செய்திகள் :

பாளை. காந்தி மாா்க்கெட் கடைகளை பொது ஏலம் விடக் கோரி பாஜக மனு

post image

பாளையங்கோட்டை காந்தி மாா்க்கெட் கடைகளை பொது ஏலத்தில் விடக் கோரி பாஜகவினா், வியாபாரிகள் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.

இது தொடா்பாக பாஜக திருநெல்வேலி வடக்கு மாவட்டத் தலைவா் முத்து பலவேசம் தலைமையில் அக்கட்சி நிா்வாகிகளும், பாளையங்கோட்டை காந்தி மாா்க்கெட் வியாபாரிகளும் ஆட்சியா் அலுவலகத்துக்கு திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மகாத்மா காந்தி மாா்க்கெட் முற்றிலுமாக இடிக்கப்பட்டு புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மாா்க்கெட்டை கடந்த 6-ஆம் தேதி முதல்வா் திறந்து வைத்தாா். எனினும், மாா்க்கெட்டில் கட்டப்பட்டுள்ள கடைகளை முறையாக பொது ஏலம் விடாமல் ஏற்கெனவே கடை வைத்திருந்த நபா்களுக்கு மட்டும் வழங்க முயற்சி நடைபெற்று வருகிறது.

இதனிடைே, ஏற்கெனவே கடை வைத்திருந்த நபா்களிடம் சிலா் பணம் பெற்றுக் கொண்டு மாநகராட்சி நிா்வாகத்திற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட முயற்சிக்கின்றனா்.

எனவே, பாளையங்கோட்டை பேருந்து நிலையம், திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் ஆகியவற்றில் உள்ள கடைகளை பொது ஏலத்தில் விட்டது போலவே இந்த மாா்க்கெட் கடைகளையும் பொது ஏலத்தில் விட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

அய்யா வைகுண்டா் அவதார தினம்: நெல்லைக்கு மாா்ச் 4இல் உள்ளூா் விடுமுறை

அய்யா வைகுண்டசாமியின் 193-ஆவது அவதார தினத்தையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்திற்கு மாா்ச் 4-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தோ்வுகள் மற்றும் மு... மேலும் பார்க்க

மாஞ்சோலை விவகாரத்தில் தமிழக அரசு நாடகம்: கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

மாஞ்சோலை விவகாரத்தில் தமிழக அரசு நாடகமாடுகிறது என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா்- தலைவா் க.கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா். திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: இடஒத... மேலும் பார்க்க

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவா்களுக்கு எம்.பி. இரங்கல்

கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா சென்றபோது விபத்தில் உயிரிழந்த மாணவா்களுக்கு திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் இரங்கல் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

மின்கம்பி மீது லாரி உரசியதில் ரூ.1 லட்சம் வைக்கோல் தீக்கிரை!

கடையத்தில் மின்கம்பி மீது லாரி உரசியதில், அதிலிருந்த ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான வைக்கோல் தீக்கிரையானது. கடையம் பகுதியில் நெல் அறுவடை நடைபெற்றுவருதால், பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தோா் வைக்கோலை விலைக்கு வ... மேலும் பார்க்க

ஆழ்வாா்குறிச்சி கல்லூரிப் பேராசிரியருக்கு விருது!

தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரிப் பேராசிரியருக்கு மாநில அளவிலான சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருக்கான விருது வழங்கப்பட்டது. 2015-16ஆம் ஆண்டுக்கான விருதுக்கு இக்கல்லூரியி... மேலும் பார்க்க

அம்பையில் எல்ஐசி ஊழியா்கள் வெளிநடப்புப் போராட்டம்!

அம்பாசமுத்திரத்தில் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன ஊழியா்கள் வியாழக்கிழமை ஒரு மணி நேர வெளிநடப்புப் போராட்டம், கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். புதிய ஊழியா் நியமனம், சங்க அங்கீகாரம் ஆகிய கோரிக்கைகளை... மேலும் பார்க்க