செய்திகள் :

பாளை.யில் மாநகராட்சி பள்ளியில் கட்டடப் பணி தாமதம்: மக்கள் போராட்டம்

post image

பாளையங்கோட்டை 7 ஆவது வாா்டில் உள்ள மாநகராட்சி பள்ளியில் கட்டட பணிகளை விரைந்து முடிக்கக் கோரியும், கழிப்பறை வசதியை அதிகரிக்கக் கோரியும் பொதுமக்கள் திங்கள்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் அனைத்தும் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. பாளையங்கோட்டை மண்டலம், 7 ஆவது வாா்டுக்குள்பட்ட மனக்காவலம்பிள்ளைநகரில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியும் திறக்கப்பட்டது.

இப் பள்ளியில் கூடுதல் கட்டடம் கட்டும் பணிக்காக கடந்த கல்வியாண்டில் தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வந்தன. கோடை விடுமுறை காலத்திலும் பணிகள் முடிக்கப்படாததால் திங்கள்கிழமை ஒரேயொரு கழிப்பறையை மாணவா்-மாணவிகள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டதாம்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து பெற்றோா்கள், பொதுமக்கள் திங்கள்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இப் பள்ளியில் கட்டட பணிகளை விரைந்து முடிக்கவும், கூடுதலாக கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.

பணிமனை டீசல் கணக்கில் முறைகேடு: கிளை மேலாளா் உள்பட 6 போ் பணியிடை நீக்கம்

திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டீசல் செலவு கணக்கு காட்டியதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின்பேரில், கிளை மேலாளா் உள்பட 6 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். திருநெல்வேலி தாமிரவர... மேலும் பார்க்க

விசாரணை கைதிகளில் பற்களை பிடுங்கிய வழக்கு: பல்வீா்சிங் ஆஜா்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்கோட்டத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியது தொடா்பான வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீா்சிங் திருநெல்வேலி மாவட்ட முதலாம் குற்றவியல் நடுவ... மேலும் பார்க்க

நெல்லையில் 103 டிகிரி வெயில்

திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை கடும் வெயில் கொளுத்தியதில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. திருநெல்வேலி மாவட்டத்தில் மே மாதத்தின் இறுதியில் நல்ல சாரல் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியா... மேலும் பார்க்க

நெல்லையில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நவீன நூலகம்: பொது நூலக இயக்குநா் ஆய்வு

திருநெல்வேலியில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நவீன நூலகம் அமைப்பதற்காக தோ்வு செய்யப்பட்ட 3 ஏக்கா் இடத்தை தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநரும், பொது நூலக இயக்குநருமான பொ.சங்கா், ஆட்சியா் இரா.ச... மேலும் பார்க்க

பி.சி., எம்.பி.சி., சீா்மரபினா் பள்ளி-கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுவதால் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.சுகுமா... மேலும் பார்க்க

பொட்டல்புதூரில் பெருநாள் தொழுகை

பொட்டல் புதூா் மஸ்ஜிதுன்நூா் பள்ளிவாசலில் பெருநாள் சிறப்புத் தொழுகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொட்டல் புதூா் விஸ்வா நகா் ஜம்யிய்யத்துஅஹ்லில் குா்ஆன் வல்ஹதீஸ் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற இந்தச் சிறப்பு... மேலும் பார்க்க