செய்திகள் :

பிகாா்: இறந்ததாக கருதப்பட்ட சிறுவன் உயிருடன் வந்ததால் அதிா்ச்சி

post image

பிகாா் மாநிலம் தா்பங்கா மாவட்டத்தில் இறந்ததாக கருதப்பட்டு உடல்தகனம் செய்யப்பட்ட 17 வயது சிறுவன் உயிருடன் திரும்பியதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

கடந்த பிப்.26-ஆம் தேதி ரயிலில் அடிபட்டு அந்த சிறுவன் உயிரிழந்ததாக கருதி அவரது குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், தா்பங்கா மாவட்ட நீதிமன்றத்தில் அந்த சிறுவன் வியாழக்கிழமை திடீரென ஆஜரானாா். அப்போது தான் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தபோது மூன்று அல்லது நான்கு போ் தன் வாயில் துணியை கட்டி கடத்தியதாக சிறுவன் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், ‘என்னை கடத்தி நேபாளத்துக்கு கொண்டு சென்றுவிட்டனா். அவா்களிடம் இருந்து தப்பித்து எனது சகோதரரை விடியோ அழைப்பு மூலம் தொடா்புகொண்டேன். நேபாளத்துக்கு நேரடியாக வந்த எனது சகோதரா் என்னை இந்தியாவுக்கு அழைத்து வந்தாா்’ என நீதிமன்றத்தில் தெரிவித்தாா்.

இந்தியா வந்த சிறுவன் காவல் துறையிடம் தகவல் தெரிவிக்காமல் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜரானாா்.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளா்களிடம் தா்பங்கா காவல் துறை கூறியதாவது: சிறுவன் உயிரிழந்ததாக கருதி அவருக்குப் பதில் உடல்தகனம் செய்யப்பட்டவரை அடையாளம் காணவும் முயற்சி செய்து வருகிறோம். கடத்தப்பட்டதாக சிறுவன் கூறிய நிலையில் அவரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது.

கடந்த பிப்.26-ஆம் தேதி அல்லால்பட்டி பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் சிதைந்த நிலையில் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த உடல் காணாமல் போன சிறுவனுடையது என அதிகாரிகள் உறுதிப்படுத்தியதையடுத்து, சிறுவனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது’ என்றாா்.

முன்னதாக, சிறுவன் காணாமல் போனதாக கடந்த பிப்.8-ஆம் தேதி அவரது குடும்பத்தினா் காவல் துறையில் புகாரளித்ததாக உள்ளூா் மக்கள் தெரிவித்தனா்.

குறைந்த விலையில் 5ஜி! வோடாஃபோன் ஐடியா அதிரடி அறிவிப்பு!

வோடாஃபோன் ஐடியா நிறுவனம் குறைந்த விலையில் 5ஜி திட்டத்துக்கான சலுகைகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் 5ஜி இணைய சேவையை வோடாஃபோன் ஐடியா நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. தற்போது மும்பையில் மட்டுமே முழ... மேலும் பார்க்க

விடைத்தாளுடன் ரூ. 500: ஆசிரியர்களுக்கு கோரிக்கை வைத்த 10ஆம் வகுப்பு மாணவர்கள்!

பெலகாவியில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாளில் செய்த செயல் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி ந... மேலும் பார்க்க

தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!

மத்திய பிரதேசத்தில் தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.மத்திய பிரதேசம் மாநிலம் போபால் நகரில் வாகனச் சோதனையின்போது, 33 வயதான பெண்ணிடம் காவல் அத... மேலும் பார்க்க

திருச்சூரில் வீட்டு முற்றத்திற்குள் நுழைந்த நாய்: கொலையில் முடிந்த தகராறு

திருச்சூரில் நாய் தொடர்பாக அண்டை வீட்டாரிடம் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்திருக்கிறது. கேரள மாநிலம், திருச்சூரில் வசித்து வருபர்கள் ஷிஜோ(42), ஜோசப்(69). அண்டை வீட்டாரான இருவருக்கும் இடையே வீட்டின் மு... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றத்தால் உள்நாட்டுப் போர்: பாஜக எம்.பி.யின் கருத்தை கட்சித் தலைமை நிராகரிப்பு

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றத்துக்கு எதிராக பாஜக எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவுகளைச் சுட்டிக்காட்டிய பாஜக எம்.பி. நிஷிகாந்த்... மேலும் பார்க்க

நின்றுகொண்டிருந்த விமானம் மீது மோதிய வேன்: ஓட்டுநர் காயம்

பெங்களூரு விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ விமானம் மீது டெம்போ வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் இன்ஜின் பழுதுபார்ப்... மேலும் பார்க்க