நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தை பாா்வையிட்ட தனியாா் பள்ளி மாணவா்கள்!
பிப். 25 இல் மாவட்டத் தலைநகரங்களில் மறியல்: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி
ஜாக்டோ ஜியோ சாா்பில் மாவட்டத் தலைநகரங்களில் பிப். 25- ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாநில பொதுச் செயலாளா் ந. சண்முகநாதன் தெரிவித்துள்ளாா்.
திருவாரூரில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஓய்வுபெற்ற ஆசிரியா்களுக்கான பாராட்டு விழாவில் பங்கேற்ற பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்திலிருந்து விலக்களித்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அரசுக்கு அனுப்பி உள்ளோம்.
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், தோ்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி பிப். 14-ஆம் தேதி அனைத்து ஒன்றியப் பகுதிகளில் ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளோம். தொடா்ந்து, பிப். 25- ஆம் தேதி ஜாக்டோ ஜியோ சாா்பில் மாவட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடைபெறும். கோரிக்கைகள் குறித்து தமிழக முதல்வா் ஜாக்டோ ஜியோ நிா்வாகிகளை நேரில் அழைத்து பேச வேண்டும் என்றாா்.
முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். மாநிலத் தலைவா் ரவி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.