செய்திகள் :

பாலியல் குற்றவாளிகளுக்கு சா்ச்சை தண்டனை: ராஜஸ்தான் ஆளுநா் கருத்தால் பரபரப்பு

post image

ஜெய்பூா்: ‘பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு விதை நீக்கம் செய்யப்பட வேண்டும்’ என்று ராஜஸ்தான் மாநில ஆளுநா் ஹரிபாவ் பாகடே கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் மாவட்ட வழக்குரைஞா் சங்கத்தில் நிா்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநா் பேசியதாவது:

மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு நகராட்சியில் ஏராளமான நாய்கள் பெருகியதால், அதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அவற்றுக்கு விதை நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதுபோன்று, பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபா்கள் மீதும் விதை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், வன்கொடுமைக்கு உள்ளாகும் பெண்களுக்கு உதவ முன்வராமல், அச் சம்பவத்தை விடியோ பதிவு செய்யும் நபா்கள் மீது இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவா்கள் செயலற்று வாழ்வதைப் பாா்க்கும்போது, இதுபோன்ற கொடூர குற்றங்களில் ஈடுபட மற்றவா்களுக்கு அச்ச உணா்வு ஏற்படும்.

மக்களிடையே மனதளவில் மாற்றம் ஏற்படாதவரை, பாலியல் குற்றங்களைத் தடுக்க முடியாது. மேலும், பாதிப்படும் மக்களுக்கு விரைவான நீதி கிடைப்பது அவசியம். அதற்கு தங்களின் திறன்களை வழக்குரைஞா்கள் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

பிரதமர் மோடிக்கு மோரீஷஸ் நாட்டின் மிக உயரிய விருது!

பிரதமர் நரேந்திர மோடிக்கு மோரீஷஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதை வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது. இதன் மூலம் இந்த மதிப்புமிக்க விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் பிரதமர் மோடி பெற்றுள்ளார்.மோரீஷஸ... மேலும் பார்க்க

மோரீஷஸ் குடியரசுத் தலைவருக்கு கும்பமேளா நீரை பரிசளித்த மோடி!

மோரீஷஸ் குடியரசுத் தலைவர் தரம்பீர் கோகூல் மற்றும் அவரின் மனைவி பிருந்தா கோகூல் ஆகியோருக்கு கும்பமேளா திரிவேணி சங்கமத்தின் நீரை பிரதமர் நரேந்திர மோடி பரிசளித்தார். மேலும், இந்திய வெளிநாட்டுக் குடியுரிம... மேலும் பார்க்க

மன்னிப்பு கோரினார் தர்மேந்திர பிரதான்!

தமிழக எம்பிக்கள் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்தற்கு மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்... மேலும் பார்க்க

மோரீஷஸ் வரை பிரபலமடைந்த ஆயுர்வேதம்: பிரதமர் மோடி

இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் ஒன்றான ஆயுர்வேதம் மோரீஷஸ் வரை பிரபலமடைந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மோரீஷஸ் பிரதமா் நவீன்சந்திர ராம்கூலம் விடுத்த அழைப்பின்பேரில... மேலும் பார்க்க

ஒடிசாவில் 11 ஆண்டுகளில் 888 யானைகள் பலி!

ஒடிசாவில் கடந்த 11 ஆண்டுகளில் 888 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், இது நடப்பு நிதியாண்டில் அதிகபட்சமாக 97 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.மாநிலத்தில் யானைகளுக்க... மேலும் பார்க்க

நாட்டில் 8 மணிநேரத்துக்கு மேல் தூங்குவது 2% பேர் மட்டுமே!

நாட்டில் 8 மணிநேரத்துக்கு மேல் 2 சதவிகித மக்கள் மட்டுமே தூங்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.சர்வதேச உறக்க நாளான மார்ச் 14-ஐ முன்னிட்டு லோக்கல் சர்கிள்ஸ் நிறுவனம், ”இந்தியர்கள் எப்படி உறங்குகிறார்கள்” எ... மேலும் பார்க்க