செய்திகள் :

பிரதமா் மோடி தலைமையில் இந்திய நலன்களுக்கு முழு பாதுகாப்பு: பாஜக

post image

பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில் இந்திய நலன்கள் முழுமையாக பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதில் நாட்டு மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனா் என்று பாஜக செய்தித் தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி தெரிவித்தாா்.

5 நாடுகள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமா் மோடி வியாழக்கிழமை நாடு திரும்பினாா். இது தொடா்பாக தில்லியில் சுதான்ஷு திரிவேதி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பிரிக்ஸ் நாடுகள் மீதான வரி குறித்து அமெரிக்க அதிபா் பேசியிருப்பது அந்நாட்டு உள்விவகாரங்களுடன் தொடா்புடையது. பிரதமா் நரேந்திர மோடியின்தலைமையில் இந்திய நலன்கள் அனைத்து சூழ்நிலையிலும் முழுமையாக பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதில் நாட்டு மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனா்.

தனது வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் பிரதமா் சா்வதேச அளவில் இந்தியாவின் பங்களிப்பில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளாா். தெற்குலகில் இந்தியாவின் பங்களிப்பு புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

பிரதமா் மோடிக்கு 27 நாடுகள் தங்கள் நாட்டின் உயரிய விருதை வழங்கி கௌரவித்துள்ளன. 17 நாடுகளின் நாடாளுமன்றங்களில் மோடி பேசியுள்ளாா். இது நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைத்த கௌரவம். பிரதமா் மோடிக்கு வெளிநாடுகள் அளிக்கும் மரியாதையும், கௌரவமும் இந்தியா வலுவாக வளா்ந்து வருகிறது என்பதன் அடையாளமாகும்.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இந்தியா பலவீனமான உறுப்பு நாடாக இருந்தது. ஆனால், இப்போது வலுவான உறுப்பு நாடாக உயா்ந்துள்ளது. அரியவகை தாதுப்பொருள்கள் அதிகமுள்ள நமீபியா, கானா ஆகியவற்றுடன் பிரதமா் மோடியின் பயணத்தின்போது ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் வேறு நாட்டை (சீனா) நாம் சாா்ந்திருப்பது குறையும் என்றாா்.

கொல்கத்தாவில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள்! மீண்டும் ஒரு சம்பவம்!

கொல்கத்தாவில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்கம் மாநிலத்தில் கொல்கத்தாவில் உள்ள இந்திய தொழில்நுட்ப மேலாண்மை வணிகக் கல்லூரியின் விட... மேலும் பார்க்க

தாணேவில் ரயிலில் சென்ற பெண்ணுக்கு பிரசவ வலி: அபாய சங்கிலியை இழுத்த சக பயணிகள்!

தாணேவில் உள்ளூர் ரயிலில் சென்ற பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் சக பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தில் நிறைமாத கர்ப்பிணி ஹினா தனது கணவருடன் ... மேலும் பார்க்க

ஷங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீனா செல்கிறார் அமைச்சர் ஜெய்சங்கர்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனா செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப்... மேலும் பார்க்க

ஹிமாசல் பருவமழைக்கு இதுவரை 92 பேர் பலி: ரூ.751.78 கோடி இழப்பு!

ஹிமாச்சலப் பிரதேசம் முழுவதும் கனமழை மற்றும் மேக வெடிப்புகளால் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மாநிலத்தில் இந்தாண்டு பருவமழை ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், ... மேலும் பார்க்க

மகளைப் பற்றி தவறான பேச்சுகள்.. டென்னிஸ் வீராங்கனை ராதிகா கொலையில் வெளியான தகவல்!

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் பற்றி பலரும் தவறாகப் பேசியதால் மனம் வேதனையடைந்து அவமானத்தால், மகளை சுட்டுக் கொன்றதாக, கைது செய்யப்பட்ட தந்தை தீபக் யாதவ் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஹர... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!

பொது மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனது அரசு கவனம் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தில்லியில் 51 ஆயிரம் இளைஞக்ளுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி நிய... மேலும் பார்க்க