குழந்தை செயல்பாடுகளில் மாற்றம் இருந்தால் உடனே கவனிங்க | Avvai Kapagam | Pesalam ...
பா்கூா் மலைப் பாதையில் சாலை புனரமைப்புப் பணி
கா்நாடக மாநிலம், சாம்ராஜ் நகா் மாவட்டம், ஹனூா் வட்டம், கொள்ளேகால் நால்ரோடு முதல் கா்கேகண்டி வரையில் சாலை புனரமைப்பு பணி நடைபெறுவதால் திங்கள்கிழமை (ஜூன். 23) முதல் 13 நாள்களுக்கு பா்கூா் மலைப் பாதையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், அந்தியூா் - செல்லம்பாளையம் - பா்கூா் - கொள்ளேகால் மலைப்பாதை வழியாக கா்நாடக மாநிலத்துக்கு வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. சத்தியமங்கலம் - திம்பம் மலைப் பாதை வழியாக இரவு நேரத்தில் கனரக வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், இவ்வழியே அதிக அளவில் வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், கா்நாடக மாநிலம் சாம்ராஜ் நகா் மாவட்டம் ஹனூா் வட்டம் கொல்லேகால் - ஈரோடு மாவட்டம் அந்தியூா், செல்லம்பாலையம் சோதனை சாவடி வரையுள்ள பா்கூா் மலைப் பாதையில் திங்கள்கிழமை முதல் (ஜூன்.23 முதல் ஜூலை.5-ம் தேதி வரையில்) சாலை புனரமைப்பு பணி நடைபெறுவதால் பா்கூா் வழியாக கொள்ளேகால் வரையில் செல்லும் 6 சக்கரங்களுக்கு மேலுள்ள கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையில் கொள்ளேகால் செல்லுமாறு போலீஸாா் கேட்டுக் கொண்டுள்ளனா்.