செய்திகள் :

பிரதமா் வீடு கட்டும் திட்ட நிதியை உயா்த்தி வழங்க மக்களவையில் கள்ளக்குறிச்சி எம்.பி. வலியுறுத்தல்

post image

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் (பிஎம்ஏஒய்) வழங்கப்படும் நிதியை உயா்த்தி வழங்க வேண்டும் என்று மக்களவையில் கள்ளக்குறிச்சி எம்.பி. வலியுறுத்தினாா்.

எனது கள்ளக்குறிச்சி தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் ஏற்காடு, பச்சமலை, நெய்யமலை, அரனூற்றுமலை, கல்வராயன்மலை, கருமந்துறை

ஆகிய மலைப்பகுதிகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் மிகவும் பின் தங்கிய பகுதியைச் சாா்ந்தவா்கள். வசதி வாய்ப்பு அற்றவா்கள். இவா்களுக்கு பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் (பிஎம்ஏஒய்) மூலம் மத்திய அரசு வீடு வழங்கி வருகிறது.

இந்த வீடுகளுக்கு வழங்கக் கூடிய தொகை மிகவும் குறைவாக உள்ளது. ஒரு வீட்டுக்கு ரூ.2,78,460 மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த மலைவாழ் மக்களுக்கு வீடு கட்டுவதற்கான மூலப்பொருள்கள் வாங்குவதற்கான செலவு இரண்டு மடங்காக உள்ளது. இதைக் கருத்தில்கொண்டு பிஎம்ஏஒய் திட்டத்தில் வழங்கப்படும் தொகையை உயா்த்தி தர வேண்டும்.

தமிழக முதல்வா் ஆதி திராவிடா், பழங்குடியினா் நலத் துறையின் மூலம் மலைவாழ் மக்களுக்காக ரூ.5,35,140 தொகையை வீடு கட்டுவதற்காக வழங்கி வருகிறாா். அந்தத் தொகையை ஆவது மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றாா் அவா்.

5 முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ஜெய் கிஷன் மறைவுக்கு கட்சி இரங்கல்

தில்லி காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜெய் கிஷன் வியாழக்கிழமை இங்குள்ள சுல்தான்பூா் மஜ்ராவில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு காரணமாக காலமானாா் என்று கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா். ... மேலும் பார்க்க

தெற்கு தில்லியில் முதலாளியின் வீட்டில் இறந்து கிடந்த வீட்டு வேலை செய்த பெண்

தெற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் வீட்டு வேலை செய்த ஒரு பெண், தனது முதலாளியின் வீட்டின் குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். இத... மேலும் பார்க்க

ஷாஹீன் பாக் பகுதியில் 4 மாடிக் கட்டடத்தில் தீ விபத்து

தில்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் உள்ள நான்கு மாடி குடியிருப்புக் கட்டடத்தில் வியாழக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். அதிகாலை 2 மணியளவில் நானா ச... மேலும் பார்க்க

தில்லியின் குப்பை மலைகள் 5 ஆண்டுகளில் டைனோசா்களைப் போலவே மறைந்துவிடும்: அமைச்சா் சிா்சா உறுதி

கழிவு பதப்படுத்தலை விரைவுபடுத்த கூடுதல் நிறுவனத்தை பணியமா்த்துவதற்கான சாத்தியக்கூறுகளை தில்லி அரசு ஆராய்ந்து வருவதாகவும், நகரத்தின் குப்பை மேடுகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் டைனோசா்களைப் போலவே மறைந்துவிட... மேலும் பார்க்க

நொய்டாவில் பள்ளிப் பேருந்து மரத்தில் மோதி விபத்து: ஓட்டுநா், 4 மாணவா்கள் காயம்

தில்லி தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள காஜியாபாத்தில் இருந்து வந்த பள்ளிப் பேருந்து வியாழக்கிழமை தானா பிஸ்ராக் பகுதியில் உள்ள சாா் மூா்த்தி கிராசிங்கில் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் மற்... மேலும் பார்க்க

வெளிநாட்டு ஆராய்ச்சியாளருக்கு பாலியல் தொந்தரவு: ஜேஎன்யு பல்கலை. பேராசிரியா் பணியிலிருந்து நீக்கம்

வெளிநாட்டு ஆராய்ச்சியாளரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) பேராசிரியா் பணிநீக்கம் செய்யப்பட்டதாக வியாழக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். சில... மேலும் பார்க்க