செய்திகள் :

சத்தீஸ்கரில் கைதான கன்னியாஸ்திரீகளை விடுவிக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்

post image

புது தில்லி: சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்ட கேரளத்தைச் சோ்ந்த 2 கத்தோலிக்க கன்னியாஸ்திரீகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

மேலும், பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினா் திட்டமிட்டு துன்புறுத்தப்படுவதாக அவா் குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சத்தீஸ்கரில் 2 கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள், தாங்கள் பின்பற்றும் மத நம்பிக்கைக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இது அநீதி. பாஜக-ஆா்எஸ்எஸ் ஆட்சியில் சிறுபான்மையினா் திட்டமிட்டு துன்புறுத்தப்படுகின்றனா் என்பதை இது காட்டுகிறது.

மத சுதந்திரம் என்பது அரசமைப்புச் சட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையாகும். கைது செய்யப்பட்ட கன்னியாஸ்திரீகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

சத்தீஸ்கரின் துா்க் ரயில் நிலையத்தில் 2 கன்னியாஸ்திரிகள் உள்பட மூவா், கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்றம் குற்றச்சாட்டுகளின்கீழ் கைது செய்யப்பட்டனா்.

நாராயண்பூா் பகுதியைச் சோ்ந்த மூன்று சிறுமிகளை கட்டாயமாக மதமாற்றம் செய்து, கடத்திச் செல்வதாக உள்ளூா் பஜ்ரங் தளம் அமைப்பைச் சோ்ந்த ஒருவா் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த நடவடிக்கையை எடுத்ததாக ரயில்வே காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக கேரளத்தைச் சோ்ந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) எம்.பி.க்களும் நாடாளுமன்ற வளாகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கேரள கத்தோலிக்க திருச்சபை கண்டனம்: இவ்விவகாரம் தொடா்பாக கேரள கத்தோலிக்க திருச்சபை தனது ‘தீபிகா’ நாளிதழின் தலையங்கத்தில் கடுமையாக விமா்சித்துள்ளது.

அந்தத் தலையங்கத்தில், ‘கன்னியாஸ்திரீகள் மட்டுமல்ல, நாட்டின் மதச்சாா்பற்ற அரசியலமைப்பே பிணைக் கைதியாக சிறைப்பிடித்து வைக்கப்பட்டுள்ளது. எதிா்க்கட்சிகளின் வழக்கமான போராட்டங்களுக்கு மத்தியிலும், நாட்டின் நீதி அமைப்பின் வரம்புகளுக்குள்ளும் மத்தியில் ஆளும் பாஜகவின் ஆதரவுடன் ஒரு ‘ஹிந்துத்துவ தேசம்’ கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதைத் தடுக்க யாரும் இல்லை’ என்று சாடியுள்ளது.

என்ன, 4,000 டன் நிலக்கரியைக் காணவில்லையா? மேகாலயா அமைச்சர் சொல்லும் அதிர்ச்சி பதில்!

மேகாலயத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த நான்கு ஆயிரம் டன் நிலக்கரி காணாமல் போனதாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு, கனமழையில் நிலக்கரி அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு, சுட்டுக்கொன்றது எப்படி?

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை இந்திய ராணுவத்தின் சிறப்புப் படை வீரர்கள் எவ்வாறு அடையாளம் கண்டு சுட்டுக் கொன்றார்கள் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு - காஷ்மீ... மேலும் பார்க்க

காங்கிரஸ் ஆட்சியைப்போல இப்போது அமித் ஷா பதவி விலகுவாரா? - பிரியங்கா காந்தி

காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்ததற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் பதவி விலகியதுபோல உள்துறை அமைச்சர் அமித் ஷா இப்போது பதவி விலகுவாரா? என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கேள்வி எழுப்... மேலும் பார்க்க

தேச பக்தியில் தமிழர்கள் ஒருபோதும் குறைந்தவர்கள் அல்ல: கனிமொழி பேச்சு

தேச பக்தியில் தமிழர்கள் ஒருபோதும் குறைந்தவர்கள் அல்ல என்று மக்களவையில் கனிமொழி எம்.பி. பேசினார். ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் மக்களவையில் பேசிய அவர், "தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தேசப்பற்று இ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருப்பதற்கு நேருவே காரணம்! அமித் ஷா

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருப்பதற்கு நேருவின் போர் கொள்கையே காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.மக்களவையில் நடைபெற்று வரும் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்த விவாதத... மேலும் பார்க்க

வருகிறது செயற்கை தங்கம்! இனி தங்கம் விலை என்னவாகும்?

பெரும்பாலான வேதியியல் விஞ்ஞானிகளின் கனவாக இருப்பது செயற்கை தங்கம்தான். ஆனால் அது கனவாகவே இருந்துவிடுமா? நிஜமாகுமா என்ற கேள்விக்கு அமெரிக்க புத்தாக்க நிறுவனம் ஒன்று பதில் அளித்துள்ளது.நாள்தோறும் பலரும்... மேலும் பார்க்க