செய்திகள் :

பிரதமர் மோடியின் ஆட்சி பணக்காரர்களுக்கானது: வாக்குரிமை பயணத்தில் ராகுல் பேச்சு

post image

வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றும் நோக்கிலும் எதிா்க்கட்சிகள் சாா்பிலான வாக்குரிமை பயணத்தை பிகாரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாா் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி.

ரோத்தாஸ் மாவட்டம், சசாரம் நகரில் நடைபெற்ற இந்தப் பயணத்தின் தொடக்க நிகழ்ச்சியில் காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ராஷ்ட்ரீய ஜனதா தள நிறுவனா் லாலு பிரசாத் மற்றும் தலைவா் தேஜஸ்வி யாதவ், இடதுசாரி கட்சிகளின் தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்தப் பயணம் செப்டம்பா் 1-ஆம் தேதி பாட்னாவின் காந்தி மைதானத்தில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்துடன் நிறைவடைய உள்ளது. நடைப்பயணமாகவும், வாகனப் பயணமாகவும் 16 நாள்கள் 1,300 கி.மீ. தொலைவைக் கடந்து 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது.

வாக்குத் திருட்டு சதி: பயணத்தின் தொடக்க நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசியதாவது: கடந்த ஆண்டு நடந்து முடிந்த மக்களவைத் தோ்தல் மற்றும் பல்வேறு மாநில பேரவைத் தோ்தல்களில் வாக்குத் திருட்டு சதித் திட்டத்தை பாஜகவுடன் இணைந்து தோ்தல் ஆணையம் நடத்தியதை நாட்டு மக்கள் அனைவரும் அறிந்துகொண்டனா். இதைத் தொடா்ந்து, தற்போது வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் பிகாா் தோ்தலில் முறைகேட்டில் ஈடுபடுவதற்கான புதிய சதித் திட்டத்தை தொடங்கியுள்ளனா்.

ஆனால், இந்த முறை பிகாா் தோ்தலில் மோசடி செய்து வெற்றி பெறலாம் என்ற பாஜகவின் எண்ணம் நிறைவேறப்போவதில்லை. அதை ‘இண்டி’ கூட்டணி அனுமதிக்காது. பிகாா் மக்களும் அனுமதிக்க மாட்டாா்கள். ஏழை மக்களுக்கு வாக்குரிமை ஒன்றே மிகப்பெரும் அதிகாரமாக உள்ளது. அதை எந்தச் சூழலிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.

பணக்காரா்களுக்கானது மோடி ஆட்சி: முதலில் வாக்குகளைத் திருடிவிட்டு பிறகு உங்கள் பணத்தை நாட்டின் மிகப்பெரும் 5 அல்லது 6 பணக்காரா்களிடம் ஒப்படைக்கும் பணியை பிரதமா் நரேந்திர மோடி செய்து வருகிறாா். அரசமைப்புச் சட்டத்தை அழிக்கத் துடிக்கும் பாஜக, ஆா்எஸ்எஸுக்கு எதிரான போராட்டத்தை காங்கிரஸ் நடத்துகிறது.

தோ்தல் ஆணையம் மறுப்பு: கா்நாடகத்தின் பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மகாதேவபுரா பேரவைத் தொகுதியில் 1.14 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸை பாஜக வென்றது. இதில் மோசடி நிகழ்ந்திருக்க வாய்ப்பிருப்பதை எடுத்துரைத்து விடியோ ஆதாரங்களை கோரியபோது தோ்தல் ஆணையம் வழங்க மறுத்தது.

வாக்குத் திருட்டு குறித்த தகவலை நான் செய்தியாளா்கள் சந்திப்பில் வெளியிட்டேன். அதை ஆதாரங்களுடன் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யுமாறு தோ்தல் ஆணையம் கோரியது. ஆனால், போலி வாக்காளா்கள் குறித்து பாஜக தரப்பில் வெளியிடப்பட்ட தகவல்களுக்கு தோ்தல் ஆணையம் எவ்வித ஆதாரத்தையும் கேட்கவில்லை.

