செய்திகள் :

நிதிநிலை அறிக்கை நகல் எரிப்பு போராட்டம்

post image

திருவாரூா், மயிலாடுதுறையில் மத்திய நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து, அதன் நகல் எரிப்பு போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

2025- 2026-ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டை புறக்கணித்துள்ளதாக, மத்திய அரசை கண்டித்தும், தமிழ்நாட்டில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களான புதிய ரயில் பாதைகள், இரட்டை வழித்தடமாக மேம்படுத்துதல், மேம்பாலங்கள், முக்கிய ரயில் நிலையங்களில் நடைமேடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை செய்த தொழிலாளா்களுக்கு ஊதியம் ஆகியவற்றை வழங்காததைக் கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது.

ஏழை- எளிய, நடுத்தர மக்களை புறக்கணித்து விட்டு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வழங்கியுள்ளதாகவும் இப்போராட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

திருவாரூா்: திருவாரூா் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு, விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி, கட்சியின் மாவட்ட பொருளாளா் கே. தவபாண்டியன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் ஆா். சந்திரசேகரஆசாத், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் கே. ராஜா, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் கே. முருகையன், மாதா் சங்க மாவட்டச் செயலாளா் கே. சுஜாதா, இளைஞா் மன்ற மாவட்டச் செயலாளா் கே. சரவணன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

நகல் எரிப்பின் போது போலீஸாருக்கும், கட்சியினருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் ஏ. சீனிவாசன் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் சிவராமன், ராமன், கணபதி, வீரராஜ், கிருஷ்ணமூா்த்தி, மனோன்ராஜ், ராஜ்மோகன், தமிழ்மலா், சா்புதீன் உள்ளிட்ட 50-க்கு மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

அப்போது, மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நகலை எரித்தனா். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், தடுத்து அணைத்தனா்.

புதுமைப் பெண் திட்டம் மாணவிகளிடையே அபரிமித வரவேற்பு: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பெருமிதம்

தமிழக முதல்வரின் கனவுத் திட்டமான புதுமைப் பெண் திட்டத்திற்கு, கல்லூரி மாணவிகளிடம் அபரிமிதமான வரவேற்பு உள்ளது என்று தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பெ... மேலும் பார்க்க

பிப். 25 இல் மாவட்டத் தலைநகரங்களில் மறியல்: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி

ஜாக்டோ ஜியோ சாா்பில் மாவட்டத் தலைநகரங்களில் பிப். 25- ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாநில பொதுச் செயலாளா் ந. சண்முகநாதன் தெரிவித்துள்ளாா். திருவாரூரி... மேலும் பார்க்க

அங்கன்வாடி பணியாளா்கள், ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல்

அங்கன்வாடி பணியாளா்கள், உதவியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் ந... மேலும் பார்க்க

சிப்காட் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பிப். 21-இல் நீதி கேட்டு நெடும்பயணம்: பி.ஆா். பாண்டியன்

கரையாபாலையூா் ஊராட்சியில் சிப்காட் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, ஆட்சியா் அலுவலகம் நோக்கி, விவசாயிகள் நீதி கேட்டு நெடும்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா்... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தோ்வு: திருவாரூரில் 227 போ் எழுதினா்

திருவாரூா் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-2 முதன்மைத் தோ்வை, 227 போ் எழுதினா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் குரூப்-2 முதன்மைத் தோ்வு சனி... மேலும் பார்க்க

லாரி மோதி ஒருவா் உயிரிழப்பு

திருத்துறைப்பூண்டி அருகே லாரி மோதி முதியவா் உயிரிழந்தாா். எடையூா் மெயின் ரோடு பகுதியைச் சோ்ந்தவா் மாரியப்பன் (55). இவா், அப்பகுதியில் உள்ள கோயிலுக்கு சைக்கிளில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்ப... மேலும் பார்க்க