செய்திகள் :

பாலியல் கொடுமைக்கு எதிரான போராட்டம்; சபையை விட்டு வெளியேறி ஐ.டி பணிக்குச் செல்லும் கன்னியாஸ்திரி!

post image

கேரள மாநிலத்தின் சீரோ மலபார் சபையின் கீழ் உள்ள ஜலந்தர் பிஷப்பாக இருந்தவர் பிராங்கோ முளய்க்கல். இவர் மீது கோட்டயம் குருவிலங்காடு மடத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் 2018-ல் ஒரு புகார் அளித்தார். அதில், குருவிலங்காடு மடத்தில் வைத்து 2014 முதல் 2016 வரை 13 முறை பிஷப் பிராங்கோ முளய்க்கல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் கூறியிருந்தார். கன்னியாஸ்திரிகள் வசிக்கும் மடத்தில் பார்வையாளராகச் சென்ற பிஷப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக பிஷப் பிராங்கோ முளய்க்கல் மீது குருவிலங்காடு காவல் நிலையத்தில் கன்னியாஸ்திரி புகார் அளித்தார். ஆரம்பத்தில் போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படவில்லை, சபை தலைமைக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனக் கூறி சக கன்னியாஸ்திரிகள் தெருவில் இறங்கி தொடர் போராட்டங்களை நடத்தினர். அந்த போராட்டத்தில் முன்னிலையில் நின்றவர் கன்னியாஸ்திரி அனுபமா. இதனால் அனுபமா உள்ளிட்ட சில கன்னியாஸ்திரிகளை சபை நிர்வாகம் இடம் மாற்றம் செய்தது. ஆனாலும், போராட்டம் தீவிரமானதை அடுத்து  பிஷப் பிராங்கோ முளய்க்கல் சபையில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். மேலும் அவர் மீது பாலியல் வன்கொடுமை உள்பட 7 பிரிவுகளில் வழக்குப் பதிவும் செய்யப்பட்டது. அந்த வழக்கின்பேரில் 2018 செப்டம்பர் 21-ம் தேதி பிஷப் பிராங்கோ முளய்க்கல் கைதுசெய்யப்பட்டர். பிஷப்புக்கு எதிராக பாதிரியார் குரியகோஸ் கட்டுத்தாரா என்பவர் வாக்குமூலம் அளித்திருந்தார். அவர் 2018-ம் வருடம்  மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

முன்னாள் பிஷப் பிராங்கோ முளய்க்கல்

இந்த வழக்கில் கன்னியாஸ்திரிகள் உள்பட நூறுக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்த்தப்பட்டது. மேலும் 105 நாட்கள் ரகசிய விசாரணையும் நடத்தப்பட்டது. கோட்டயம் அடிஷனல் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்த வழக்கில் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் தீர்ப்பு வெளியானது. அதில், பிஷப் பிராங்கோ முளய்க்கல் மீதான குற்றத்தை நிரூபிப்பதில் அரசு தரப்பு தோற்றுவிட்டதாகக் கூறியதுடன், பிஷப் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து அரசு தரப்பில் ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 2023-ம் ஆண்டு மே மாதம் தனது பிஷப் பதவியை ராஜிநாமா செய்தார் பிராங்கோ முளய்க்கல். பிராங்கோ முளய்க்கல் மீது நடவடிக்கை எடுப்பதுடன், கன்னியாஸ்திரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கன்னியாஸ்திரிகள் வலியுறுத்தி வந்தனர்.

