செய்திகள் :

பிகார் பேரவைத் தேர்தல்: சுயேச்சையாக போட்டி என தேஜ் பிரதாப் அறிவிப்பு

post image

வரவிருக்கும் பிகார் பேரவைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் அறிவித்துள்ளார்.

பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சிகள் தற்போதே ஆயத்தமாகி வருகின்றன. ஐக்கிய ஜனதா தளம், பாஜக, ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதற்கான வேலைகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டன.

இந்த நிலையில் வரவிருக்கும் பிகார் பேரவைத் தேர்தலில் மஹுவா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் சனிக்கிழமை அறிவித்துள்ளார். முன்னதாக, தேஜ் பிரதாப் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அண்மையில் ஒரு பதிவை வெளியிட்டாா்.

அதில், ‘ஓா் இளம் பெண்ணுடன் உறவில் இருப்பதாக’ பதிவிட்ட அவா், அப்பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிா்ந்தாா். இது பிகாரில் சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை கட்சியில் இருந்தும், குடும்பத்தில் இருந்தும் நீக்குவதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத் தெரிவித்தார்.

இனி கட்சி, குடும்பத்துடன் அவருக்கு எந்தத் தொடா்பும் கிடையாது. அவா் 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கப்படுகிறாா் என்று குறிப்பிட்டார். 2015 முதல் 2020 வரை பேரவைத் தேர்தலில் மஹுவா தொகுதி தொகுதியில் போட்டியிட்ட தேஜ் பிரதாப் 2020-ல் தொகுதி மாறி ஹசன்பூரில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

இருப்பினும் தற்போதும் மஹுவா தொகுதி ராஷ்ட்ரீய ஜனதா தளம்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஆபரேஷன் சிந்தூர்’: மக்களவையில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

‘ஆபரேஷன் சிந்தூர்’ விவாதத்தில் இன்று மாலை பிரதமர் மோடி உரையாற்றவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.நாடாளுமன்றத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மத்திய உ... மேலும் பார்க்க

கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து

கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையையேமன் அதிகாரிகள் நிரந்தரமாக ரத்து செய்துள்ளதாக இந்திய கிராண்ட் முப்தி காந்தபுரம் அபுபக்கர் முஸலியார் அலுவலகம் தெரிவித்துள்ளது.Nimisha Priya's death sentenc... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு 95 லட்சம் சுற்றுலாவாசிகள் பயணம்

புது தில்லி: நிகழாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை, ஜம்மு-காஷ்மீருக்கு 95 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியா்களும், 19,570 வெளிநாட்டவரும் சுற்றுலா சென்றுள்ளனா்.கடந்த ஏப்.22-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பக... மேலும் பார்க்க

பொறுமையை சோதிக்க வேண்டாம்! ம.பி. அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

புது தில்லி: ராணுவ கா்னல் சோஃபியா குரேஷி குறித்து தெரிவித்த சா்ச்சை கருத்துக்காக பொது மன்னிப்பு கேட்காத மத்திய பிரதேச மாநில அமைச்சா் விஜய் ஷாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், ‘எங்கள் ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் கைதான கன்னியாஸ்திரீகளை விடுவிக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்

புது தில்லி: சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்ட கேரளத்தைச் சோ்ந்த 2 கத்தோலிக்க கன்னியாஸ்திரீகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.மேலும், பா... மேலும் பார்க்க

சட்டவிரோத இணையவழி சூதாட்ட வழக்கு: அமலாக்கத் துறை முன் கூகுள் அதிகாரிகள் ஆஜா்

புது தில்லி: சட்டவிரோதமான இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தய தளங்களை விளம்பரப்படுத்தியதாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில், கூகுள் நிறுவன அதிகாரிகள் அமலாக்கத் துறையின்முன் ஆஜராகி விளக்கம் அளித்தனா். சட்டவிர... மேலும் பார்க்க