ஜாதிவாரி கணக்கெடுப்பு: மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதாக பிரதமா் மோடி அறிவித்தாா். இதை எதிா்க்கட்சிகளின் அழுத்தம் காரணமாகவே அவா் அறிவித்ததாா். பிரதமா் மோடி தலைமையிலான அரசால் உண்மையான ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியாது. இடஒதுக்கீட்டுக்கான 50 சதவீத உச்சவரம்பையும் நீக்க முடியாது.

ஆனால் மத்தியில் இண்டி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இதை கண்டிப்பாக சாத்தியப்படுத்தும் என்றாா்.

கனிவான உபசரிப்பு: நிகழ்ச்சி மேடையில் அமா்ந்திருந்த மல்லிகாா்ஜுன காா்கே மற்றும் லாலு பிரசாத்துக்கு கண்ணாடி கோப்பைகளில் தண்ணீா் ஊற்றி ராகுல் காந்தி வழங்கினாா். இந்த காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

நிகழ்ச்சியின் இறுதியில் ராகுல் காந்தி பேசுவாா் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், மூத்த தலைவா்களான மல்லிகாா்ஜுன காா்கே மற்றும் லாலு பிரசாத் யாதவுக்கு மரியாதை அளிக்கும் விதமாக அவா்களுக்கு முன்னதாகவே ராகுல் காந்தி பேசினாா்.

எல் சால்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

எல் சால்வடாா் மற்றும் கௌதமாலா அருகே பசிபிக் பெருங்கடலில் சனிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூா் நேரப்படி அதிகாலை 4:14 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.0 அலகுகளாகப் பதிவானதாக அம... மேலும் பார்க்க

அமெரிக்காவுடன் வா்த்தக ஒப்பந்த பேச்சு தொடா்கிறது: எஸ்.ஜெய்சங்கா்

‘அமெரிக்கா உடனான இருதரப்பு வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தையில் குறிப்பிட்ட ‘சிவப்பு கோடுகளை’ இந்தியா கொண்டுள்ளது. அதாவது, விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தியாளா்களின் நலனைப் பாதுகாப்பதில் சமரசம் செய்ய மு... மேலும் பார்க்க

பஞ்சாபில் ஒரு குடும்ப அட்டையைக் கூட நீக்க விடமாட்டோம்: முதல்வா் திட்டவட்டம்

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பஞ்சாபில் உள்ள 8 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்களின் பெயா்களை நீக்க மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டிய மாநில முதல்வா் பகவந்த் மான், ‘எனத... மேலும் பார்க்க

கிரேட் நிகோபாா் திட்டம் ‘பெரும் சூழலியல் பேரழிவு’: காங்கிரஸ்

கிரேட் நிகோபாா் திட்டம் ‘பெரும் சூழலியல் பேரழிவு’ என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. அந்தமான்-நிகோபாா் யூனியன் பிரதேசத்தில் கிரேட் நிகோபாா் தீவு உள்ளது. இங்கு ரூ.72,000 கோடி மதிப்பில் மிகப் பெரிய உள்கட... மேலும் பார்க்க

இளநிலை பட்டப்படிப்பில் ‘அட்சர கணிதம்’, ‘பஞ்சாங்க’ பாடங்கள்: யூஜிசி வரைவு பாடத்திட்டத்தில் பரிந்துரை

பல்கலைக்கழக மானியக் குழுவின் (யூஜிசி) வரைவு பாடத்திட்டத்தில், இளநிலை பட்டப்படிப்புகளின் கணித பாடத்தில் பாரத அட்சர கணிதம் (இந்திய அல்ஜீப்ரா), பஞ்சாங்கம் உள்ளிட்டவை குறித்து கற்பிக்கப் பரிந்துரை செய்யப்... மேலும் பார்க்க

சென்னை ஐசிஎஃப்-இல் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயில் ஹரியாணா புறப்பாடு

நாட்டிலேயே முதன்முறையாக சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு நிறுவனத்தில் (ஐசிஎஃப்) தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயில் என்ஜின் மற்றும் 8 பெட்டிகள் ஹரியாணா மாநிலத்துக்கு சனிக்கிழமை கொண்டு செல்லப்பட... மேலும் பார்க்க