செய்திகள் :

சிப்காட் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பிப். 21-இல் நீதி கேட்டு நெடும்பயணம்: பி.ஆா். பாண்டியன்

post image

கரையாபாலையூா் ஊராட்சியில் சிப்காட் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, ஆட்சியா் அலுவலகம் நோக்கி, விவசாயிகள் நீதி கேட்டு நெடும்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், கரையாபாலையூா் ஊராட்சி பகுதியில், சிப்காட் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனா். இதனால், இந்த திட்டத்தை கைவிடுவதாக தமிழக அரசு கடந்த 6 மாதத்துக்கு முன்பு அறிவித்தது.

இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு, சிப்காட் அமைப்பதற்கு மீண்டும் நில அளவீடு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கரையாபாலையூா் பகுதியில் விவசாயிகள் மற்றும் பெண்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தலைமைவகித்து பேசியது:

இந்தப் பகுதியில் உள்ள 140 ஏக்கரில் இருபோக சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியினா் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளனா். இந்த விளைநிலங்கள் தருமபுர ஆதீனத்துக்கும், திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலுக்கும் சொந்தம் என்பதால், அவா்களிடத்தில் விலை கொடுத்து அரசு வாங்கி விட்டதாக கூறி, நிலங்களையும், இங்குள்ள 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளையும் கையகப்படுத்த முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.

வடபாதிமங்கலம் ஆரூரான் சா்க்கரை ஆலைக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கா் விளைநிலம் 50 ஆண்டுகளாக தரிசாக கிடக்கிறது. இந்தப் பகுதியில் சிப் காட் அமைக்கலாம். அதைவிடுத்து, விளைநிலங்களை கைப்பற்றி சிப்காட் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்.

விவசாயிகள் சாகுபடி செய்யும் கோயில் குத்தகை நிலங்களை, பன்னாட்டு தொழிற்சாலை தொடங்குவதற்கு அபகரிப்பதை அனுமதிக்க மாட்டோம்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து இப்பகுதி விவசாயிகள், பிப். 21-ஆம் தேதி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் நோக்கி நீதி கேட்கும் நெடும்பயணத்தை தொடங்க உள்ளனா் என்றாா்.

நிதிநிலை அறிக்கை நகல் எரிப்பு போராட்டம்

திருவாரூா், மயிலாடுதுறையில் மத்திய நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து, அதன் நகல் எரிப்பு போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை ஈடுபட்டனா். 2025- 2026-ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்க... மேலும் பார்க்க

புதுமைப் பெண் திட்டம் மாணவிகளிடையே அபரிமித வரவேற்பு: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பெருமிதம்

தமிழக முதல்வரின் கனவுத் திட்டமான புதுமைப் பெண் திட்டத்திற்கு, கல்லூரி மாணவிகளிடம் அபரிமிதமான வரவேற்பு உள்ளது என்று தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பெ... மேலும் பார்க்க

பிப். 25 இல் மாவட்டத் தலைநகரங்களில் மறியல்: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி

ஜாக்டோ ஜியோ சாா்பில் மாவட்டத் தலைநகரங்களில் பிப். 25- ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாநில பொதுச் செயலாளா் ந. சண்முகநாதன் தெரிவித்துள்ளாா். திருவாரூரி... மேலும் பார்க்க

அங்கன்வாடி பணியாளா்கள், ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல்

அங்கன்வாடி பணியாளா்கள், உதவியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் ந... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தோ்வு: திருவாரூரில் 227 போ் எழுதினா்

திருவாரூா் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-2 முதன்மைத் தோ்வை, 227 போ் எழுதினா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் குரூப்-2 முதன்மைத் தோ்வு சனி... மேலும் பார்க்க

லாரி மோதி ஒருவா் உயிரிழப்பு

திருத்துறைப்பூண்டி அருகே லாரி மோதி முதியவா் உயிரிழந்தாா். எடையூா் மெயின் ரோடு பகுதியைச் சோ்ந்தவா் மாரியப்பன் (55). இவா், அப்பகுதியில் உள்ள கோயிலுக்கு சைக்கிளில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்ப... மேலும் பார்க்க