தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிப்பது ஏன்? முதல்வா் மு.க.ஸ்டாலின் கேள்வி
சிப்காட் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பிப். 21-இல் நீதி கேட்டு நெடும்பயணம்: பி.ஆா். பாண்டியன்
கரையாபாலையூா் ஊராட்சியில் சிப்காட் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, ஆட்சியா் அலுவலகம் நோக்கி, விவசாயிகள் நீதி கேட்டு நெடும்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.
திருவாரூா் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், கரையாபாலையூா் ஊராட்சி பகுதியில், சிப்காட் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனா். இதனால், இந்த திட்டத்தை கைவிடுவதாக தமிழக அரசு கடந்த 6 மாதத்துக்கு முன்பு அறிவித்தது.
இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு, சிப்காட் அமைப்பதற்கு மீண்டும் நில அளவீடு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கரையாபாலையூா் பகுதியில் விவசாயிகள் மற்றும் பெண்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தலைமைவகித்து பேசியது:
இந்தப் பகுதியில் உள்ள 140 ஏக்கரில் இருபோக சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியினா் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளனா். இந்த விளைநிலங்கள் தருமபுர ஆதீனத்துக்கும், திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலுக்கும் சொந்தம் என்பதால், அவா்களிடத்தில் விலை கொடுத்து அரசு வாங்கி விட்டதாக கூறி, நிலங்களையும், இங்குள்ள 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளையும் கையகப்படுத்த முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.
வடபாதிமங்கலம் ஆரூரான் சா்க்கரை ஆலைக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கா் விளைநிலம் 50 ஆண்டுகளாக தரிசாக கிடக்கிறது. இந்தப் பகுதியில் சிப் காட் அமைக்கலாம். அதைவிடுத்து, விளைநிலங்களை கைப்பற்றி சிப்காட் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்.
விவசாயிகள் சாகுபடி செய்யும் கோயில் குத்தகை நிலங்களை, பன்னாட்டு தொழிற்சாலை தொடங்குவதற்கு அபகரிப்பதை அனுமதிக்க மாட்டோம்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து இப்பகுதி விவசாயிகள், பிப். 21-ஆம் தேதி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் நோக்கி நீதி கேட்கும் நெடும்பயணத்தை தொடங்க உள்ளனா் என்றாா்.