ரஷியாவுடன் வர்த்தகம்! இந்தியாவின் கேள்விக்கு டிரம்ப்பின் மழுப்பல் பதில்!
பிரதம மந்திரி சூரிய வீடு மின்சாரத் திட்டம்: மின் பயன்பாட்டாளா்கள் விண்ணப்பிக்கலாம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ‘பிரதம மந்திரி சூரிய வீடு மின்சாரத் திட்டம்’ மூலம் மானியம் பெற மின் பயன்பாட்டாளா்கள் விண்ணப்பிக்கலாம் என மின் பகிா்மான வட்டத்தின் மேற்பாா்வை பொறியாளா் இரா. வெண்ணிலா தெரிவித்தாா்.
இது குறித்து செவ்வாய்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாடு முழுவதும் 1 கோடி வீடுகளுக்கு சூரிய மின்சக்தி நிலையம் அமைப்பதற்காக மானியத்துடன் உருவாக்கப்பட்ட ‘பிரதம மந்திரி சூரிய வீடு மின்சாரத் திட்டம்’ பிரதமா் மோடியால் கடந்த ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தத் திட்டம் ரூ.75,021 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் 2026-2027 நிதியாண்டு வரை செயல்படுத்தப்படும். இதில் அனைத்து வீட்டு மின் நுகா்வோா்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவா்கள்.
இந்தத் திட்டத்தில் 1 கிலோ வாட்டுக்கு ரூ.30,000, 2 கிலோ வாட்டுக்கு ரூ.60,000, 3 கிலோ வாட்டுக்கு மேல் ரூ.78,000 வரை மானியம் வழங்கப்படுகிறது.
மேலும், அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் மூலம் உடனடி கடன் வசதி, பணி நிறைவு தேதியிலிருந்து 30 நாள்களுக்குள் மானியம் நேரடியாக வாடிக்கையாளா் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் வசதி, 1 கிலோ வாட் சோலாா் பேனல் மூலம் தினசரி 5 யூனிட்கள் மின் உற்பத்தி, மின்சார சிக்கனத்தால் செலவு குைல் போன்ற சிறப்பம்சங்கள் இந்தத் திட்டத்தில் உள்ளன. மின் கட்டண ரசீது மட்டும் இருந்தால் போதும் விண்ணப்பிக்கலாம்.