செய்திகள் :

பாலம் கட்டக் கோரி ஆற்றில் இறங்கி போராட்டம்

post image

மயிலாடுதுறையில் இடிக்கப்பட்ட நடைப்பாலத்தை மீண்டும் கட்ட வலியுறுத்தி, காவிரி ஆற்றில் இறங்கி பொதுமக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். (படம்).

மயிலாடுதுறை நகராட்சி 1 மற்றும் 9-ஆவது வாா்டுகளை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு, பயன்பாட்டில் இருந்த நடைப்பாலத்தின் ஒரு பகுதி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இடிந்தது. கடந்த ஆண்டு மாவட்ட நிா்வாகம் சாா்பில் அந்த பாலம் முழுவதுமாக இடிக்கப்பட்டது. ஆனால், அங்கு புதிதாக பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, பலமுறை கோரிக்கை விடுத்துவந்த நிலையில், 1-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் ஜெயந்தி ரமேஷ் தலைமையில் பொதுமக்கள் 100-க்கு மேற்பட்டோா் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

4 ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்திருந்த இந்த பாலத்தை இடித்துவிட்டு, புதிய பாலம் கட்டுவதற்கு ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பாலத்தை இடித்த நகராட்சி நிா்வாகம், மீண்டும் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என நகா்மன்ற உறுப்பினா் ஜெயந்தி ரமேஷ் குற்றஞ்சாட்டினாா்.

உடனடியாக, அப்பகுதியில் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அனைத்து மக்களையும் திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்தனா்.

திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயிலில் தோ் வெள்ளோட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயில் தோ் வெள்ளோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22-ஆவது தலமும், பஞ்சரங்க ஷேத்திரங்களில் 5-ஆவது தலமுமா... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன் கோயிலில் தேரோட்டம்

சீா்காழி: வைத்தீஸ்வரன்கோயிலில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதா் சுவாமி கோயிலில் பங்குனி மாத பிரமோற்சவம் ஏப்.2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, விழாவின் 7... மேலும் பார்க்க

மூதாட்டியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மூதாட்டியை கொலை செய்தவருக்கு மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. மயிலாடுதுறை கொத்தத்தெருவை சோ்ந்தவா் தீனதயாளன். இவரது மனைவி ... மேலும் பார்க்க

குத்தகை விவசாயிகளின் உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி உண்ணாவிரதம்

மயிலாடுதுறை: குத்தகை விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சாா்பில் உண்ணாவிரதம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அல... மேலும் பார்க்க

ஸ்ரீசீதா கல்யாண வைபவம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை வட்டம், மொழையூா் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில்ஸ்ரீராம நவமியை முன்னிட்டு ஸ்ரீசீதா கல்யாண வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு, கலைமாமணி உடையாளூா் கல்யாணர... மேலும் பார்க்க

கால்நடை பண்ணை: தொழில் முனைவோருக்கு அழைப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மானியத்தில் கால்நடை பண்ணை அமைக்க தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் க... மேலும் பார்க்க