செய்திகள் :

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜெயின் துறவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

post image

ஜெயின் துறவி சாந்திசாகருக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரிலுள்ள திமாலியாவாத் பகுதியிலிருக்கும் ஜெயின் ஆலயத்தில் துறவியாக இருந்தவர் சாந்திசாகர் (57).

சாந்திசாகரின் பிரசங்கத்தைப் பார்ப்பதற்காக அந்த ஆலயத்துக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 1 அன்று வதோதராவிலுருந்து ஒரு குடும்பத்தினர் கல்லூரியில் படித்துவந்த தங்களது 19 வயது பெண்ணுடன் சென்றிருந்தனர்.

அப்போது, பிரசங்கம் இரவில்தான் நடக்குமென்று தெரிவித்த சாந்திசாகர் அவர்களை அங்கு தங்குமாறு கூறியிருக்கிறார்.

அந்தக் குடும்பத்தினரிடம் சடங்குகளைச் செய்வதாகக் கூறி அவர்களை சந்தனமரக் கட்டைகளால் சூழப்பட்ட வட்டத்திற்குள் அமரச்செய்த சாந்தி சாகர் மந்திரங்களை உச்சரிக்குமாறும் தன்னுடைய அனுமதியின்றி வெளியே வரக்கூடாது என்றும் கூறினார்.

மேலும், அந்தப் பெண்ணை மட்டுமே தனியே அழைத்துச் சென்ற அவர், தன்னை ஒரு நண்பனைப் போல நினைத்துக் கொண்டு பூஜை செய்வதற்காக நிர்வாணமாக புகைப்படம் எடுத்து அனுப்புமாறு கூறியுள்ளார்.

பின்னர், அந்தப் பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரருக்கு தனித்தனியே அறை அமைத்துக் கொடுத்த சாந்திசாகர் அந்தப் பெண்ணை தனி அறைக்கு அழைத்துச் சென்று “உன் பெற்றோர் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்தாயா? நான் சொல்வதைக் கேட்காவிட்டால் அவர்கள் இறந்துவிடுவார்கள்” எனக் கூறி மிரட்டியிருக்கிறார்.

பின்னர் அந்தப் பெண்ணை அறையில் வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். இதனால், அந்தப் பெண்ணின் பிறப்புறுப்பு மற்றும் வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் சாந்திசாகர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததை வெளியே கூறியதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சாந்திசாகர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம், மருத்துவ அறிக்கை, 32 சாட்சிகளின் வாக்குமூலம் ஆகியவை இந்த வழக்கை மேலும் வலுப்படுத்தியது.

இந்த நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு சூரத் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் சாந்திசாகருக்கு இன்று 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் சாந்தி சாகர் சிறையில் இருப்பதால் அவருக்கு இன்னும் 2.5 ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை மீதமுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | 2,800 கைதிகளுக்கு ஒரே மருத்துவர்: ஹரியாணா சிறையின் அவலநிலை!

சுத‌ர்​ச‌ன் ப‌ட்நா​ய‌க்​கி‌ற்கு பிரி‌ட்டனி‌ல் சா‌ண்‌ட் மா‌ஸ்​ட‌ர் விருது!

​உ​ல​க‌ப் புக‌ழ்​ù‌ப‌ற்ற‌ மண‌ல் சி‌ற்​ப‌க் கலை​ஞ‌ர் சுத‌ர்​ச‌ன் ப‌ட்நா​ய‌க்​கி‌ற்கு பிரி‌ட்​ட​னி‌ல் 'ஃபிரெ‌ட்டாரி‌ங்​ட‌ன் சா‌ண்‌ட் மா‌ஸ்​ட‌ர்' விருது வழ‌ங்​க‌ப்​ப‌ட்​டு‌ள்​ளது.பிரி‌ட்​ட​னி‌ல் உ‌ள்ள டா... மேலும் பார்க்க

போா்ச்சுகல், ஸ்லோவாகியா நாடுகளுக்கு குடியரசுத் தலைவா் அரசுமுறை பயணம்!

போா்ச்சுகல், ஸ்லோவாகியா ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு 4 நாள்கள் அரசுமுறை பயணமாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றாா். இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான அமெரிக்காவின் கடுமைய... மேலும் பார்க்க

மசூதியில் ஜெலட்டின் குச்சிகளை வெடிக்க வைத்த இருவா் மீது பயங்கரவாத வழக்கு

மகாராஷ்டிர மாநிலத்தில் மசூதியில், பாறைகளைத் தகா்க்க பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சிகளை வெடிக்க வைத்த வழக்கில் கைதான இருவா் மீதும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய... மேலும் பார்க்க

ராம நவமி: நாடு முழுவதும் கொண்டாட்டம்!

கடவுள் ராமா் அவதரித்த ராம நவமி தினம் (ஏப்.6) நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமா் கோயிலில் குழந்தை ராமரின் நெற்றியில் சூரிய திலகம் ஒளிரும் நிகழ்வ... மேலும் பார்க்க

4 மாதங்களுக்கு பிறகு உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டாா் தல்லேவால்!

பஞ்சாப் விவசாயத் தலைவா் ஜக்ஜீத் சிங் தல்லேவால் 4 மாதங்களுக்கு பிறகு உண்ணாவிரத போராட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைவிட்டாா். விவசாயிகளின் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அள... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டத்துக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்: அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம்!

வக்ஃப் திருத்தச் சட்டத்தை முழுமையாகத் திரும்பப் பெறும் வரையில் அனைத்து மத, சமூக அமைப்புகளுடன் இணைந்து நாடு தழுவிய போராட்டத்தை நடத்துவோம் என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) ... மேலும் பார்க்க