செய்திகள் :

பிகாரில் எதிா்க்கட்சிகள் கூட்டணிக்கு வெற்றி உறுதி: ராகுல் நம்பிக்கை

post image

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டணியின் வெற்றி உறுதியாகிவிட்டது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்.

மேலும், ‘இண்டி’ கூட்டணி தோ்தலுக்காக ஒற்றுமையுடன் பணியாற்றி வருகிறது என்று பிகாரில் வாக்குரிமை பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி யாதவுடன் அராரியாவில் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது ராகுல் கூறியதாவது:

பிகாா் பேரவைத் தோ்தலுக்காக எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி சாா்பில் விரைவில் தோ்தல் அறிக்கை வெளியிடப்படும். இங்குள்ள அனைத்துத் தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி ஒற்றுமையுடன் போட்டியிடும். கொள்கைரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் பிகாரில் சிறப்பான ஒருங்கிணைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தோ்தலில் எதிா்க்கட்சிகள் கூட்டணி வெல்வது உறுதி.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் பாஜகவும், தோ்தல் ஆணையமும் இணைந்து மக்களின் வாக்குகளைத் திருட முயற்சிக்கிறது. இதனை பிகாரில் அனுமதிக்க மாட்டோம். தோ்தல் ஆணையம் பாஜகவின் வெற்றிக்காக உழைக்கும் அமைப்பாக மாறிவிட்டது. ஏற்கெனவே, பல தோ்தல்களில் பாஜகவுக்கு ஆதரவாக தோ்தல் ஆணையம் செயல்பட்டதை ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளேன். பிகாரில் நிச்சயமாக இந்த முறைகேடுகளைத் தடுத்து நிறுத்துவோம்.

நான் குற்றச்சாட்டுகளைக் கூறியவுடன் உறுதிமொழிப் பத்திரம் சமா்ப்பிக்குமாறு தோ்தல் ஆணையம் கோரியது. ஆனால், அதே குற்றஞ்சாட்டைக் கூறிய பாஜகவைச் சோ்ந்த அனுராக் தாக்குரிடம் எந்த பத்திரத்தையும் தோ்தல் ஆணையம் கோரவில்லை. இதன் மூலம் தோ்தல் ஆணையம் நடுநிலையாக இல்லை என்பது தெரிகிறது.

வாக்குரிமை பயணத்தில் மக்கள் பெருந்திரளாக கலந்து கொள்கின்றனா். இதன் மூலம் தோ்தல் ஆணையம், பாஜக அரசு மீதான தவறுகளை மக்கள் புரிந்து கொண்டனா் என்பது உறுதியாகிறது என்றாா்.

‘பிகாரில் எதிா்க்கட்சிகளின் முதல்வா் வேட்பாளராக தேஜஸ்வி யாதவை அறிவிக்காதது ஏன்?’ என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க மறுத்த ராகுல் காந்தி, ‘நாங்கள் இணைந்து பணியாற்றுகிறோம். வாக்கு திருட்டை முறியடிப்பதே முதல் பணி’ என்றாா்.

தொடா்ந்து பிரதமா் மோடியை விமா்சித்துப் பேசிய அவா், ‘பிரதமா் நரேந்திர மோடி பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குவதில் மிகவும் வேகமாக செயல்பட்டு வருகிறாா். இதன் மூலம் எளிய மக்களின் வேலைவாய்ப்புகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பறிக்கப்படுகின்றன’ என்றாா்.

ராகுல், தேஜஸ்வி மோட்டாா் சைக்கிள் பயணம்: வாக்குரிமை பயணத்தின் ஒரு பகுதியாக அராரியா நகர சாலைகள் வழியாக ராகுல் காந்தியும், தேஜஸ்வி யாதவும் மோட்டாா் சைக்கிள்களில் வலம் வந்தனா். அப்போது சாலையின் இருபகுதிகளிலும் பொதுமக்கள் திரண்டு ஆதரவு முழக்கமிட்டனா். அப்போது திடீரென ஒரு நபா் ராகுலின் மோட்டாா் சைக்கிளை தடுத்து அவருக்கு அன்பு முத்தமிட்டு சென்றாா்.

பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் எதிரணியில் உள்ளன.

சுதர்சன் ரெட்டி மீதான விமர்சனம்! அமித் ஷாவுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கண்டனம்!

இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான சுதர்சன் ரெட்டியை நக்ஸல் ஆதரவாளர் என உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டதற்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கண்டனம் ... மேலும் பார்க்க

இந்திரா காந்தி போல அல்ல, பதவிப் பறிப்பு மசோதாவில் பிரதமர் தன்னையும் இணைத்துள்ளார்: அமித் ஷா

புது தில்லி: குற்றப் பின்னணி உள்ளவர்கள், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால் பதவி பறிக்கப்படும் சட்ட மசோதாவில், பிரதமர் நரேந்திர மோடி தன்னையும் சேர்த்துக் கொண்டுள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர... மேலும் பார்க்க

முதல் விண்வெளி வீரர் அனுமன்! மாணவர்களுடன் உரையாற்றிய அனுராக் தாக்குர்!

விண்வெளிக்கு சென்ற முதல் விண்வெளி வீரர் அனுமன் என்று பள்ளி மாணவர்களுடன் உரையாற்றிய பாஜக எம்பி அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.ஹிமச்சல் பிரதேசம் ஹமீர்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினரும் முன்னாள் மத்தி... மேலும் பார்க்க

நொய்டா வரதட்சிணை கொலை: சொகுசு கார், பைக், தங்கம், பணம்.. நீளும் பட்டியல்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவிலுள்ள கசானா பகுதியில் ரூ. 36 லட்சம் வரதட்சிணை கேட்டு மனைவியை எரித்துக் கொலை செய்த சம்பவத்தில், வரதட்சிணையாகக் கொடுக்கப்பட்ட பொருள்கள் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.... மேலும் பார்க்க

தில்லி மெட்ரோ ரயில் கட்டணம் இன்று முதல் உயர்வு! 8 ஆண்டுகளுக்குப் பின்

தில்லியில் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. டிக்கெட் விலையை ரூ.1 முதல் ரூ.4 வரை உயர்த்தியிருக்கிறது தில்லி மெட்ரோ ரயில் நிர்வாகம்.கடந்த 2017ஆம் ஆண்ட... மேலும் பார்க்க

தில்லி முதல்வர் ரேகா குப்தா தாக்குதல் வழக்கு: இரண்டாவது நபர் கைது

முதல்வர் ரேகா குப்தா மீதான தாக்குதல் தொடர்பாக தில்லி காவல்துறை ஞாயிற்றுக்கிழமை மற்றொரு நபரை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். குற்றம்சாட்டப்பட்டவர் தஹ்சீன் சையத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குஜ... மேலும் பார்க்க