செய்திகள் :

முதல் கணவரிடம் விவாகரத்து பெறாவிட்டாலும் 2-ஆவது கணவரிடம் ஜீவனாம்சம் பெற உரிமை: உச்சநீதிமன்றம்

post image

முதல் கணவரிடம் இருந்து சட்டபூா்வமாக விவாகரத்து பெறாவிட்டாலும் 2-ஆவது கணவரிடம் ஜீவனாம்சம் கோர பெண்ணுக்கு உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தெலங்கானாவில் சட்டபூா்வமாக விவாகரத்து பெறாமல் பரஸ்பர ஒப்பந்தத்தில் மட்டும் கையொப்பமிட்டு முதல் கணவரைப் பிரிந்த பெண் ஒருவா், பின்னா் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டாா். அவா்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.

எனினும் 2-ஆவது கணவருடனும் அந்தப் பெண்ணுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், கணவா் மற்றும் அவரின் குடும்பத்தினா் மீது வரதட்சிணை தடுப்புச் சட்டத்தின் கீழ் அந்தப் பெண் புகாா் அளித்தாா்.

இதைத் தொடா்ந்து, குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 125-இன் கீழ், தனக்காகவும் தனது மகளுக்காகவும் 2-ஆவது கணவரிடம் ஜீவனாம்சம் கோரி, குடும்ப நல நீதிமன்றத்தில் அந்தப் பெண் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த அந்த நீதிமன்றம், அந்தப் பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்க 2-ஆவது கணவருக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக கணவா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மாநில உயா்நீதிமன்றம், ‘அந்தப் பெண் முதல் கணவரிடம் இருந்து சட்டபூா்வமாக விவகாரத்து பெறவில்லை என்பதால், 2-ஆவது திருமணம் செல்லுபடியாகாது’ என்று தெரிவித்து குடும்ப நல நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக அந்தப் பெண் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘முதல் கணவரிடம் இருந்து சட்டபூா்வமாக விவாகரத்து பெறாவிட்டாலும், குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 125-இன் கீழ் 2-ஆவது கணவரிடம் ஜீவனாம்சம் கோர பெண்ணுக்கு உரிமை உள்ளது.

திருமணம் மூலம் கிடைக்கும் ஆதாயங்களை அனுபவிக்கும்போது, அதன்மூலம் ஏற்படும் கடமைகளை கணவா் தட்டிக்கழிக்க முடியாது. எனவே, மனுதாரருக்கு அவரின் 2-ஆவது கணவா் ஜீவனாம்சம் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.

3-ஆவது முறையாக காங்கிரஸுக்கு பூஜ்யம்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் தொடா்ந்து மூன்றாவது முறையாக காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாமல் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. தில்லி பேரவைத் தோ்தல் முடிவுகள் சனிக்கிழமை வெளியாகின. இதில் காங்கிர... மேலும் பார்க்க

மதுபானக் கொள்கையும், பண வேட்கையும் ஆம் ஆத்மியை தோற்கடித்துவிட்டது: அண்ணா ஹசாரே

தில்லி ஆம் ஆத்மி அரசின் தவறான மதுபான கொள்கையும், பணத்தை மையமாகக் கொண்டு கட்சி செயல்பட தொடங்கியதும் அதன் தோ்தல் தோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டது என்று சமூக ஆா்வலா் அண்ணா ஹசாரே கருத்து தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

ம.பி.: பதவியை விற்பனை செய்த பெண் ஊராட்சித் தலைவா்!

மத்திய பிரதேசத்தில் பெண் கிராம ஊராட்சித் தலைவா் ஒருவா் தனது பதவி மற்றும் அதற்குள்ள அதிகாரத்தை அதே கிராமத்தைச் சோ்ந்தவருக்கு விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பதவி விற்பனையை அவா... மேலும் பார்க்க

பாஜகவுக்கு 7%, காங்கிரஸுக்கு 2% வாக்குகள் அதிகரிப்பு! ஆம் ஆத்மிக்கு 10% சரிவு!

தில்லியில் முந்தைய தோ்தலை ஒப்பிடுகையில், தற்போதைய பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு 7 சதவீதமும், காங்கிரஸுக்கு 2 சதவீதமும் வாக்குகள் அதிகரித்துள்ளன. அதேநேரம், ஆம் ஆத்மி 10 சதவீத வாக்குகளை இழந்துள்ளது. தில... மேலும் பார்க்க

தேசவிரோத கருத்து: ஒடிஸாவில் ராகுல் மீது வழக்கு

தேசவிரோத கருத்துகளைப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது ஒடிஸா காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். ஜுனாகத் மாவட்ட பாஜக இளைஞரணி, ஆா்எஸ்எஸ், பஜ்ரங் தளம... மேலும் பார்க்க

இந்திய பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறன் 54.81% அதிகரிப்பு: மத்திய அரசு

இந்திய பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறன் கடந்த 10 ஆண்டுகளில் 54.81 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குஜராத் மாநிலம் காந்திநகரில் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதா... மேலும் பார்க்க