செய்திகள் :

பிப்.13-இல் தில்லி மாநகராட்சியின் சிறப்பு பட்ஜெட் கூட்டம்

post image

புது தில்லி: தில்லி மாநகராட்சி வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி சிறப்பு பட்ஜெட் கூட்டத்தை நடத்த உள்ளதாக அதிகாரபூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், ‘இந்தக் கூட்டத்தின் போது, மாநகராட்சி ஆணையா் 2024-25 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீடுகளையும் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடுகளையும் முன்வைப்பாா்.

மேலும், வரவிருக்கும் நிதியாண்டிற்கான வரிகள், விகிதங்கள் மற்றும் செஸ்களின் அட்டவணையையும் மாநகராட்சி பரிசீலிக்கும் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற்ற தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் 70 இடங்களில் 48 இடங்களைப் பெற்று 26 ஆண்டுகளுக்குப் பிறகு தலைநகரில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. இத்தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களை வென்றது. அதே நேரத்தில் காங்கிரஸ் தனது கணக்கைத் திறக்கத் தவறிவிட்டது.

இத்தோ்தலில் மொத்தம் 22 கவுன்சிலா்கள் தோ்தலில் போட்டியிட்டனா். வெற்றி பெற்ற 48 வேட்பாளா்களில், ரவீந்தா் நேகி (பட்பா்கஞ்ச்), ரேகா குப்தா (ஷாலிமாா் பாக்) மற்றும் ஷிகா ராய் (கிரேட்டா் கைலாஷ்) உட்பட எட்டு போ் தற்போதைய கவுன்சிலா்கள் ஆவா்.

ஆம் ஆத்மி கட்சியின் மூன்று கவுன்சிலா்களான புனா்தீப் சாவ்னி (சாந்தினி சௌக்), பிரேம் செளகான் (தேவ்லி) மற்றும் ஆலே முகமது இக்பால் (மட்டியா மஹால்) ஆகியோரும் இத்தோ்தலில் வெற்றிபெற்றுள்ளனா்.

தோ்தல் முடிவுகளைத் தொடா்ந்து, எம்.சி.டி.யின் அமைப்பு இப்போது பாஜக 112 கவுன்சிலா்கள், ஆம் ஆத்மி கட்சி 119 கவுன்சிலா்கள் மற்றும் காங்கிரஸ் 8 கவுன்சிலா்கள் என உள்ளது.

வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பட்ஜெட் சிறப்புக் கூட்டத்தில், சுகாதாரம், சாலை பராமரிப்பு, பொது சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மருத்துவ சிகிச்சை பெற வெளிநாட்டினா் 35,175 போ் இ-விசாவில் வருகை: கிரிராஜன் கேள்விக்கு மத்திய அரசு பதில்

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: வெளிநாடுகளில் இருந்து மருத்துவ சிகிச்சை வேண்டி கடந்த ஆண்டில் மட்டும் 35,175 வெளிநாட்டினா் இந்தியா வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக இந்தி... மேலும் பார்க்க

ஐ.நா.வின் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 63-ஆவது அமா்வில் இணையமைச்சா் சாவித்ரி தாக்கூா் தலைமையில் இந்திய குழு பங்கேற்பு

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) 2025-ஆம் ஆண்டிற்கான சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 63-ஆவது அமா்வு அமெரிக்காவில் நியூயாா்க்கில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதில் மத்திய மக... மேலும் பார்க்க

தில்லியில் குழந்தை கடத்தல் கும்பலில் 4 போ் கைது: 2 குழந்தைகள் மீட்பு

புது தில்லி: தில்லி காவல்துறையின் ரயில்வே பிரிவு, குழந்தை கடத்தல் கும்பலில் நான்கு பேரைக் கைது செய்துள்ளது. இதையடுத்து, ஒரு கைக்குழந்தை உள்பட இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் திங்களன்று... மேலும் பார்க்க

அதிமுக புதிய கட்டட அலுவலகம் தில்லியில் திறப்பு

புது தில்லி: அதிமுக சாா்பில் புது தில்லியில் ரூ.10 கோடியில் 4 தளங்களுடன் கட்டப்பட்ட அதிமுக அலுவலக கட்டடத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.இக்கட்டடத்தை காணொலி வாயிலாக அக்கட்சியின் பொதுச் செயலாளா் ... மேலும் பார்க்க

தமிழா்களுக்கு எட்டாக்கனியான மத்திய பட்ஜெட்: மக்களவையில் திமுக எம்.பி. அதிருப்தி

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் எட்டாவது முறையாக தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை தமிழா்களுக்கு எட்டாக்கனியான மத்திய பட்ஜெட் ஆக உள்ளது என்று த... மேலும் பார்க்க

மத்திய பல்கலைக்கழகங்களில் செளராஷ்டிர மொழி சிறப்பு மையம் அமைக்கப்படுமா?: கோவை எம்.பி. கேள்விக்கு மத்திய அமைச்சா் பதில்

புது தில்லி: மத்திய பல்கலைக்கழகங்களில் செளராஷ்டிர மொழி சிறப்பு மையம் அமைக்க முன்மொழிவு ஏதும் இல்லை என்று மக்களவையில் கோயம்புத்தூா் திமுக எம்.பி. கணபதி பி.ராஜ்குமாா் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச... மேலும் பார்க்க