அனுபமா தலைமையில் கன்னியாஸ்திரிகள் நடத்திய போராட்டம்

இந்த நிலையில், கன்னியாஸ்திரிகளின் போராட்டங்களுக்கு தலைமை வகித்த கன்னியாஸ்திரி அனுபமா சபையில் இருந்து வெளியேறியதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஜலந்தர் மறைமாவட்டத்தின் கீழ் உள்ள கோட்டயம் குருவிலங்காட்டில் செயல்பட்டுவரும் கன்னியாஸ்திரி மடத்தில் இருந்து ஒன்றரை மாதங்களுக்கு முன்பு வெளியேறிய கன்னியாஸ்திரி அனுபமா, ஆலப்புழா பள்ளிப்புறத்தில் உள்ள வீட்டுக்கு திரும்பி உள்ளார். எம்.எஸ்.டபிள்யூ படித்துள்ள அனுபமா பள்ளிப்புறம் இன்போ பார்க்கில் உள்ள ஐ.டி கம்பெனியில் டேட்டா எண்ட்ரி வேலைக்கு சேர்ந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். இது பற்றி அனுபமா நேரடியாக எந்த கருத்தையும் வெளிப்படுத்தவில்லை.

பொள்ளாச்சி: கொலை வழக்கில் கைதானவர்களிடம் 18 பவுன் நகை, 1.50 லட்சம் பணம் கையாடல்- உதவி ஆய்வாளர் கைது

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ரத்தின சபாபதிபுரம் பகுதியில் ஒரு மனநல காப்பகம் செயல்பட்டு வந்தது. சூலூர் அருகே உள்ள கரவளி மாதப்பூர் பகுதியைச் சேர்ந்த வருண்காந்த் என்ற ஆட்டிசம் பாதிக்கப்பட்ட இளைஞர் இங்கு அன... மேலும் பார்க்க

Tiger: பைக்காரவை தொடர்ந்து முதுமலையில் இறந்து கிடந்த ஆண் புலி... தொடரும் சோகம்!

வங்கப் புலிகளின் வாழிடத்தில் உலக அளவில் மிக முக்கிய பகுதியாக நீலகிரி உயர்ச்சூழல் மண்டலம் விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் முதுமலை& சத்தியமங்கலம் , கேரளாவின் முத்தங்கா, கர்நாடகாவின் பந்திப்பூர் ஆகிய... மேலும் பார்க்க

தூத்துக்குடி: கார் மோதி இளைஞர் பலி; வழக்கிலிருந்து தப்பிக்க காரை விற்ற நால்வர் சிக்கியது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சிலோன் காலனியைச் சேர்ந்தவர் ரவிராஜ்குமார். இவர், சொந்தமாக போர்வெல் லாரி வைத்துள்ளார். கடந்த 22-ம் தேதி இரவு தனது பைக்கில் தூத்துக்குடியில் இருந்து அவரது... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: போர்க்கப்பல்களை உளவு பார்த்த மும்பை பொறியாளர் கைது; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

மும்பை டாக்யார்டு கப்பல் கட்டும் தளத்தில் இந்தியக் கடற்படைக்குத் தேவையான போர்க்கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் தனியார் நிறுவனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அது போன்ற ஒரு தனியார் நிறுவனத்தில் பணி... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: முன்னாள் காதலியுடனான உறவைத் தட்டிக்கேட்ட மனைவி; விஷ ஊசி போட்டுக் கொன்ற ராணுவ வீரர்

மகாராஷ்டிரா மாநிலம் துலே அருகில் உள்ள வால்வாடி என்ற இடத்தைச் சேர்ந்தவர் கபில் பாகுல். இவரது மனைவி பூஜா(38). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கபில் பாகுல் ராணுவத்தில் கிளார்க்காக இருக்கிறார... மேலும் பார்க்க

சென்னை: "உன் காதலியை மறந்துவிடு" - சினிமா உதவி இயக்குநரைக் கடத்திய கும்பல்; தட்டித் தூக்கிய போலீஸ்

சென்னை அரும்பாக்கம் கோலபெருமாள்பள்ளி தெருவில் வசித்து வருபவர் சினிமா இயக்குநர் சுசீந்திரன். இவரிடம் உதவி இயக்குநராக ராஜகுமரன் என்பவர் பணியாற்றி வருகிறார்.இவரைக் கடந்த 29.5.2025-ம் தேதி மதியம் முதல் கா... மேலும் பார்க்க