செய்திகள் :

பாம்பன் மீனவருக்கு ஜாக்பாட் : இரண்டு `கூறல்’ மீன்கள், ரூ.2.60 லச்சத்துக்கு ஏலம் - என்ன காரணம்?

post image

பாம்பன் தென்கடல் பகுதியில் இருந்து விசைப்படகு மீனவர்கள் நேற்று முன்தினம் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் மன்னார் வளைகுடா கடல் பரப்பில் மீன்பிடித்துவிட்டு நேற்று கரை திரும்பினர். தெற்குவாடி மீன் இறங்கு தளத்திற்கு வந்த படகுகளின் ஒரு மீனவரின் படகில் பிடிபட்ட மீன்களை வலையில் இருந்து எடுத்து கரைக்கு கொண்டு வந்தனர். அதில் சீலா, பாறை, கட்டா, மாவுலா, விலை மீன், நண்டு உள்ளிட்ட மீன்களுடன் அரிய வகை மீனான 'கூறல்' என்ற மீனும் சிக்கியிருந்தது.

பாம்பன் மீனவர்கள் பிடித்து வந்த மீன்கள்

இதையடுத்து அந்த இரண்டு கூறல் மீன்களையும் எடை போட்டு பார்த்த போது அதில் ஒரு மீன்  21 கிலோ எடையும் மற்றொரு மீன் 29 கிலோ எடையும் கொண்டிருந்தது. அந்த மீன்களை பொது ஏலத்தில் விட்ட போது அவற்றை வாங்க  வியாபாரிகள் இடையே கடும் போட்டி நிலவியது. ஏலத்தின் இறுதியில் 21 கிலோ எடை கொண்ட மீனை ரூ.1.10 லட்சத்திற்கும், 29 கிலோ எடை கொண்ட மீனை ரூ. 1.51 லட்சத்திற்கும் வியாபாரி ஒருவர் ஏலம் எடுத்தார்.

இந்த மீனின் குடல் பகுதியில் உள்ள பண்ணா (டியூப்)  போன்ற பகுதி மருத்துவ பயன்பாட்டிற்கு பயன்படும் என்பதால் இந்த அளவிற்கு விலை போவதாக கூறும் மீனவர்கள், 4 ஆண்டுகளுக்கு பிறகு அதிக எடை கொண்ட இந்த கூறல் மீன் சிக்கியிருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறினர்.

மருத்துவ குணம் கொண்ட கூறல் மீன்

கூறல் மீன்கள்

இந்த அரிய வகை மீன் குறித்து நம்மிடம் பேசிய பாம்பன்  நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் எஸ்.பி. ராயப்பன், ''பொதுவாக கூறல் மீன்கள் சேரு எனப்படும் சகதி நிறைந்த குடா பகுதிகளிலேயே காணப்படும். இலங்கை கடல் பரப்பில் கோபுர தீவு என்ற பகுதியில் இவை அதிகளவில் இருக்கின்றன. இதே போல் இந்திய கடல் பரப்பில்  புதுக்கோட்டை மாவட்டம் அம்மா பட்டினம், பாசி பட்டினம் ஆகிய பகுதிகளில் வளர்கின்றன. இந்த மீன் சாப்பிட ருசியாக இருக்கும் அதே வேளையில் இதன் குடல் பகுதியில் உள்ள பண்ணா எனப்படும் டியூப் போன்ற பகுதி அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் மருத்துவ பொருட்களில் ஒன்றாக உள்ளது. அறுவை சிகிச்சையின் போது உடலில் எடுக்கப்படும் தோல் பகுதிகளுக்கு மாற்றாகவும், காயத்திற்கு போடும் தையலுக்கு பயன்படும் நரம்பாகவும் இது பயன்படுவதாக கூறுகின்றனர்.

இந்த கூறல் மீன்களை பிடித்து வரும் மீனவர்கள் அதனை முழுதாகவோ அல்லது வயிற்று பகுதியில் உள்ள அந்த டியூப்பினை மட்டும் தனியாக எடுத்தோ வெயிலில் காய வைக்கின்றனர். பின்னர் அதனை வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர். இந்த மீனின் அளவு கூட கூட விலையும் அதற்கு தகுந்தாற் போல் அதிகரிக்கும்.  ஒரு மீன் 10 கிலோ எடைக்கு அதிகமாக இருந்தால் லட்சகணக்கில் விலை போகும்.

