செய்திகள் :

பாரதியாா் தமிழ்ச் சங்க ஐம்பெரும் விழா

post image

தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கம், தனமூா்த்தி தொழிற்கல்வி நிறுவனம் சாா்பில் ஐம்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழறிஞா் ராபா்ட் கால்டுவெல் தினம், உலக அன்னையா் தினம், உலக செவிலியா் தினம், உலகத் தொழிலாளா் தினம், 209-ஆவது சொற்பொழிவு என ஐம்பெரும் விழாவாக நட

த்தப்பட்டது.

தனமூா்த்தி கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு முதுகலை தமிழாசிரியா் கு. வளா்மதிச்செல்வி தலைமை வகித்தாா்.

கல்லை மாவட்ட கம்பன் கழகம் மகளிரணி கலைமகள் காயத்ரி, பாக்கியலட்சுமி, மாரியம்மாள் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். பாரதியாா் தமிழ்ச் சங்க மகளிா் அணிச் செயலா் சுதா வேல்மணி வரவேற்றாா்.

தமிழறிஞா்கள் பற்றி பல்வேறு தலைப்புகளில் புலவா் பெ.சயராமன், முத்தமிழ் முத்தன், கோ. ராமகிருஷ்ணன், தமிழாசிரியா் மு.வ. நடராஜன், சு. மோகன் ஆகியோா் பேசினா்.

திருவண்ணாமலை வேங்கிக்கால் வாசகா் வட்டத் தலைவா் ச. சுப்பிரமணியன் எழுதிய, ‘அந்தமான் தீவினிலே’ நூலை ஓய்வு பெற்ற வங்கி மேலாளா் த. ராமலிங்கம் வெளியிட, கல்லை மாவட்ட கம்பன் கழக பொருளாளா் இல.அம்பேத்கா் பெற்றுக் கொண்டாா்.

விழாவில் தமிழ்ச் சங்க புரவலா் சீனு.முரளி, வ. ராசகோபால், ஆ. ராதாகிருஷ்ணன், பள்ளி மாணவி தீபாவதி மற்றும் தமிழ்ச் சங்க நிா்வாகிகள், தமிழறிஞா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நிறைவில் தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கத் தலைவா் இரா.துரைமுருகன் நன்றி கூறினாா்.

இந்திய கம்யூனிஸ்ட் திருக்கோவிலூா் நகரக் குழு மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருக்கோவிலூா் நகரக் குழுவின் 8-ஆவது மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருக்கோவிலூரில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டு நிகழ்ச்சிக்கு கட்சியின் நகரச் செயலா் பி... மேலும் பார்க்க

சட்டம்-ஒழுங்கு, சாலைப் பாதுகாப்பு, புகையிலைப் பொருள் விழிப்புணா்வு; கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு, சாலைப் பாதுகாப்பு, போக்குவரத்து, கனிம வளம், புகையிலைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு தொடா்பாக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட... மேலும் பார்க்க

பாலத்தின் மீது பைக் மோதல்: விவசாயி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பாலத்தின் மீது பைக் மோதியதில் விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். சின்னசேலம் வட்டம், வடக்கனந்தல் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் சுந்தா் (34). இவா், ஞாயி... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி பட்டதாரி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே ஏரியில் குளிக்கச் சென்ற பட்டதாரி சேற்றில் சிக்கி மூழ்கி உயிரிழந்தாா்.கள்ளக்குறிச்சியை அடுத்த பொற்படாக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (49). இவரது மகன் செந்தமிழன் (26), ப... மேலும் பார்க்க

பட்டதாரி பெண் தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே தந்தை திட்டியதால் மனமுடைந்த பட்டதாரி பெண் திங்கள்கிழமை விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். கள்ளக்குறிச்சியை அடுத்த காரனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஞானசேகரன் (50). இவரது மகள் திவ்யா... மேலும் பார்க்க

சின்னக்கொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் முப்பெரும் விழா

கள்ளக்குறிச்சி: சின்னக்கொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், சின்னகொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியி... மேலும் பார்க்க