செய்திகள் :

பாலியல் தொல்லை கொடுத்த தாத்தா; எட்டி உதைத்துத் தள்ளிய பேத்திகள்; போக்சோ வழக்கில் முதியவருக்குச் சிறை

post image

சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த பெண்ணுக்கு 19 வயதிலும் 11 வயதிலும் இரண்டு மகள்கள். கணவர் வெளிநாட்டில் வேலை செய்ததால் 74 வயதான மாமனாரும் அந்த வீட்டில் வசித்து வந்தார்.

கைது
கைது

தினமும் அதிகாலை 5 மணிக்குப் பக்கத்திலுள்ள ஆலையில் வேலைக்கு அந்தப் பெண் சென்றுவிட, மகள்கள் இருவரும் தயாராகி கல்லூரிக்கும், பள்ளிக்கும் சென்று வந்தார்கள்.

சமீபகாலமாக மருமகள் வேலைக்குச் சென்றதும் வீட்டில் இருக்கும் முதியவர் கல்லூரியில் பயிலும் பேத்தியிடம் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். அவர் கல்லூரிக்குச் சென்றதும், பள்ளிக்குச் செல்லும் 11 வயது பேத்தியிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

முதலில் அதன் நோக்கம் புரியாத இரண்டு பெண் பிள்ளைகளும், அதன் விபரீதத்தைப் புரிந்துகொண்டு இரண்டு நாட்களுக்கு முன் தாத்தாவை எட்டி உதைத்து அடித்துத் தள்ளிவிட்டு, பள்ளி ஆசிரியையிடமும், தாயிடமும் தங்களுக்கு நடந்த தொந்தரவுகளைத் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் குழந்தைகள் நல அலுவலருக்குத் தகவல் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தாய் புகார் அளிக்க, விசாரணை நடத்திய காவல்துறையினர் போக்சோ சட்டப்பிரிவில் கீழ் வழக்குப்பதிவு செய்து முதியவரை சிறையில் அடைத்தனர்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

நம் வீட்டிலோ, அருகாமையிலோ, பள்ளியிலோ, வேலை செய்யும் இடத்திலோ, பயணத்திலோ பெரியவர், சிறியவர், உறவினர், தெரிந்தவர் யாராக இருந்தாலும், நம் பெண் பிள்ளைகளிடமும், சிறுவர்களிடமும் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க வேண்டும். குழந்தைகளிடமும் மனம் விட்டுப் பேச வேண்டும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

நீலகிரி: பழங்குடி மாணவருக்கு ராகிங் தொல்லை, 3-ம் ஆண்டு மாணவர்கள் 6 பேர் சஸ்பெண்டு - என்ன நடக்கிறது?

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகில் உள்ள பைக்காரா பகுதியைச் சேர்ந்த தோடர் பழங்குடியின இளைஞர் ஒருவர் கூடலூரில் உள்ள அரசு கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வருகிறார். புதிதாகக் கல்லூரியில் சேர்ந்திருக்கும் இந... மேலும் பார்க்க

உடுமலைப்பேட்டை: விசாரணைக்கு சென்றவர் உயிரிழப்பு; வனத்துறை சித்ரவதையா? - மலைவாழ் மக்கள் சொல்வதென்ன?

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மேல்குருமலை பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (45). இவர் மீது கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கஞ்சா க... மேலும் பார்க்க

"நானும் கவினும் உண்மையா காதலிச்சோம்; தவறா பேசாதீங்க" - நடந்ததை விவரிக்கும் கவின் காதலி

திருநெல்வேலியில் பட்டியலினத்தைச் சேர்ந்த கவின் என்பவரை, காவல்துறை அதிகாரிகளான சரவணன் - கிருஷ்ணவேணி தம்பதியினரின் மகனும். கவினின் காதலியின் சகோதரருமான சுர்ஜித் ஜூலை 27-ம் தேதி கொடூரமாக ஆணவக்கொலை செய்த ... மேலும் பார்க்க

`நெல்லை கவின் ஆணவக்கொலை' - எவிடென்ஸ் அமைப்பு ஆய்வறிக்கை சொல்வதென்ன?

"நான்கு வெட்டுகளிலேயே கவினுக்கு உயிர் போயிருக்கிறது, கூலிப்படையினரைப்போல அவனது அரிவாள் வெட்டு இருந்திருக்கிறது. அப்படியென்றால் இது திட்டமிடப்பட்ட கூட்டாக சதி செய்த படுகொலையாகவே தெரிகிறது." என்று எவிடெ... மேலும் பார்க்க

தலைக்கேறிய மது போதை; இளைஞரைக் கொன்று எரித்த நண்பர்கள்... கோவையில் அதிர்ச்சி!

மதுரை மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் சுரேஷ்குமார் (28). இவர் கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள காங்கேயம்பாளையம் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது நண்பர்களான ரகுபதி (24), முத... மேலும் பார்க்க

சென்னை: ரயில் நிலையத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு - சிசிடிவி-யைப் பார்த்ததும் அடையாளம் கண்ட போலீஸ்!

சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் ரோஸி (40) இவர், சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். பணி முடிந்து நேற்று மாலை வீட்டுக்குச் செல்ல பெருங்குடி ரயில் நிலையத்தில் க... மேலும் பார்க்க