஒரு நாள் வாடகை இவ்வளவா?

மலையாளத் திரையுலகின் புகழ்பெற்ற நடிகராக இருக்கும் மோகன்லாலுக்குச் சொந்தமான ஊட்டி பங்களாவில் பயணிகள் தங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அது தொடர்பான அனைத்துத்தகவல்களும் தற்போது சுற்றுலா வழிகாட்டும... மேலும் பார்க்க