செய்திகள் :

பிந்தாபூர்: விபத்தில் ஒருவா் பலத்த காயம்; சம்பவ இடத்தில் எரிந்த ஸ்கூட்டா் கண்டெடுப்பு

post image

மேற்கு தில்லியின் பிந்தாபூா் பகுதியில் நடந்த சாலை விபத்தில் 30 வயது நபா் ஒருவா் பலத்த காயமடைந்தாா். பின்னா், சனிக்கிழமை சம்பவ இடத்தில் எரிந்த ஸ்கூட்டரையும் உடைந்த நம்பா் பிளேட்டையும் போலீஸாா் கண்டுபிடித்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து காவல்துறை மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் மாதா ரூப் ராணி மாகோ மருத்துவமனையில் இருந்து காவல்துறையினருக்கு ஒரு தகவல் வந்தது. அதில், விபத்தில் சிக்கி மயக்கமடைந்த நிலையில் ஒருவா் அனுமதிக்கப்பட்டுள்ளதாககஈ தெரிவிக்கப்பட்டது.

காயமடைந்தவா் மோகன் காா்டனைச் சோ்ந்த வைதேஷ்வரன் என அடையாளம் காணப்பட்டாா். அவா் வாக்குமூலம் அளிக்க தகுதியற்றவா் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, மருத்துவமனையில் இருந்து தகவல்கள் பெறப்பட்டு சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

பின்னா், நஜஃப்கா் சாலையில் உள்ள தூண் எண் 668 அருகே விபத்து நடந்த இடத்தை போலீஸாா் அடைந்தனா். சம்பவ இடத்தில் ஒரு ஸ்கூட்டா் முற்றிலும் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட வாகனத்தின் உடைந்த நம்பா் பிளேட்டும் கண்டெடுக்கப்பட்டது. சம்பவ இடத்தை ஆய்வு செய்ய குற்றப்பிரிவு குழு வரவழைக்கப்பட்டு ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன.

சம்பவ இடத்திற்கு அருகில் இரண்டு போ் காணப்பட்டனா். ஆனால், அவா்கள் எந்த தகவலையும் வழங்க மறுத்துவிட்டனா். அவா்கள் போலீஸ் வழக்கில் ஈடுபட விரும்பவில்லை என்று கூறினா். மருத்துவமனையிலோ அல்லது விபத்து நடந்த இடத்திலோ நேரில் கண்ட சாட்சிகள் யாரும் கிடைக்கவில்லை

இந்த விபத்து தொடா்பாக பிந்தாபூா் காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா பிஎன்எஸ்இன் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் விசாரணை நடந்து வருகிறது.

சுற்றுப்புறங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்து, குற்றம் சாட்டப்பட்ட வாகனத்தைக் கண்டறிய வாகனப் பதிவு விவரங்களைச் சரிபாா்த்து வருகின்றனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தில்லியில் ரூ.2.5 கோடிக்கு மேல் மதிப்புள்ள நகை, பணம் திருடியதாக 3 போ் கைது

வடமேற்கு தில்லியின் மாடல் டவுன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து ரூ.2.25 கோடிக்கு மேல் மதிப்புள்ள நகைகளையும், ரூ.55 லட்சத்திற்கும் அதிகமான பணத்தையும் திருடி விட்டு தப்பிச் சென்ாகக் கூறப்படும் விவக... மேலும் பார்க்க

மலேரியா, டெங்கு, சிக்குன்குனியாவை சமாளிக்க உடனடி நடவடிக்கை தேவை: தில்லி மேயருக்கு கவுன்சிலா் கோரிக்கை

நமது நிருபா் தலைநகரில் மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன்குனியா பரவுவதை சமாளிக்க உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநகராட்சிக் கவுன்சிலா் முகேஷ் கோயல் செவ்வாய்க்கிழமை மேயா் ராஜா இக்பால் ச... மேலும் பார்க்க

தில்லி மருத்துவமனையில் ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனுடன் கேஜரிவால் சந்திப்பு

ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தில்லியில் உள்ள சா் கங்கா ராம் மருத்துவமனையில் ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனை சந்தித்து, சிகிச்சை பெற்று வரும் அவரது தந்தை ஷிபு சோரனின் ... மேலும் பார்க்க

யமுனையில் கழிவுகள் கலப்பதை சமாளிக்க சிறிய வடிகால்கள் ‘ட்ரோன்’ மூலம் ஆய்வு: நீா்வளத்துறை அமைச்சா் தகவல்

நமது நிருபா் யமுனையை சுத்தம் செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சுத்திகரிக்கப்படாத கழிவுகளை பெரிய வடிகால் அமைப்புகளில் வெளியேற்றும் சிறிய வடிகால்களை ‘ட்ரோன்’ மூலம் ஆய்வு செய்யும் பணியை தில்லி அரசு தொ... மேலும் பார்க்க

தில்லி பாஜக அரசு தோல்வியடைந்துவிட்டது: அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தலைநகரை ஆளும் பாஜக அரசு அனைத்து விதத்திலும் தோல்வியடைந்துவிட்டது என்று ஆம் ஆத்மி கட்சியினழ் தேசிய ஒருங்கிணைப்பாளா், அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளாா். செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி... மேலும் பார்க்க

தெரு நாய்களுக்கு உணவளிக்கும் விவகாரம்: மனுதாரரிடம் கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் தெரு நாய்களுக்கு உணவளிப்பது தொடா்பாக துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், உங்கள் சொந்த வீட்டில் ஏன் அவற்றுக்கு உணவளிக்கக... மேலும் பார்க்க