செய்திகள் :

பாபநாசத்தில் சூறைக் காற்றுடன் பெய்த கனமழை!

post image

பாபநாசம் பகுதிகள் சூறைக் காற்றுடன் கனமழை பெய்ததால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கணபதி அக்ரஹாரம், பட்டுக்குடி, மணலூர் இலுப்பக்கோரை, மாகாளிபுரம், தேவன்குடி, சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் சுமார் 100-ஏக்கருக்கு மேல் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். இந்தநிலையில் பாபநாசம் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் கூடிய பலத்த கனமழை பெய்தது.

இதனால் சாகுபடி செய்துள்ள வாழைத் தார்களுடன் கூடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முழுவதும் சூறைக்காற்றினால் கீழே சாய்ந்து விழுந்து பாதிப்புக்குள்ளானது. இதனால் பிஞ்சு தருவாயில் உள்ள வாழை காய்கள் மற்றும் ஒரு மாதத்திற்குப் பிறகு அறுவடை செய்ய வேண்டிய வாழைத்தார்களும் கீழே விழுந்து சேதமாகின.

தற்போது சூறைக்காற்றுடன் பெய்த கனமழையினால் வாழைத்தார்கள் கீழே சாய்ந்துள்ளதால், முற்றிலும் நஷ்டத்தைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கீழே சாய்ந்து கிடக்கும் வாழை மரங்கள் மற்றும் வாழைத்தார்களைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாத்தான்குளம் அருகே கிணற்றில் பாய்ந்த ஆம்னி வேன்: 5 பேரும் பலி

சாத்தான்குளம் அருகே கிணற்றில் ஆம்னி வேன் பாய்ந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் சாலையோரம் இருந்த 50 அடி ஆழ கிணற்றுக்குள் சனிக்... மேலும் பார்க்க

சர்ச்சை கருத்து விவகாரம்- மன்னிப்பு கோரினார் செல்லூர் ராஜூ

இந்திய ராணுவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்டுள்ளார். இந்திய நாட்டை கண்ணை இமை காப்பது போல் பாதுகாத்து வரும் என்னுடைய உயிரினும... மேலும் பார்க்க

சென்னையில் சாலை பள்ளத்தில் கவிழ்ந்த கார்

சென்னை தரமணியில் இருந்து திருவான்மியூர் செல்லும் சாலையில் சனிக்கிழமை திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. சிக்னலில் நின்றுக்கொண்டிருந்த கார் பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்ததில் காரில் பயணித்த 5 ... மேலும் பார்க்க

மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி காண்போம்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: "தேசிய கல்விக் கொள்கை - 2020 எனும் மதயானை” என்ற நூலினை தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதியுள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழா இன்று(மே 17) சென்னையில் நடைபெற்றது. ... மேலும் பார்க்க

மின்சார பேருந்துகளில் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்பட மாட்டாது: அமைச்சர் சிவசங்கர்

மின்சார பேருந்துகளில் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்பட மாட்டாது என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.சென்னை வியாசர்பாடி மாநகர போக்குவரத்துக் கழக பணிமனையில் போக்குவரத்து மற்றும் ம... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை?

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று (சனிக்கிழமை) அடுத்த 3 மணி நேரத்துக்கு அதாவது இரவு 7 மணி வரை தமிழ... மேலும் பார்க்க