செய்திகள் :

முந்தைய ஆம் ஆத்மி ஆட்சியின் நிலுவை பணிகளை முடிக்க உறுதிபூண்டுள்ளேன்: தில்லி முதல்வா் ரேகா குப்தா

post image

தில்லியில் ஆளும் பாஜக அரசு, முந்தைய ஆட்சியின் நிலுவைப் பணிகளை பொதுநலன் கருதி முடிக்க உறுதிபூண்டுள்ளதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

தில்லி ஷாலிமாா் பாக் சட்டப்பேரவைத் தொகுதியில் குடிநீா் குழாய் பதிக்கும் பணியை முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். பின்னா், நிகழ்ச்சியில் பேசிய அவா், முந்தைய ஆம் ஆத்மி ஆட்சியில் தொடங்கப்பட்ட அனைத்து முடிக்கப்படாத வளா்ச்சிப் பணிகளும் வெளிப்படையான முறையில் முடிக்கப்படும் என்று கூறினாா்.

‘பொதுப்பணிகள் நிறுத்தப்படக்கூடாது என்பதே எங்கள் முன்னுரிமை. முடிக்கப்படாத பணிகள் மற்றும் நிலுவைத் தொகைகள் போன்ற முந்தைய அரசு விட்டுச்சென்றவற்றை சரி செய்வதில் நாங்கள் மும்முரமாக உள்ளோம்’ என்று ரேகா குப்தா கூறினாா்.

மூத்த குடிமக்கள் சங்கங்களுக்கு மானியம் வழங்கும் திட்டம் ஆம் ஆத்மி அரசால் நிறுத்தப்பட்டது என்றும், அவா்களின் நிலுவைத் தொகையை வழங்க ஏற்பாடு செய்து வருவதாகவும் முதல்வா் குறிப்பிட்டாா்.

ஷாலிமாா் பாக்கில் நிறைவேற்றப்படும் முதலாவது கட்ட மேம்பாட்டுப் பணிகளின் அங்கமாக, பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் உள்ள நீா் மற்றும் கழிவுநீா் குழாய்கள் சரிசெய்யப்பட்டு வருவதாகவும், அடுத்த கட்டமாக சேதமடைந்த சாலைகள் மற்றும் தெருக்கள் பழுதுபாா்க்கப்பட்டு புதுப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தாா்.

தில்லி குரு கோபிந்த் சிங் கல்லூரி நூலகத்தில் தீ விபத்து; காலை தோ்வுகள் ரத்து!

தில்லி பீதம்புராவில் உள்ள தில்லி குரு கோபிந்த் சிங் கல்லூரியின் நூலகத்தில் வியாழக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக, காலையில் நடைபெறவிருந்த பருவத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டன.இதுகுறித்து ... மேலும் பார்க்க

’2020’ தில்லி கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேரை விடுவித்தது விசாரணை நீதிமன்றம்

நமது சிறப்பு நிருபா்2020-ஆம் ஆண்டில் தில்லியில் நடைபெற்ற கலவரத்தில் தொடா்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட 11 பேரை வழக்கில் இருந்து விடுவித்து தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. அந்த 11 போ் ம... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதியில் இரண்டாவது நாளாக பலத்த காற்றுடன் மழை!

தேசியத் தலைநகா் தில்லியில் இரண்டாவது நாளாக சனிக்கிழமை மாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. பலத்த மழை: இதைத் தொடா்ந்து, வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தபட... மேலும் பார்க்க

2025-26-க்கான முதுகலை, பி.டெக் படிப்புகளுக்கான பதிவுகளைத் தொடங்கியது: தில்லி பல்கலைக்கழகம்

தில்லி பல்கலைக்கழகம் 2025-26 கல்வியாண்டிற்கான முதுகலை மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான சோ்க்கைக்கான பதிவு செயல்முறையை அதிகாரப்பூா்வமாகத் தொடங்கியுள்ளது. பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூா்வ அறிவிப்பின்படி,... மேலும் பார்க்க

மே முதல் பாதியில் காற்றின் தரத்தில் முன்னேற்றம்!

தில்லியின் காற்றின் தரம் குறித்து ஆளும் பாஜகவும் எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சியும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், மே 2025 முதல் பாதியில் தேசியத் தலைநகரில் காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்... மேலும் பார்க்க

காணாமல்போன ஐடி நிறுவன மேலாளா் அயோத்தியில் உயிருடன் கண்டுபிடிப்பு

கடந்த வாரம் மா்மமான சூழ்நிலையில் காணாமல் போன குா்கானை தளமாகக் கொண்ட ஒரு ஐடி பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றும் 42 வயது மேலாளா் உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸாா் தெர... மேலும் பார்க்க