எஸ்.பி.ராயப்பன்

வழக்கமாக சின்ன அளவிலான கூறல் மீன்களே பிடிபடும். எப்போதாவதுதான் பெரிய அளவிலான எடை கொண்ட கூறல் மீன் வலையில் சிக்கும். முன்பெல்லாம் இந்த மீனின் மதிப்பு தெரியாமல் கழிவை போன்று வீசி விடுவோம். அப்படியே விலை போனாலும் கிலோ 5 ரூபாய்க்கு கூட விலை போகாது. தற்போதைய அறிவியல் வளர்ச்சியல் இந்த மீன் இப்போது அரியவகை மீனாக மாறிவிட்டதுடன் அதிகமான தொகைக்கும் விலை போகிறது’’ என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Indonesia: இயேசு கிறிஸ்துவை குறிப்பிட்டு பேசிய திருநங்கை TikTok பிரபலம்; சிறைத் தண்டனை விதித்த அரசு!

இயேசு கிறிஸ்துவின் முடி வெட்டுதல் குறித்து சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்ததற்காக இந்தோனேசியாவில் உள்ள நீதிமன்றம் ஒரு திருநங்கைக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது .டிக்டோக்கில் 4,42,000 க... மேலும் பார்க்க

இனி மாட்டுப்பாலுக்கு பதிலாக கரப்பான்பூச்சிப் பாலா? - என்ன சொல்கிறது ஆய்வறிக்கை?

தலைப்பைப் படித்தவுடன் அருவருப்பாக இருந்தாலும், டிப்லாப்டெரா பவுன்டேட் (Diploptera punctata) என்ற குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த கரப்பான் பூச்சிப்பாலில், பசுவின் பாலை விட மூன்று மடங்கு அதிகமான சத்திருக்க... மேலும் பார்க்க

1988-ல் 10 ரூபாய்க்கு வாங்கப்பட்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் - தற்போதைய மதிப்பு இத்தனை லட்சமா?

சண்டிகரைச் சேர்ந்த ரத்தன் தில்லான் தனது வீட்டை சுத்தம் செய்யும்போது 1988ல் வாங்கிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் குறித்த ஆவணங்களைக் கண்டுபிடித்துள்ளார்.கார் ஆர்வலரான இவர் சமீபத்தில் தனது ட்விட்டர் ப... மேலும் பார்க்க

கர்நாடகா: 'கம்பாலா' திருவிழா... சேறும் சகதியுமான நெல் வயல் பாதையில் சீறி பாய்ந்த எருமைகள்! | Album

கம்பாலா திருவிழாகம்பாலா திருவிழாகம்பாலா திருவிழாகம்பாலா திருவிழாகம்பாலா திருவிழாகம்பாலா திருவிழாகம்பாலா திருவிழாகம்பாலா திருவிழாகம்பாலா திருவிழாகம்பாலா திருவிழாகம்பாலா திருவிழாகம்பாலா திருவிழாகம்பாலா ... மேலும் பார்க்க

`யார் இந்த தண்ணீரை குடிப்பார்கள்?'- கும்பமேளாவிலிருந்து கொண்டுவந்த நீரை குடிக்க மறுத்த ராஜ் தாக்கரே!

உத்தரப்பிரதேச மாநிலம், பிரயக்ராஜ் நகரில் 45 நாள்கள் நடந்த கும்பமேளாவில் 65 கோடி பக்தர்கள் புனித நீராடி இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இக்கும்பமேளாவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் செல்ல தவறவில்ல... மேலும் பார்க்க

Vikatan Weekly Quiz: `இளையராஜா சிம்பொனி டு ஆஸ்கர் விருதுகள்' - இந்த வார ஆட்டத்துக்கு ரெடியா!?

இளையராஜா சிம்பொனி, ஆஸ்கர் விருதுகள், சாம்பியன்ஸ் டிராபி மற்றும் பல அரசியல் நிகழ்வுகள் என இந்த வார சம்பவங்கள் பல பல... அவற்றின் கேள்வித் தொகுப்பாக இந்த வார விகடன் weekly quiz-ல் உங்கள் முன் பல கேள்விகள... மேலும் பார்க்க