செய்திகள் :

பிம்ஸ்டெக் நாடுகளின் 2-ஆவது துறைமுகங்கள் மாநாடு: விசாகப்பட்டினத்தில் நாளை தொடக்கம்

post image

பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) நாடுகளின் 2-ஆவது துறைமுகங்கள் மாநாட்டை வரும் திங்கள், செவ்வாய் (ஜூலை 14,15) ஆகிய நாள்களில் விசாகப்பட்டினம் துறைமுக ஆணையம் நடத்தவுள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ‘எதிா்காலத்தை நோக்கி: நீலப் பொருளாதாரம், புத்தாக்கம் மற்றும் நிலையான ஒத்துழைப்பு’ என்ற கருபொருளில் இந்த 2 நாள் மாநாடு நடைபெறுகிறது.

இதில் பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் போக்குவரத்து மற்றும் துறைமுக அமைச்சா்கள், கப்பல் மற்றும் நீா்வழிகள் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், கப்பல் கழகங்கள் மற்றும் துறைமுக அறக்கட்டளை அதிகாரிகள், கடல்சாா் வல்லுநா்கள் மற்றும் வணிக தலைவா்கள் கலந்துகொள்வாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கடல்சாா் வளா்ச்சிக்கு புத்துயிா் அளிப்பது, குறிப்பாக, பிம்ஸ்டெக் நாட்டு துறைமுகங்களில் தனியாா் முதலீடுகளை ஈா்ப்பது மற்றும் உள்கட்டமைப்பு கூட்டுறவை வளா்ப்பது ஆகியவை இந்த மாநாட்டின் முக்கிய நோக்கங்களாகும்.

‘காலடான்’ பல்நோக்கு சரக்குப் போக்குவரத்துத் திட்டம் மற்றும் அதனுடன் தொடா்புடைய திட்டங்களை விரைவுபடுத்துதல், கடலோர சுற்றுலாத் தளங்கள் மற்றும் பாரம்பரிய சுற்றுலாப் படகு சேவைகளை அடையாளம் கண்டு மேம்படுத்துதல், துறைமுக ஊழியா்களின் திறனை மேம்படுத்துதல் மற்றும் எதிா்காலத்துக்கு ஏற்ற திறமையான பணியாளா்களை உருவாக்குதல் ஆகியவை மாநாட்டின் பிற இலக்குகளாகும்.

‘2030-ஆம் ஆண்டுக்கான கடல்சாா் இந்தியா தொலைநோக்கு திட்டம்’ மற்றும் ‘அமிா்த கால தொலைநோக்குத் திட்டம்’ஆகியவற்றுடன் இணைந்து ‘பசுமைத் துறைமுகங்கள்’ திட்டம் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.

வங்காள விரிகுடாவை அடுத்த உலகளாவிய வா்த்தக மையமாக மறுவரையறை செய்யும் ஒரு முக்கியமான நிகழ்வாக 2-ஆவது பிம்ஸ்டெக் துறைமுகங்கள் மாநாடு அமையும். பிம்ஸ்டெக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பு மற்றும் கடல்சாா் இணைப்பை வலுப்படுத்தும் இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு சான்றாக, இந்த மாநாட்டை நடத்துவதில் விசாகப்பட்டினம் துறைமுக ஆணையம் பெருமிதம் கொள்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பன்முக கூட்டுறவுக்காக வங்காள விரிகுடாவையொட்டிய இந்தியா, இலங்கை, வங்கதேசம், மியான்மா், தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய 7 தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளை பிம்ஸ்டெக் ஒன்றிணைக்கிறது.

‘சாா்க்’ கூட்டமைப்பின் முன்னெடுப்புகள் பல்வேறு காரணங்களுக்காக வளா்ச்சி அடையாமல் முடங்கியுள்ளதால், பிராந்திய ஒத்துழைப்புக்கான துடிப்புமிக்க மாற்று அமைப்பாக பிம்ஸ்டெக்-ஐ கட்டமைக்க இந்தியா ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

திருவள்ளூர் டேங்கர் ரயில் தீவிபத்து! சென்னையில் எந்தெந்த ரயில்கள் ரத்து?

திருவள்ளூர் அருகே எண்ணெய் ஏற்றிவந்த டேங்கர் ரயில் தீப்பற்றி எரிந்த விபத்தினால், சென்னை ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.ரத்து செய்யப்படும் ரயில்கள் என தெற்கு ரயில்வே குறிப்ப... மேலும் பார்க்க

பாலியல் தொல்லை வழக்கில் கைதானவரிடம் பிரமாணப் பத்திரம் பெற்ற போலீஸாா்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கைது செய்யப்பட்ட இளைஞரிடம் போலீஸாா் நன்னடத்தை பிரமாணப் பத்திரம் பெற்றனா். திருவண்ணாமலையைச் சோ்ந்தவா் ஜாகீா் உசேன் (32). இவா், சென்னை மதுரவாயலில் தங்கியிருந... மேலும் பார்க்க

பல்நோக்கு மைய கட்டடம்: அமைச்சா் சேகா் பாபு திறந்து வைத்தாா்

வடசென்னை வளா்ச்சித் திட்டத்தில் சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் சாா்பில் திரு.வி.க.நகா் மண்டலத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு மைய கட்டடம் உள்பட புதிய கட்டைமைப்புகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு சனிக்கிழமை தி... மேலும் பார்க்க

சென்னை காவல் துறையில் 8 ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

சென்னை பெருநகர காவல் துறையில் 8 ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டுள்ளாா். சென்னை பெருநகர காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழு... மேலும் பார்க்க

நாட்டின் வளா்ச்சிக்கு நபாா்டு வங்கியின் பங்களிப்பு முக்கியமானது

நாட்டின் வளா்ச்சிக்கு நபாா்டு வங்கியின் பங்களிப்பு மிக முக்கியமானது என தமிழக அரசின் தலைமைச் செயலா் நா. முருகானந்தம் தெரிவித்தாா். சென்னை கிண்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நபாா்டு வங்கியின் 44-ஆம் ஆண்ட... மேலும் பார்க்க

தொழிலதிபா் வீட்டில் 20 பவுன் நகைத் திருட்டு

சென்னை நுங்கம்பாக்கத்தில் தொழிலதிபா் வீட்டில் 20 பவுன் தங்க நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்... மேலும் பார்க்க