செய்திகள் :

சட்டவிரோத இணையவழி சூதாட்ட வழக்கு: அமலாக்கத் துறை முன் கூகுள் அதிகாரிகள் ஆஜா்

post image

புது தில்லி: சட்டவிரோதமான இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தய தளங்களை விளம்பரப்படுத்தியதாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில், கூகுள் நிறுவன அதிகாரிகள் அமலாக்கத் துறையின்முன் ஆஜராகி விளக்கம் அளித்தனா்.

சட்டவிரோதமான இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தய தளங்கள், மக்களின் கடின உழைப்புப் பணத்தை மோசடி செய்து, பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அமலாக்கத் துறை 12-க்கும் மேற்பட்ட வழக்குகளில் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த வழக்குகளில் சில நடிகா்கள், பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரா்களும் அமலாக்கத் துறையின் கண்காணிப்பில் உள்ளனா். அவா்களும் விரைவில் விசாரணைக்கு ஆஜராவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தைய தளங்கள், பல்வேறு சமூக வலைதளங்கள் மற்றும் ஆப் ஸ்டோா்களில் எப்படி விளம்பரப்படுத்தப்படுகின்றன என்பது குறித்து அமலாக்கத் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கூகுள் மற்றும் மெட்டா நிறுவன அதிகாரிகளுக்கு கடந்த ஜூலை 21-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் பிறப்பித்தது. கூடுதல் அவகாசம் கோரியதால், ஜூலை 28-ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, கூகுள் நிறுவன அதிகாரிகள் திங்கள்கிழமை அமலாக்கத்துறை முன் ஆஜராகினா். ஆனால், மெட்டா நிறுவனத்தின் அதிகாரிகள் ஆஜராகவில்லை.

கூகுள் விளக்கம்:

அமலாக்கத் துறை சம்மன் தொடா்பாக கூகுள் செய்தித் தொடா்பாளா் கடந்த வாரம் அளித்த விளக்கத்தில், ‘எங்கள் தளங்களின் பாதுகாப்பில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். சட்டவிரோத சூதாட்ட விளம்பரங்களை தடை செய்கிறோம். தவறான செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து, பயனா்களைப் பாதுகாப்பதற்காக விசாரணை அமைப்புகளுக்கு முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் அளிப்போம்’ என்று தெரிவித்திருந்தாா்.

என்ன, 4,000 டன் நிலக்கரியைக் காணவில்லையா? மேகாலயா அமைச்சர் சொல்லும் அதிர்ச்சி பதில்!

மேகாலயத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த நான்கு ஆயிரம் டன் நிலக்கரி காணாமல் போனதாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு, கனமழையில் நிலக்கரி அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு, சுட்டுக்கொன்றது எப்படி?

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை இந்திய ராணுவத்தின் சிறப்புப் படை வீரர்கள் எவ்வாறு அடையாளம் கண்டு சுட்டுக் கொன்றார்கள் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு - காஷ்மீ... மேலும் பார்க்க

காங்கிரஸ் ஆட்சியைப்போல இப்போது அமித் ஷா பதவி விலகுவாரா? - பிரியங்கா காந்தி

காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்ததற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் பதவி விலகியதுபோல உள்துறை அமைச்சர் அமித் ஷா இப்போது பதவி விலகுவாரா? என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கேள்வி எழுப்... மேலும் பார்க்க

தேச பக்தியில் தமிழர்கள் ஒருபோதும் குறைந்தவர்கள் அல்ல: கனிமொழி பேச்சு

தேச பக்தியில் தமிழர்கள் ஒருபோதும் குறைந்தவர்கள் அல்ல என்று மக்களவையில் கனிமொழி எம்.பி. பேசினார். ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் மக்களவையில் பேசிய அவர், "தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தேசப்பற்று இ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருப்பதற்கு நேருவே காரணம்! அமித் ஷா

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருப்பதற்கு நேருவின் போர் கொள்கையே காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.மக்களவையில் நடைபெற்று வரும் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்த விவாதத... மேலும் பார்க்க

வருகிறது செயற்கை தங்கம்! இனி தங்கம் விலை என்னவாகும்?

பெரும்பாலான வேதியியல் விஞ்ஞானிகளின் கனவாக இருப்பது செயற்கை தங்கம்தான். ஆனால் அது கனவாகவே இருந்துவிடுமா? நிஜமாகுமா என்ற கேள்விக்கு அமெரிக்க புத்தாக்க நிறுவனம் ஒன்று பதில் அளித்துள்ளது.நாள்தோறும் பலரும்... மேலும் பார்க்க