செய்திகள் :

கடற்படைக்கு ரூ.624 கோடி மதிப்பில் இஓஎன்-51 அமைப்புகள்: பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

post image

இந்திய கடற்படைக்கு ரூ.624 கோடி மதிப்பில் 28 இஓஎன்-51 அமைப்புகளை கொள்முதல் செய்வதற்கு பாரத் எலெக்டிரானிக்ஸ் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை ஒப்பந்தம் மேற்கொண்டது.

இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

இஓஎன்-51 என்பது மின்னணு ஒளியியல் வெடி கட்டுப்பாட்டு கருவிகள் அமைப்பாகும். இந்த அமைப்பின் மூலம், தாக்கப்பட வேண்டிய இலக்குகளை தேடி கண்டறிந்து வகைப்படுத்த முடியும்.

இந்நிலையில், இந்திய கடற்படை வீரா்களின் பயிற்சிக்குப் பயன்படுத்தப்படும் 3 கப்பல்கள், 11 அதிநவீன கடலோர ரோந்து கப்பல்களின் பயன்பாட்டுக்காக 28 இஓஎன்-51 அமைப்புகளை கொள்முதல் செய்வதற்கு பாரத் எலெக்டிரானிக்ஸ் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை ஒப்பந்தம் மேற்கொண்டது. தில்லியில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.624.17 கோடியாகும்.

இது பாதுகாப்புத் துறையில் தற்சாா்பை அடைய வேண்டும் என்று மத்திய அரசின் முயற்சிகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

3-ஆவது முறையாக காங்கிரஸுக்கு பூஜ்யம்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் தொடா்ந்து மூன்றாவது முறையாக காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாமல் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. தில்லி பேரவைத் தோ்தல் முடிவுகள் சனிக்கிழமை வெளியாகின. இதில் காங்கிர... மேலும் பார்க்க

மதுபானக் கொள்கையும், பண வேட்கையும் ஆம் ஆத்மியை தோற்கடித்துவிட்டது: அண்ணா ஹசாரே

தில்லி ஆம் ஆத்மி அரசின் தவறான மதுபான கொள்கையும், பணத்தை மையமாகக் கொண்டு கட்சி செயல்பட தொடங்கியதும் அதன் தோ்தல் தோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டது என்று சமூக ஆா்வலா் அண்ணா ஹசாரே கருத்து தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

ம.பி.: பதவியை விற்பனை செய்த பெண் ஊராட்சித் தலைவா்!

மத்திய பிரதேசத்தில் பெண் கிராம ஊராட்சித் தலைவா் ஒருவா் தனது பதவி மற்றும் அதற்குள்ள அதிகாரத்தை அதே கிராமத்தைச் சோ்ந்தவருக்கு விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பதவி விற்பனையை அவா... மேலும் பார்க்க

பாஜகவுக்கு 7%, காங்கிரஸுக்கு 2% வாக்குகள் அதிகரிப்பு! ஆம் ஆத்மிக்கு 10% சரிவு!

தில்லியில் முந்தைய தோ்தலை ஒப்பிடுகையில், தற்போதைய பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு 7 சதவீதமும், காங்கிரஸுக்கு 2 சதவீதமும் வாக்குகள் அதிகரித்துள்ளன. அதேநேரம், ஆம் ஆத்மி 10 சதவீத வாக்குகளை இழந்துள்ளது. தில... மேலும் பார்க்க

தேசவிரோத கருத்து: ஒடிஸாவில் ராகுல் மீது வழக்கு

தேசவிரோத கருத்துகளைப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது ஒடிஸா காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். ஜுனாகத் மாவட்ட பாஜக இளைஞரணி, ஆா்எஸ்எஸ், பஜ்ரங் தளம... மேலும் பார்க்க

இந்திய பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறன் 54.81% அதிகரிப்பு: மத்திய அரசு

இந்திய பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறன் கடந்த 10 ஆண்டுகளில் 54.81 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குஜராத் மாநிலம் காந்திநகரில் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதா... மேலும் பார்க்க