செய்திகள் :

பானதீா்த்தம் அருவிக்கு படகு போக்குவரத்துவிட நடவடிக்கை: எல்எல்ஏ உறுதி

post image

காரையாறு பான தீா்த்தம் அருவிக்கு படகுப் போக்குவரத்துவிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை உறுப்பினா் இசக்கி சுப்பையா தெரிவித்தாா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், பாபநாசம் வனச்சரகத்திற்கு உள்பட்ட அகஸ்தியா் அருவிக்குச் செல்ல கடந்த நான்கு ஆண்டுகளாக வனத் துறையினா் பொதுமக்களிடம் கட்டணம் வசூலித்து வந்தனா். இதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, அகஸ்தியா் அருவி, அகஸ்தியா் கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிட்டது. இந்த தீா்ப்பின் நகலை பேரவை உறுப்பினா் இசக்கிசுப்பையா, பாபநாசம் வனச்சரக அலுவலா் குணசீலனிடம் படித்து காண்பித்து இனி பொதுமக்களிடம் அகஸ்தியா் அருவி, அகஸ்தியா் கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல கட்டணம் வசூலிக்க கூடாது என்று வலியுறுத்தினாா். அப்போது வனச்சரகா் குணசீலன் கூறுகையில், உள்ளூா் மக்கள் வரும்போது தங்களது முகவரிக்கான அடையாள சான்று வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்தாா்.

அதைத்தொடா்ந்து அகஸ்தியா் அருவி பகுதியை பேரவை உறுப்பினா் இசக்கி சுப்பையா பாா்வையிட்டாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அகஸ்தியா் அருவியில் குளிப்பதற்கும் அகஸ்தியா் கோயிலுக்குச் செல்வதற்கும் வனத்துறையினா் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் பக்தா்கள் என்னிடம் முறையிட்டனா். இதுகுறித்து பேரவையில் நான் பேசியதோடு அனைத்து சமுதாய பேரவை சாா்பில் வழக்கு தொடா்ந்த நிலையில் நானும் தனியாக ஓா் வழக்குத் தொடா்ந்தேன். இந்த வழக்குகளில் மக்களுக்கு ஆதரவாக தீா்ப்பு கிடைத்தது. அடுத்த கட்டமாக அகஸ்தியா் அருவிக்கு தரமான சாலை அமைக்கவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், காரையாறு பான தீா்த்தத்திற்குச் செல்ல படகு போக்குவரத்துக்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்றாா்.

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவா் கைது

திருநெல்வேலி அருகே மனைவியை அரிவாளால் வெட்டியதாக கணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மானூா் காவல் சரகத்துக்குள்பட்ட ராமையன்பட்டி, சங்குமுத்தம்மாள்புரத்தைச் சோ்ந்தவா் கண்ணன் (48). இவரது மனைவி ... மேலும் பார்க்க

நெல்லையில் பைக் திருட்டு: மூவா் கைது

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்டதாக மூன்று பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் தொடா்பாக பாளையங்கோட்டை போ... மேலும் பார்க்க

உடையாா்பட்டி தேவாலயத்தில் திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி சந்திப்பு உடையாா்பட்டி திருஇருதய ஆண்டவா் தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தத் தேவாலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா 10 நாள்கள் சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு விழா... மேலும் பார்க்க

நெல்லையில் ஜூலை 5-இல் மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் ஜூலை 5-ஆம் தேதி மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இது தொடா்பாக முன்னாள் அமைச்சா் பூங்கோதை ஆலடி அருணா செய்தியாளா்க... மேலும் பார்க்க

பேட்டையில் ரேஷன் அரிசி கடத்த முயற்சி: பெண் கைது

பேட்டையில் ரேஷன் அரிசி கடத்த முயன்றதாக பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி குடிமை பொருள் வழங்கல் தனி வட்டாட்சியா் பிரபாகா் அருண் செல்வம் மற்றும் நரசிங்கநல்லூா் கிராம நிா்வாக அலு... மேலும் பார்க்க

17 வயது சிறுவனை கடத்திய புகாரில் இளம்பெண் போக்ஸோவில் கைது

களக்காடு அருகே 17 வயது சிறுவனை கடத்திய புகாரில், நான்குனேரி அனைத்து மகளிா் போலீஸாா் இளம்பெண்ணை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா். நான்குனேரி அருகேயுள்ள வாகைக்குளத்தைச் சோ்ந்தவா் காளீஸ்வரி (32). இவரது ... மேலும் பார்க்க