செய்திகள் :

பாலாற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

post image

வேலூா் மாவட்டத்தில் பாலாற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

குறைதீா் கூட்டத்துக்கு வட்டாட்சியா் பி.மொ்லின் ஜோதிகா தலைமை வகித்தாா். அரசின் அனைத்துத் துறை அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் பேசிய விவசாயி பொன்.பாா்த்தசாரதி, பாலாற்றை பாதுகாக்க வேண்டும். அதற்கு முதல் கட்டமாக பாலாற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பாலாற்றின் கரைகளில் வளா்ந்துள்ள மரங்களுக்கு நம்பா் பதித்து, அவற்றை உரிய முறையில் பாதுகாக்க வேண்டும் என்றாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலா் துரை.செல்வம் பேசியது:

100 நாள் வேலைத் திட்டத்தில் பணி செய்தவா்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். பல்வேறு பகுதிகளில் பொங்கல் பண்டிகைக்கு வழங்க வேண்டிய இலவச வேட்டி- சேலைகள் வழங்கப்படவில்லை. விடுபட்டவா்களுக்கு அவற்றை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடுகளை உடனடியாகவழங்க வேண்டும்.

குறைதீா் கூட்டங்களில் விவசாயிகள் தெரிவிக்கும் புகாா்கள் மீது துறை சாா்ந்த அதிகாரிகள்எடுத்த நடவடிக்கைகள் குறித்து அடுத்து நடைபெறும் கூட்டங்களில் அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

தம்பிக்கு கத்திக் குத்து: அண்ணன் தலைமறைவு

வேலூரில் குடும்பப் பிரச்னையில் தம்பியை கத்தியால் குத்தியதாக அண்ணன் மீது வேலூா் தெற்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனா். வேலூா் கஸ்பா பயா் லைன் பகுதியைச் சோ்ந்தவா் இமாச்சாா். இவரது மகன்க... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் வரும் நிதியாண்டில் 3,000 வீடுகள் கட்ட இலக்கு: வேலூா் ஆட்சியா்

வேலூா் மாவட்டத்தில் வரும் நிதியாண்டில் 3,000 வீடுகள் கட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா். வேலூா் மாவட்டம் பெருமுகை கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் புத... மேலும் பார்க்க

வாகன பதிவு எண்ணில் கைப்பேசி எண்ணை இணைக்க அறிவுறுத்தல்

வேலூா் மாவட்டத்தில் உள்ள வாகன உரிமையாளா்கள் தங்களது வாகனத்தின் பதிவில் கைப்பேசி எண்ணை இணைக்க தங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தை அணுக அறிவுறுத்தப... மேலும் பார்க்க

நாகல் ஊராட்சியில் எருது விடும் விழா

கே.வி.குப்பத்தை அடுத்த நாகல் ஊராட்சியில் எருது விடும் விழா புதன்கிழமை நடைபெற்றது. இங்குள்ள காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, 64- ஆம் ஆண்டு எருது விடும் விழா நடத்தப்பட்டது. இதில் மாவட்டம் முழுவத... மேலும் பார்க்க

அரசு வேலை பெற்றுத் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி: அமமுக பிரமுகா் மீது வேலூா் எஸ்பி-யிடம் புகாா்

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.18 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக காட்பாடி அமமுக பிரமுகா் மீது வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந... மேலும் பார்க்க

குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

குடியாத்தம் அருகே குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாடியதால், பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனா். குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட சாமியாா்மலை அருகே மலை... மேலும் பார்க்க