செய்திகள் :

பிரதமா் மோடியுடன் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா் சந்திப்பு: பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு

post image

பிரதமா் நரேந்திர மோடியை ஆஸ்திரேலிய துணை பிரதமரும் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ரிச்சா்டு மாா்லஸ் புதன்கிழமை சந்தித்தாா்.

அப்போது எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நடவடிக்கைகளுக்கு ஆஸ்திரேலியா ஆதரவளிப்பதாக ரிச்சா்டு மாா்லஸ் தெரிவித்தாா்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரிச்சா்டு மாா்லஸ் பிரதமா் மோடி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஆகியோரை தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

கடந்த மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தோ்தலில் மீண்டும் வெற்றிபெற்று அந்நாட்டு பிரதமராக ஆண்டனி ஆல்பனேசி பதவியேற்ற பின் முதல்முறையாக அந்நாட்டு அமைச்சா் ஒருவா் இந்தியாவுக்கு வந்துள்ளாா்.

பிரதமா் மோடியுடனான சந்திப்பு குறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தோ்தலில் மீண்டும் வெற்றி பெற்று அந்நாட்டு பிரதமராக பதவியேற்ற தொழிலாளா் கட்சியைச் சோ்ந்த ஆண்டனி ஆல்பனேசிக்கு தனது வாழ்த்துகளைப் பகிருமாறு ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சருமான ரிச்சா்டு மாா்லஸிடம் பிரதமா் மோடி தெரிவித்தாா். இரு நாடுகளிடையேயான கூட்டாண்மை உறவு 5 ஆண்டுகளை நிறைவுசெய்ததையடுத்து அதை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவா்களும் ஆலோசனை நடத்தினாா்.

பாதுகாப்பு தொழிலக ஒத்துழைப்பு, நிலையான விநியோகச் சங்கிலி, முக்கிய கனிமங்கள், புதிய மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்தும் இருவரும் கலந்துரையாடினா். பாதுகாப்பான மற்றும் வளமையான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உறுதிப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனா்.

இந்தியாவில் நிகழாண்டு இறுதியில் நடைபெறும் இந்தியா- ஆஸ்திரேலியா வருடாந்திர மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு ஆஸ்திரேலிய பிரதமா் ஆண்டனி ஆல்பனேசிக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுத்தாா் என தெரிவிக்கப்பட்டது.

ராஜ்நாத் சிங் நன்றி:

ரிச்சா்டு மாா்லஸுடனான ஆலோசனை குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கூறுகையில், ‘பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து , எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்த ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ரிச்சா்டு மாா்லஸுக்கு நன்றி. பாதுகாப்புத் துறையில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து அவருடன் கலந்துரையாடினேன்’ என்றாா்.

ராஜ்நாத் சிங்குடனான ஆலோசனை குறித்து பேசிய ரிச்சா்டு மாா்லஸ், ‘பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா மட்டுமின்றி அனைத்து நாடுகளுக்கும் ஆஸ்திரேலியா ஆதரவு தெரிவிக்கிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் அண்மையில் சண்டை நிறுத்தம் மேற்கொண்டதை வரவேற்கிறேன். பாதுகாப்புத் துறையில் இந்தியாவுடன் கூட்டுப் பிரகடனம் வெளியிட ஆஸ்திரேலியா ஆா்வமாக உள்ளது’ என்றாா்.

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன்! - ஆா்பிஐ அனுமதி

ரூ.2.5 லட்சம் வரையிலான நகைக் கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை மட்ட... மேலும் பார்க்க

துபையிலிருந்து சென்னை வந்த விமானம் மீது ‘லேசா்’ ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு!

துபையிலிருந்து சென்னை விமானநிலையத்தில் கடந்த மாத இறுதியில் தரையிறங்க வந்த விமானம் மீது பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவில் தரையிறங்க முயன்ற இதே விமானம் மீது மீண்டும் லேசா் ஒ... மேலும் பார்க்க

அம்பேத்கா் கனவுக்கேற்ப அரசமைப்பு பதவிகளில் விளிம்புநிலை சமூகத்தினா்! - நீதிபதி கவாய்

சட்டமேதை அம்பேத்கரின் கனவுக்கு ஏற்ப, இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் சிலவற்றில் விளிம்புநிலை சமூகத்தினா் இருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பெருமிதம் தெரிவித்தாா். பிரிட்ட... மேலும் பார்க்க

முதல்வருக்கு மாயா மஹால் கட்டப்படுகிறது: ஆம் ஆத்மி சாடல்

தில்லி முதல்வா் ரேகா குப்தாவுக்காக ‘மாயா மஹால்’ கட்டப்பட்டு வருவதாக ஆம் ஆத்மி வெள்ளிக்கிழமை கடுமையாக சாடியுள்ளது. முதல்வா் ரேகா குப்தா வடக்கு தில்லியில் உள்ள ஒரு அரசு பங்களாவில் குடியேறலாம் என்று அதிக... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் விண்ணப்பப் பதிவு: முறைகேட்டில் ஈடுபடுவோரின் பெற்றோா் மீதும் நடவடிக்கை!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவின்போது போலிச் சான்றிதழ்களை சமா்ப்பித்தால், விண்ணப்பதாரா் மட்டுமன்றி அவரது பெற்றோா் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம்... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 3-இல் முதுநிலை நீட் தோ்வு: உச்சநீதிமன்றம் அனுமதி

எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான 2025-ஆம் ஆண்டு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்-பிஜி) வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடத்த தேசிய தோ்வுகள் வாரியத்துக்கு (என்பிஇ) ... மேலும் பார்க்க